பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்123

                            மங்கைபாகனுதவிய,
வுரனுடையதண்டினாலிவ்வபிமனையுயிர்கவர்த
                           லின்றுசாலவுறுதியே.

     (இ-ள்.) 'அரன் முடி அணிந்த தாமம் இதுஎன - சிவபிரான் திருமுடியில்
தரித்த மாலை இதுவென்று, அடி கொடு கடந்து போகவெருவுவர் - (வீமனும்
அபிமனும் தமது) கால்களால் (அதனைத்) தாண்டிச்செல்ல அஞ்சுவார்கள்;
(அச்சமயத்தில்) பரவைநிகர் நம்பதாதி-கடல்போன்ற நமது சேனையிலுள்ள,
அவனிபர் பலருடன்- அரசர்கள் அநேகருடனே, வளைந்து கோலி-இடைவிடாமற்
சூழ்ந்து, அமரிடை- போரில், வரம் உற வணங்கு நாளில் மங்கைபாகன் அருள்
செய்து மனம் மகிழ உதவிய உரன் உடைய தண்டினால்-வரம்பெறும்படி
வணங்கியகாலத்தில் சிவபிரான் கருணைசெய்து மனம்மகிழ (உனக்கு)க்கொடுத்த
வலிமையுள்ள கதாயுதத்தால், இஅபிமனை உயிர் கவர்தல்-இந்தஅபிமந்யுவைக்
கொல்லுதல், இன்று சால உறுதிஏ-இப்பொழுது மிகநன்மைதரும் உபாயமாம்;'
(எ -று.)

     மங்கைபாகன் - உமாதேவியை (இட)ப்பக்கத்தி லுடையவன், எப்பொழுதும்
மங்கைப்பருவத்தையே உடைமையால், உமாதேவி 'மங்கை' எனப்பட்டாள். உறுதி-
காரியவாகுபெயர். ஏ தேற்றம்.

49.-சயத்திரதனும் துரியோதனன் கூறிய உபாயத்தைச்செய்ய உடன்
பட்டு, சிவபெருமானருளிய கொன்றைமாலையை யெறிதல்.

எனவிவன்மொழிந்தபோ திலவனிவனிணையடி வணங்கியாது
                                     நினைவினி,
யுனதுநினைவெஞ்சிடாம லபிமனையுயிர்கவர்வ னென்று
                                தேறவுரைசெய்து,
கனகதருமன்றன் மாலையெனவொளிர்கடியிதழி
                         யந்தண்மாலை பரமனை,
மனனுறவுணர்ந்து, நாவினிகழ்தரு மறையொடுவளைந்து
                                 விழவெறியவே.

     (இ-ள்.) என -என்று, இவன் -துரியோதனன்-மொழிந்த போதில்-
சொன்னபொழுதிலே,-அவன்-சயத்திரதன், இவன் இணை அடி வணங்கி-
துரியோதனனது, உபயபாதத்தை நமஸ்கரித்து, 'யாது நினைவு-(வேறு)என்ன
எண்ணம்உள்ளது? (ஒருசிந்தையும் பட வேண்டுவதில்லை); இனி-இப்பொழுதே,
உனதுநினைவு எஞ்சிடாமல்-உன்கருத்துக்குக் குறையுண்டாகாதபடி, அபிமனை
உயிர்கவர்வன்-அபிமந்யுவைக் கொல்வேன்,' என்று-, தேற -(துரியோதனன்)
மனந்தெளியும்படி, உரைசெய்து-சொல்லி,-(சயத்திரதன்),-பரமனை - (எல்லாரினுஞ்)
சிறந்த சிவபிரானை, மனன் உற  உணர்ந்து - மனத்திலே பொருந்தத் தியானித்து,
கனக தரு-பொன் மயமான கற்பகவிருட்சத்து மலர்களினாலாகிய, மன்றல் -
பரிமளமுள்ள, மாலைஎன - மாலைபோல, ஒளிர் - விளங்குகிற, கடி -
வாசனையையுடைய, அம் - அழகிய, தண் - (தேனினாற்) குளிர்ந்த, இதழி மாலை -
கொன்றைப்பூமாலையை, நாவில் நிகழ்தரு மறையொடு - நாக்கில் உச்சரிக்கப்படுகிற
மந்திரத்துடனே, வளைந்து விழ எறிய- (அபிமன்தேரைச்) சூழ்ந்துவிழும்படிவிசிப்
போகட,-(எ-று.)- "எறிதொடையல்வளைந்து சூழவருதலும்" என அடுத்தகவியோடு
தொடரும்.