தாந்தமானபொருளை, மரகதம்-மரகதம்: எழுத்துநிலைமாறுதல்: இலக்கணப்போலி, மரகதம்-பச்சையிரத்தினம், மரகதமாமலை-உவமையாகுபெயர்; "பச்சைமாமலைபோல்மேனி" என்றதுங் காண்க. (279) 140. | நின்றனையேயெனைக்காத்துநீயேகென்றியானுரைப்பநெடுந் தேரூர்ந்து, சென்றனையேயிமைப்பொழுதிற்றிகிரியையுமுடைத் தனையேதெவ்வரோட, வென்றனையேசுயோதனன்றன்மகவுடனேமகவனைத்தும் விடங்காலம்பிற், கொன்றனையேநின்னாண்மைமீண்டுரைக்கக் கூசினையோகுமரரேறே, |
(இ-ள்.) குமார் ஏறே - இராசகுமாரர்களுள் சிங்கம்போன்றவனே! எனை காத்து நின்றனைஏ-(நீ இதுவரையில்) என்னை(ப்போரில்) பாதுகாத்து நின்றாயே; நீ ஏகு என்று யான் உரைப்ப- (சக்கரவியூகத்தைப் பிளத்தற்கு) 'நீ செல்' என்று நான் சொல்ல, நெடு தேர் ஊர்ந்து சென்றனைஏ - பெரிய தேரைச்செலுத்திக் கொண்டுபோயினாயே; இமை பொழுதில்-கண்ணிமைப்பொழுதிலே, திகிரியைஉம் உடைத்தனைஏ - சக்கரவியூகத்தையும் பேதித்தாயே; தெவ்வர் ஓட வென்றனைஏ - (பின்பு) பகைவர்கள் ஓடச் சயித்தாயே; சுயோதனன்தன் மகவுடனே- துரியோதனன்புத்திரனான இலக்கணனுடனே, மகவு அனைத்துஉம்-(மற்றும்) இராசகுமாரர் பலரையும், விடம் கால் அம்பின்-விஷத்தை வெளிச்சொரிகிற பாணங்களால், கொன்றனைஏ-கொன்றிட்டாயே; நின் ஆண்மை- உனது (இப்படிப்பட்ட) பராக்கிரமத்தை, மீண்டு உரைக்க-திரும்பி வந்து (என்னுடன்) சொல்ல,கூசினைஓ - நாணங்கொண்டுவாராது சென்றாயோ? (எ - று.) "போர்வாய்ப்பச் செய்தவைநாடாச் சிறப்புடைமை,... நலமாட்சி நல்லவர் கோள்" என்றபட, போரில்வெற்றியுண்டாம்படி தான் செய்த செயல்களைத் தானே எடுத்துச்செல்ல நாணுதல் சுத்த வீராது நற்குண மாதலின், 'நின்னாண்மை மீண்டுரைக்கக் கூசினையோ' என்றான். (278). 141. | உனக்குதவியொருவரறவொருதனிநின்றமருடற்றியொ ழிந்தமாற்றந், தனக்குநிகர்தானானதனஞ்சயனுங்கேட்கினுயிர்தரிக் குமோதா. னெனக்கவனிதரவிருந்ததித்தனையோமகனேயென் றென்றுமாழ்கி, மனக்கவலையுடனழிந்துமணித்தேரின்மிசைவீழந்தான் மன்னர்கோவே. |
(இ-ள்.) உனக்கு உதவி ஒருவர் அற- உனக்கு உதவிசெய்பவர் ஒருவருமில்லாமல், ஒரு தனி நின்று-(நீ சக்கரவியூகத்தினுள்) தன்னந்தனியே நின்று,அமர் உடற்றி-போர்செய்து, ஒழிந்த- இறந்த, மாற்றம்-செய்தியை, கேட்கின்-கேட்டால்,தனக்கு நிகர்தான் ஆன தனஞ்சயன்உம்-(வேறுஉவமை பெறாமையால்)தனக்குத்தானேஒப்பான அருச்சுனனும், தான் உயிர்தரிக்கும் ஓ-தான்பிழைத்திருப்பானோ? மகனே-!- (நீ), எனக்கு அவனி தரஇருந்தது- எனக்கு இராச்சியத்தைக் கொடுக்க இருந்தது, இதனைஓ இவ்வளவு தானோ? என்று என்றுமாழ்கி-என்றுபலவாறு சொல்லிப் புலம்பிச் சோகித்து, மன்னர் கோ-அரசர்க்கு அரசனான தருமன், மனக்கவலை |