நன்குவிளக்கும். 'சேய்' என்னும் ஆண்பாற் சிறப்புப்பெயர் அன்விகுதிபெற்றது. செயற்கை யென்ற தொழிற்பெயரில், அல்-சாரியை. பி-ம்: வெல்லும்விரகார். இதுமுதல் பதினைந்து கவிகள்-பெரும்பாலும் ஈற்றுச்சீரிரண்டும் மாச்சீர்களும், மற்றைநான்கும் காய்ச்சீர்களு மாகிய அறுசீராசிரியவிருத்தங்கள். (269) 132. | சேடன்முடிநெளியவருசெம்பொற்றேரழிவதோவந்தோ வந்தோ, கேடகவாளணிவலயக்கிளர்புயத்தோளறுவதோவந்தோ வந்தோ, கூடகவெங்கதையொன்றாற்சிந்துபதிகொல்வதோவந் தோவந்தோ, வாடமரிலருகொருவர்வாராமலிருப்பதோவந்தோ வந்தோ. |
(இ-ள்.) சேடன் - (கீழிருந்து பூமியைத் தாங்குகிற) ஆதி சேஷனது, முடி- தலை,நெளிய-(பாரமிகுதியைப் பொறுக்கமாட்டாமல்) வளையும்படி, வரு-வருகிற, செம் பொன்தேர்- (அபிமனது) சிவந்த பொன்மயமான தேர், அழிவதுஓ- அழிதல் தகுதியோ!அந்தோ அந்தோ-ஐயோ ஐயோ!! கேடகம் வாள்-கேடகத்தையும் வாளையும் ஏந்திய,அணி வலயம் - அழகிய வளையை அணிந்த, கிளர் புயம்- விளங்குகிறதோள்களையுடைய, தோள் - (அபிமனது) கைகள், அறுவதுஒ- அறுபடுதல் தகுதியோ!அந்தோ அந்தோ-!! கூடகம்-வஞ்சனையையுடைய, வெம் கதை ஒன்றால் -கொடியதொரு கதாயுதத்தால், சிந்துபதி-சிந்துதேசத்தரசன், கொல்வதுஓ-(அபிமனைக்)கொல்லுதல் தகுதியோ! அந்தோ அந்தோ-!! ஆடு அமரில் - செய்கிற போரில், அருகுஒருவர் வாரமல் இருப்பதுஓ- (இவ்வபிமனது) சமீபத்தில் ஒருத்தரும்துணைவராதிருத்தல் தகுதியோ-! அந்தோ அந்தோ-!! (எ-று.) ஓகாரங்கள்-சிறிதுந்தகுதியன் றென்று இரங்குதலை உணர்த்தும். சேஷன் என்றுவடசொல் -(பிரளயகாலத்திலும் அழியாமல்) மிகுந்து நிற்பவனென்று காரணப்பொருள்படும். வரத்தா லமைந்ததாதலின், 'கூடகவெங்கதை'எனப்பட்டது; இனி, கூடகம்-நுனியுமாம். பி-ம்: வந்துதவாமல். (270) 133. | கன்னனையுந்தேரழித்தான்கந்தனிலும்வலியனேயந்தோ வந்தோ, மன்னவரைவருமிருக்கமைந்தனுயிரழிவதேயந்தோ வந்தோ, பொன்னுலகோர்வியந்துருகிப்புந்தியினான்மலர்பொழிந்தாரந் தோவந்தோ, வன்னநெடுந்துவசனிவற்காயுமிகக் கொடுத்திலனேயந்தோ வந்தோ. |
(இ-ள்.) (அபிமன்), கன்னனைஉம் தேர் அழித்தான் - கர்ணனையுந் தேரழியச்செய்தான்; கந்தனில்உம் வலியன்ஏ - முருகக் கடவுளினும் பலசாலியேயாவன்! அந்தோ அந்தோ-!! மன்னவர்ஐவர்உம் இருக்க- பாண்டவராசர்கள்ஐந்துபேரும் உயிருடனிருக்க. மைந்தன்-அவர்கள் மகனான அபிமன், உயிர்அழிவதுஏ-இறப்பதோ! அந்தோ அந்தோ-!! பொன் உலகோர் - பொன்மயமானசுவர்க்க லோகத்திலுள்ள தேவர்கள், வியந்து-(இவன்பராக்கிரமத்தை) |