பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்131

முகனென வேறோரரசனுள னெனக்கொண்டால், தலைதுணிபட்டு விழுந்தா
னென்னலாம்.                                            (210)

73. - நான்குகவிகள் - அபிமனோடு சல்லியனும் அவன் மகனும்
பொருகையில் மகனிறக்கத் தந்தை புறங்கொடுத்தமை கூறும்.

சித்திரவில்வீரனெனு, மந்திரர்பிரானும்
புத்திரரிலாதியுரு, மித்திரனும்வந்தார்.

     (இ-ள்.) சித்திரம் வில் வீரன் எனும் - அழகிய வில்லில் (சிறந்த)
வீரனெனப்படுகிற, மத்திரர் பிரான்உம்-மத்திரதேசத்தார்க்கு அரசனான சல்லியனும்,
புத்திரரில்-(அவனது) மக்களுள், ஆதி - முதல்வனான, உருமித்திரன்உம் -
உருமித்திரனென்பவனும், வந்தார் - (எதிர்த்து) வந்தார்கள்; (எ - று.)

     துணைவரோடும் புத்திரரோடும் போர்புரி சேனையோடும், மத்திரபதி
சுயோதனன் சூழ்ச்சியால் அவனுக்குப் படைத்துணையாயினான் ஆதலால்,
சல்லியபுத்திரனும் துரியோதனன்பக்கத்தவ னாவன்.

74.வந்தபிமனோடமரின், முந்தியிருவோருஞ்
சிந்துகணைமாரிகளி, னந்தரமடைத்தார்.

     (இ-ள்.) வந்து-, அபிமனோடு-, அமரில் முந்தி-போரில் முற்பட்டு,
இருவோர்உம் -அவ்விரண்டுபேரும், சிந்து கணை மாரிகளின் - (தாம்) சொரிந்த
அம்புமழைகளால்,அந்தரம் அடைத்தார் ஆகாயத்தை மறையச்செய்தார்கள்;
(எ-று.) -பி - ம்:மறைத்தார்.                                     (212)

75.அவரவரெடுத்தவிரு, தவருநடுவெட்டா
விவர்கணைவிலக்குவன, கவர்கணைதொடுத்தான்.

     (இ-ள்.) (உடனே அபிமன், தன் அம்புகளால்), அவர் அவர் எடுத்த இரு
தவர்உம்- இவ்விரண்டுபேரும் எடுத்துவந்த இரண்டு விற்களையும், நடு வெட்டா -
நடுவிலேதுண்டித்து, இவர் கணை விலக்குவன - இவர்களது அம்புகளைத்
தடுப்பனவான,கவர் கணை (பகைவருயிரைக்) கவரவல்ல அம்புகளை,
தொடுத்தான்-(இவர்கள்மேற்)பிரயோகித்தான்; (எ-று.)-கவர்கணை - நுனியிலே
பிளப்புள்ள அம்பும், ஒன்றுபலவாகும் அம்புமாம்.                   (213)

76.மைந்தனொருவாளியினி, லந்தரமடைந்தா
னொந்துபலவாளியொடு, தந்தைபுறகிட்டான்.

     (இ-ள்.) (அப்பொழுது), மைந்தன் - சல்லியபுரத்திரன், ஒரு வாளியினில் -
(அபிமனது)அம்புஒன்றால், அந்தரம் அடைந்தான்- வீரசுவர்க்கஞ் சேர்ந்தான்
[இறந்தான்]:(பின்பு), தந்தை - அவன் தந்தையான சல்லியன், நொந்து-
(புத்திரசோகத்தால்)வருந்தி, பல வாளியொடு- (தன்மேல் தைத்த) அநேக
பாணங்களுடனே,புறகுஇட்டான் - முதுகுகொடுத்தான்; (எ - று.)        (214)

77.- அபிமனது உறுதிநிலைமைகண்ட மகாரதர்பலர் உடைந்துபோதல்.

வென்றபிமன்வாளமரி, னின்றநிலைகண்டே
யொன்றுபடமாவிரதர், சென்றனருடைந்தே.