(இ-ள்.) சினவு சிங்கம் ஒத்து- கோபித்து (இரண்டு) சிங்கங்கள் போன்று, இருவர்உம்-(அபிமன் சயத்திரதன் என்னும்) இரண்டு பேரும், முறை முறை திருகி- மாறிமாறி(க்கதை) சுழற்றி, வெம் செரு புரிதலின்-கொடிய போரைச் செய்தலால், எழும் -உண்டான, ஒலி-ஓசை,-கனல் வளைந்து கட்டு-காலக்கினியாற் சூழ்ந்து எரிக்கப்பட்டு,அனிலம்உம் எறி தரு-காற்றும் வீசப்பெற்ற, கடல்-, அதிர்ந்து என- முழங்கினாற்போலவும், கனம்-மேகங்கள், அதிர்வன என-முழங்குவனபோலவும்,- மினல் பரந்து எழு-மின்னல் பரவிக் காணப்படுமாறும், திசைகளின் முடிவு உற - திக்குக்களின் எல்லையை அளாவ, வெடி கொடு-வெடித்தலைக் கொண்டு, அண்ட பித்திஉம்-அண்டகோளத்தின் சுவர்களும், உடைதர-உடையுமாறும்,-எழ- மிக்கொலிக்க,-மனம் அழன்று-மனங்கொதித்து, பொன் கிரி நிகர் தம் புயம் வலிமைகொண்டு-மேருமலையை யொத்த தங்கள் தோள்களின் வலிமையினால், வயம் மலிய - வெற்றி மிக, உடற்றினர்-போர் செய்தார்கள்; (எ - று.) பி-ம்: கட்டனிலமும். வெடிகொள். ஒலிஎழ என இயையும். மின்னல்பரந்துஎழுதலும் அண்ட பித்தியுடைதலும், ஆரவாரமிகுதிபற்றிய அதிர்ச்சியாலாகும். (259) 122.-அபிமன் வெற்றிபடக் கதாயுத மெறிந்தமை. உரியசிந்துவுக்கரசனதிருபுயமொடியவென்புநெக் குடன்முரி தரவுட, னெரியவெங்குடர்க்கொடிநெடுவளையமுநிமிரவன்றொ டைப் புடைமிடைநடையுற, வரியகண்கனற்பொறியெழமணிமுடியழகழிந்துபொற்பிதிர் படவுதிர்பட, வெரியெழுஞ்சினத்தொடுதனதொருகையினிலகுதண்ட மிட்டிகலுடனெறியவே. |
இதுமுதல் நான்கு கவிகள் - குளகம். (இ-ள்.) சிந்துவுக்கு உரிய அரசனது - சிந்துதேசத்துக்கு உரிமையையுடைய அரசனான சயத்திரதனது, இரு புயம் - இரண்டு தோள்களும், ஒடிய - ஒடியவும், என்பு நெக்கு - எலும்புகள் நொருங்கி, உடன் முரிதர - உடனே பின்னப்படவும், உடல் நெரிய-உடம்பு நசுங்கவும், வெம் குடர் நெடு கொடி வளையம்உம் -கொடிய குடலாகிய நீண்ட கொடிச்சுற்றும், நிமிர-(அத்தன்மைநீங்கி) நீட்சியடையவும், வல் தொடை புடை-வலிய தொடைகளினிடம், மிடை நடை உற-(ஒன்றோடொன்று) நெருங்கிய தோற்றத்தையடையவும், அரிய கண்- அருமையான கண்களினின்று, கனல் பொறிஎழ-தீப்பொறி கிளம்பவும், மணி முடி-இரத்தினங்கள் பதித்த கிரீடம், அழகு அழிந்து-, பொன் பிதிர்பட உதிர்பட - பொற்பொடிகள் மயமாக உதிரவும், (அபிமன்), எரி எழும் சினத்தொடு - தீப்பற்றி யெழும்படியான கோபத்துடனே, தனது ஒரு கையின் இலகு தண்டம் இட்டு-தனது ஒன்றாகிய கையிலே விளங்குகிற கதாயுதத்தை வீசி, இகலுடன் எற்றிய - வலிமையோடுதாக்க,- (எ - று.)- "சிந்துவுக்கரசனுங் கதையெறிய" என அடுத்த கலியோடு தொடரும். பி - ம்: முரிதரவுரம். |