லித்து-மேல் பதினேழாம்போர்ச்ருக்கத்து வருகிற " இடம்புரிந்திடில் வலம்புரியு மெண்ணின் முறையால், வலம்புரிந்திடி லிடம் புரியு மண்டலமுமாய்" என்பது போலக்கொள்க. பி -ம்: மொத்தியவலி. இபமடங்க. (263) 126.- அபிமன்புயவலிமையைத் தேவரும் புகழ்தல். உலைவிறண்டினிற்பரிசனன்மதலையுமுவமையின்றெனப்பகழியின் மழைபொழி, சிலையின்வன்றொழிற்றிறலுடைமகபதிசிறுவனுந்தனக் கெதிரிலனினியென, மலையும்வெஞ்சமத்தொருதனிமுதுபுயவலிமைகண்டுபொற்புறு கழலபிமனை. யலைநெடுங்கடற்றரணி பரனைவருமமரருந்துதித்தனர் முகடதிரவே. |
(இ-ள்.) உலைவு இல்-அழிதலில்லாத, தண்டினில்-கதாயுதத்தில், பரிசனன் மதலைஉம்- வாயுகுமாரனான வீமனும், உவமை இன்று -(தனக்கு) ஒப்பாகான், என என்று (காண்பவர்) சொல்லவும்,-பகழியின் மழை பொழி-அம்புமழையைச் சொரிகிற, சிலையின் வல் தொழில்-வில்லினாற்செய்யுங் கொடிய போர்த்தொழிலில், திறல் உடை மகபதி சிறுவன்உம் - வலிமையையுடைய இந்திரன் மகனான அருச்சுனனும், தனக்கு இனி எதிர் இலன்-இவனுக்கு இனி ஒப்பாகான், என-என்று(காண்பவர்) சொல்லவும்,- வெம் சமத்து-கொடிய போர்க்களத்தில், மலையும்-(அன்றைத்தினத்தில் அபிமன்) போர்செய்த, ஒரு தனி முது புயம் வலிமை-ஒப்பில்லாத தனிப்பட்ட வலிய தோள்களின்பலத்தை, கண்டு-, அலை நெடு கடல் தரணிபர் அனைவர்உம்- அலைகளையுடையபெரிய கடல்சூழ்ந்த பூமியைக் காக்கிற அரசர்களெல்லோரும், அமரர்உம்-தேவர்களும்,பொற்பு உறு கழல் அபிமனை-அழகுமிக்க வீரக்கழலையுடைய அந்த அபிமந்யுவை,முகடு அதிர - (ஆரவாரத்தால் அண்டகோளத்தின்) மேல்முகடு அதிர்ச்சியடையும்படி,துதித்தனர் - (உரத்தகுரலோடு) தோத்திரஞ் செய்தார்கள்; (எ - று.) வீமன் கதைத்தொழிலிலும், அருச்சுனன் வில்தொழிலும் மிகச்சிறந்தவரென்பது பிரசித்தம். முதுபுயம்-போர்த்தொழிலில் முதிர்ந்த [மிகப்பயின்ற] புயம் என்றுமாம். (264) 127.-படுகளச் சிறப்பு. கழுகுபந்தரிட்டனமிசைவிசையொடுகழுதினங்களிட்டனபலகரணமு. மெழுகவந்தமிட்டனபலபரிவுகளிருபுறங்களிட்டனவெதிரழிபடை, யொழுகுசெம்புனற்குருதியின்வருநதியுநதியுஞ்சிவப்புறும் வகைபெருகலின். முழுகியெஞ்சியிட்டனகழியிடையிடைமுகிலின்வெங்குரற்கசரத துரகமே. |
(இ-ள்.) (அப்பொழுது), கழுகு-கழுகுகள். (இறந்தவற்றைத் தின்னும்பொருட்டு), மிசை-மேலே, விசையொடு-வேகத்தோடு, பந்தர் இட்டன-பந்தல்போகட்டாற்போல இடைவிடாது பரவின, கழுது இனங்கள்- பேய்களின் வகைகள், பல கரணம்உம் இட்டன - களிப்புமிகுதியால்) அநேக விதமான கரணங்களைப் |