பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்125

     (இ-ள்.) பரிசன குமாரன்-வாயுகுமாரனான வீமன், விடும்-(தான்)
பிரயோகிக்கிற, எரி கணைகளால்-உக்கிரமான அம்புகளால், முடுகு தரியலர்
பதாதி படை -விரைந்துபோர்செய்த பகைவர்களது சேனைக்கூட்டம், நெரியவரு
காலையிலே-சிதையமீளுகிற பொழுதிலே,-(எ - று.)-" என்று குறுகலும் என வருங்
கவியோடுஇயையும்.

     எரிகணை - பகைவரையழிக்கும் அம்பும், விளங்குகிற அம்பும், நெருப்பில்
வைத்து வடிக்கப்பட்ட அம்புமாம்: வினைத்தொகை. பதாதிபடை - நிலைமொழி
வடமொழியாதலின், இயல்பு.

     இதுமுதல் இருபத்தெட்டுக் கவிகள் - பெரும்பாலும் இரண்டு சீர்களும்
விளங்காய்ச்சீர்களாகியகுறளடி நான்குகொண்ட வஞ்சித் துறைகள். இவற்றிற்
சிறுபான்மை மாச்சீர்களும் வந்துள்ளன.                           (189)

52.விறலபிமனின்றகள, முறுதுமினியென்றுநனி
குறுகலும்விலங்கியது, நறையிதழியந்தொடையே. 

     (இ-ள்.) 'விறல் - வெற்றியையுடைய அபிமன்-, நின்ற- பொருந்தின, களம் -
இடத்தை, இனி -இப்பொழுது, உறுதும்- (நாம்) அடைவோம்,' என்று-என்று எண்ணி,
(வீமன்), நனி குறுகலும் - மிகச்சமீபித்தவளவிலே,-நறை-வாசனையுடைய,அம்-
அழகிய, இதழிதொடை - கொன்றைப்பூமாலை, விலங்கியது -குறுக்கிட்டது;(எ-று.)

     நறை - தேனுமாம்; இதனை 'ஐ' விகுதிபெற்ற பண்புப்பெயரென்னலாம் ஈற்று
ஏகாரத்தை இங்குப் பிரிநிலை யென்னலாம்.                           (190)

53.இன்றமரின்யாருமுயிர், பொன்றிடினுமீசனணி
கொன்றைகடவேனெனமுன், னின்றனனராதிபனே,

     (இ-ள்.) (அதுகண்டு), நர அதிபன் -வீமராசன், 'இன்று-இன்றைக்கு, அமரின்
போரில், யார்உம் -எல்லோரும், உயிர்பொன்றிடின்உம் - உயிரழிவாரானாலும்,(யான்),
ஈசன் அணி கொன்றை - சிவபிரான் தரித்த கொன்றைப்பூமாலையை, கடவேன் -
தாண்டமாட்டேன்,' என - என்றுகருதி, முன் நின்றனன்-முன்னே நின்றுவிட்டான்:
(எ - று.)

     இங்ஙனங் கூறியதனால், வீமனது சிவபக்தி மிகுதி விளங்கும். கொன்றை -
அதன் மலர்மாலைக்கு இருமடியாகுபெயர்.                            (191)

54.- அபிமனுக்குத் தான் உதவாமைக்கு வீமன் நொந்து கூறலுறுதல்.

முந்துவடிவாளமரின், வந்தணுகுவான்மதலை.
நிந்தனைகொலாமிதென, நொந்துசிலகூறினனே.

     (இ-ள்.) 'முந்து - சிறந்த, வடி வாள் அமரின் - கூர்மையான
ஆயுதங்களைக்கொண்டு செய்யும்போரில், வந்து அணுகுவான் -
வந்துநெருங்கியுள்ளவன், மதலை-குமாரனான அபிமன்: இது-அவனுக்கு யான்
உதவியாகாத) இத்தன்மை, நிந்தனை ஆம்-பழிப்புக்குக் கார