'சிந்துவுக்கரசனது' என்பதை, என்பு முதலிய ஆறனொடுங் கூட்டுக. தொடைப்புடை - தொடைகள் மோதுகின்ற என்றலும் ஒன்று. இப்பாட்டில் டகரம் பலவிடத்துவந்தது, 'விருத்தியநுப்பிராசம்' என்னுஞ் சொல்லணி; அதாவது- எழுத்துஒன்றேனும் பல வேனும் இடையிட்டுப் பல்கால் வருவது. (260) 123.- சயத்திரதன் கதாயுதத்தால் எதிர்தாக்கினமை. வசையறும்புகழ்க்குருகுலதிலகனைமருதிரண்டொடித்தவர்திரு மருகனை, விசயன்மைந்தனைப்பணைமுகின்மிசைவருவிபுதர்தங்குலத் ததிபதிபெயரனை, யசைவில்வன்றிறற்பகைமுனைநிருபரையடைய வென்றகட்டழகுடையபிமனை, யிசைகொள்சிந்துவுக்கரசனுமொருகதையிருகைகொண்டெடுத்தி கலுடனேறியவே. |
(இ-ள்.) வசை அறும்-பழிப்பு இல்லாத, புகழ் - கீர்த்தியையுடைய, குரு குலதிலகனை - குருவென்னும் அரசனது குலத்துக்கு நெற்றித்திலகம் போல அழகுசெய்பவனும், மருது இரண்டு ஓடித்தவர் திரு மருகனை - இரட்டைமருதமரங்களை முறித்த கண்ணபிரானுக்குச் சிறந்த மருமகனும், விசயன் மைந்தனை - அருச்சுனனுக்குப் புத்திரனும், பணை முகில்மிசை வரு - பருத்த மேகமாகிய வாகனத்தின்மேல் வருகிற, வீபுதர்தம் குலத்து அதிபதி - தேவர்களுடைய கூட்டத்துக்குத் தலைவனான இந்திரனுக்கு, பெயரனை - பௌத்திரனும், அசைவு இல்-சோர்தலில்லாத, வல் திறல்-கொடியவலிமையையுடைய, பகை நிருபரை அடைய-பகைவர்களான அரசர்களையெல்லாம், முனை-போரில், வென்ற - சயித்த, சுட்டு அழகு உடை - நிறைந்த அழகையுடையவனு மாகிய, அபிமனை - அபிமந்யுவை, இசை கொள் சிந்துவுக்கு அரசன்உம் - கீர்த்தியைக்கொண்ட சிந்து தேசத்துக்கு அரசனான சயத்திரதனும், ஒரு கதை இரு கைகொண்டு எடுத்து - ஒப்பற்ற (தன்) கதாயுதத்தை இரண்டு கைகளாலும் எடுத்து, (அதனால்), இகலுடன் எறிய - வலிமையோடு தாக்க,- (எ-று.)- "களிறனையவன்***முதுகுகண்டபின்" என வருங்கவியோடு தொடரும். (261) 124,- அபிமன் கதாயுதத்தால் தன் தேர்முதலியன அழிக்க, சயத்திரதன் சிவபிரானளித்தகதாயுதங்கொண்டு பூமியிற் குதித்துப் பொருதல். கரமிழந்து மற்றொருகரமிசை யொருகதைகொள் வெஞ்சினக் களிறனையவனிவ, னிரதமுந்தகர்த்துறுகதியுடன்வருமிவுளியுந்துணித்தெதிர் முனைவலவனை, முரணுடன்புடைத்தணிதுவசமும்விழமுதுகுகண்டபிற்சரபம தெனும்வகை, யரன்வழங்குபொற்கதையுடனவனியிலவனுமுன்குதித்தடலுடன் முனையவே. |
(இ - ள்.) கரம் இழந்து-(முன்னே) ஒருகையை யிழந்து, மற்று ஒரு கரம்மிசை - மற்றொருகையில், ஒரு கதை கொள் - ஒரு கதாயுதத்தை யேந்திய, வெம் சினம் களிறு அனையவன் - கொடிய கோபத்தையுடைய ஆண்யானையைப் போன்றவனான அபிமன், இவன் - சயத்திரதனது, இரதம்உம்-தேரையும், தகர்த்து- உடைத்து, உறு கதியுடன் வரும் - மிக்கவேகத்தோடு வருகிற, இவுளிஉம்- |