ணமாம்,' என - என்று எண்ணி, நொந்து- வருந்தி, (வீமன்), சில கூறினன் - சில(கோபவார்த்தைகளைக்) கூறுபவனானான்; (எ - று.) - அவற்றை, நோக்கி மேல்மூன்றுகவிகளிற் காண்க. நிந்தனை இது-காரணம் காரியமாக உபசரிக்கப்பட்டது. கொல்- அசை. பி-ம்:முந்தமுடிவானமரில். (192) 55.- மூன்றுகவிகள் - வீமன் நொந்து கூறியமையைத் தெரிவிக்கும். இந்தமதுமாலையிடை, தந்தபிமனாருயிரை யுந்தியிடவோவெளிது. சிந்துபதிசேவகமே. |
(இ-ள்.) சிந்து பதி சேவகம்-சிந்துதேசத்தரசனது வீரம்,- இந்த மது மாலை இடைதந்து- தேனையுடைய இக்கொன்றைப்பூ மாலையை நடுவிலே போகட்டு, அபிமன் ஆர் உயிரை உந்தியிடஓ- (தனிப்பட்ட) அபிமந்யுவின் அருமையான உயிரைப் போக்கிவிடுதற்கோ (வல்லது)? எளிது - (அவ்வீரம்) எளிமையையுடையது: (எ - று.)-எளிமை - இகழப்படுந்தன்மை; தாழ்வு தருமயுத்த மாகவன்றி வேறுசூழ்ச்சிசெய்து கடவுள்மாலையைக் குறுக்கிடுவித்துத் துணையில்லாதபடி தனிப்படுத்திக் கொல்லமுயலுதல் பழிக்கத் தக்க தென்றதாம். (193) 56. | விரகுபடவெப்பொழுது, முரணமர்தொடக்கும்வலி யுரகதுவசற்கொழிய, வரசரிலெவர்க்குளதோ. |
(இ-ள்.) 'எப்பொழுதும்-, விரகு பட-வஞ்சனையாக, முரண் அமர் தொடக்கும் - மாறுபட்ட போரைத் தொடங்கிச்செய்கிற, வலி-வலிமை, உரக துவசற்கு ஒழிய - பாம்புக்கொடியனான துரியோதனொருவனுக்கே தவிர, அரசரில் எவர்க்கு உளதுஓ- அரசர்களில் வேறுயார்க்கேனும் உள்ளதோ? (எ- று.) 'உரகதுவசன்'-கொடுமையை விளக்குகிற சாபிப்பிராயவிசேடியம்: கருத்துடையடைகொளியணி: பரிகராங்குராலங்காரம். (194) 57. | தன்மகனையுஞ்சமரில், வன்மையொடுகொன்றொழிய மன்முனைதிரண்டிடினு, மென்மகனிறந்திடுமோ. |
(இ-ள்.) மன் - (பல) அரசர்கள், முனை - போர்க்களத்தில், திரண்டிடின் உம் -கூட்டம்கூடி எதிர்த்துப்போர்செய்தாலும், என் மகன் - எனது புத்திரனான அபிமன்,தன் மகனைஉம் சமரில் வன்மையோடு கொன்றுஒழிய - அத்துரியோதனனுக்குக்குமாரனான இலக்கணனையும் போரில் வலிமையாற் கொன்றாலன்றி, இறந்திடும்ஓ -இறந்திடுவானோ? (எ - று.)-பி - ம்: மடிந்திடுமோ. இங்ஙனம் கூறியதனால் அபிமனது பல பராக்கிரம விஷயத்தில் வீமனுக்கு உள்ள நம்பிக்கை வெளியாம் தம்பிமகனிடத்தில் அபேதமாகவுள்ள அபிமானத்தால், 'என்மகன்' என்றான். 'தன் என்றது படர்க்கை யாதலால், இங்கே, துரியோதனனைக் குறித்தது; (இது, வடமொழியில் ஸர்வநாம சப்தங்களுள் ஒன்றாம்.) மன் - சாதிப்பெயராய், இராசசமூகத்தை உணர்த்தியது. (195) |