ஒப்புமையாதலும் ஏற்கும். விழிகடை நிமிர்தர் 'கோபத்தோடு கடைக்கண்களால் உறுக்கிவிழித்துப்பார்த்தல். நெறி கடைப் புருவம் மிகமுரிதல் - கோபத்தாற் புருவத்தை மிகுதியாக நெறித்தல். மொகுமொகுத்தல் - ஈரடுக்கு ஒலிக்குறிப்பு; இரட்டைக் கிளவி. (224) 87. | ஞெலிமரத்தினுமனனெரியெழவெழநிருபர்விட்டனகசரத துரகமு, மெலிவெழப்பிறகிடவுநின்னொருதனிவிறல்குறித்திரதமு மெதிர்கடவினை, யொலிபடுத்தெதிர்வரின்விரிசுடரெதிருலவுவிட்டி லினுயிரழிகுவையென, வலியுறுத்தினனவனிபன்மதலையைவலியவச் சிரன்மதலைதன்மதலையே. |
(இ-ள்.) ' ஞெலி மரத்தின்உம் - அரணிக்கட்டையினின்று உண்டாவதனினும், மனன் எரி எழ எழ-மனத்தில் கோபாக்கினி மிகுதியாக உண்டாக, நிருபர் - அரசர்கள், விட்டன-(எதிர்) செலுத்தினவையான, கச ரத துரகம்உம் - யானைகளும் தேர்களும் குதிரைகளும் (எல்லாம்), மெலிவு எழ - தளர்ச்சிமிக, பிறகு இடஉம்- பின்னிட்டுஓடவும், (நீ), நின் ஒரு தனி விறல் குறித்து-(துணையில்லாமல்) தனிப்பட்ட நின் ஒருத்தனது வலிமையை நன்குமதித்துக்கொண்டு, இரதம்உம் எதிர் கடவினை - தேரையும் (என்) எதிரிற் செலுத்தினாய்; (இங்ஙனம்), ஒலி படுத்து எதிர் வரின் - ஆரவாரத்தை மிகுதியாகச்செய்து எதிரில்வந்தால், விரி சுடர் எதிர் உலவு விட்டிலின்- பரவியெழுகிற விளக்கி னெதிரிற்பட்ட விட்டிலென்னுஞ்சிறுபறவை போல உயிர்அழிகுவை - இறப்பாய், என- என்று, அவனிபன் மதலையை - துரியோதனராசன்மகனான இலக்கணனை (நோக்கி), வலிய வச்சிரன் மதலைதன் மதலை -வலிமையையுடைய வச்சிராயுதத்தையுடைய இந்திரனது மகனான அருச்சுனனுடைய புத்திரனாகிய அபிமன், வலி உறுத்தினன்-வலிமையோடு உறுத்திக்கூறினான்: (எ-று.)-இது - அபிமனுடைய வீரவாதம். ஞெலிமரம் - தீக்கடைந்தெடுக்கப்படும் மரம்; "அரணி ஞெலி கோல் ஞெகிழிதீக்கடைகோல்" என்பது பிங்கலந்தை; "தீயைத்தரு கோலே ஞெலிகோ லென்ப" என்றநிகண்டுங் காண்க. விட்டில்-பறந்து விளக்கில் வீழ்ந்து அழிவதொரு செந்து. (225) 88. | இவனுமப்பொழுதெதிரொலியெனநனியிகலருச்சுனன்மத லையையுனதுயி., ரவனிபர்க்கெதிர்கவருவனொருநொடியளவையிற் பொருதெனமுனையணுகினன், சிவன்வளைத்தபொன்மலையினும்வலியினசிலைவளைத் தனரிருவருமெறிதரு, பவனன்மைக்கடல்வடவையைமுனிதருபவனமொத்ததுபடுகள முழுதுமே. |
(இ-ள்.) இவன்உம் - இலக்கணனும், அப்பொழுது-, எதிர் ஒலி என - பிரதித்தொனிபோல, நனி - மிகுதியாக, இகல் அருச்சுனன் மதலையை-வலிய அருச்சுனனுக்குக் குமாரனான அபிமனை (நோக்கி), '(யான்), பொருது - போர் செய்து,ஒருநொடி அளவையில்- ஒருகைந் நொடிப்பொழுதினுள்ளே, உனது உயிர் - உன்உயிரை, அவனிபர்க்கு எதிர்- அரசர்களெதிரில், கவருவன் - வாங்கிவிடுவேன்,' என- என்று (வீரவாதஞ்) சொல்லிக்கொண்டு, முனை அணுகினன்- |