பக்கம் எண் :

172பாரதம்துரோண பருவம்

145.- சூரியாஸ்தமன வருணனை.

என்றேன்றுவீமனுந்தன் னிளையோரு மழுதரற்ற விறந்தோன்
                                           வீர,
நன்றென்றுதளமிரண்டி னரபாலர்பலர்திரண்டுநவிலா நிற்ப,
வன்றென்றுமனமருளுற் றபிமனடுதலைக்குன்றையடுத்து
                                       மேலைக்,
குன்றென்று தடுமாறிப் பின்னையும்போய்த் தனதுதடங்
                               குன்று சேர்ந்தான்.

     (இ-ள்.) என்று என்று-என்று பலவாறு சொல்லி, வீமனும்-, தன்
இளையோர்உம் அவன் தம்பிமாரன நகுலசகதேவரும், அழுது அரற்ற -புலம்பிக்
கதறவும், 'இறந்தோன் வீரம்- மரித்த அபிமனது பராக்கிரமம், நன்று - சிறந்தது'
என்று-, தளம் இரண்டில்- இருதிறத்துச் சேனைகளிலும், நரபாலர் பலர் திரண்டு -
அரசர்கள் பலர் ஒருங்குகூடி, நவிலாநிற்ப-கூறிய புகழ்ந்துநிற்கவும், (கேட்டு,
அதனால்), என்று - சூரியன், அன்று- அப்பொழுது, மனம் மருள் உற்று-
மனம்மயங்கி, அபிமன் அடு தலை குன்றை - அபிமன் கொன்றுவிழுத்திய
பகைவர்தலைகளா லாகிய மலையை, மேலை குன்று என்று தடுமாறி அடுத்து -
மேற்குத்திக்கிலுள்ள அஸ்தகிரி யென்று மாறாகக்கருதிச் சமீபித்து, (அது
அங்ஙனமல்லாமையால்), பின்னைஉம் போய்-பின்பு அப்பால் விலகிச் சென்று,
தனதுதட குன்று சேர்ந்தான்-தனக்கு உரிய பெரிய அஸ்தகிரியை  அடைந்தான்;
(எ - று.)

     தலைக்குவியலை மலையென்று மயங்கியதாகக் கூறியதனால், மயக்கவணி:
வடநூலார் 'பிராந்திமதலங்காரம்' என்பர். 'என்று'  என்ற தெய்வப்பெயர்
உயர்திணையாக, 'சேர்ந்தான்' என்று கூறப்பட்டது. 'அன்று என்று' என எடுத்து-
அல்லதென்று அறிந்து என்று உரைத்து, 'அடுத்து' என்பதன் பின் கூட்டினால்,
'சூரியன்' என்ற தோன்றாஎழுவாய் வருவிக்க.                       (283)

வேறு.

146.-சஞ்சத்தகரைவென்ற அருச்சுனன் அங்குநின்றுமீளுதல்.

இந்நிலத் தவனி பால ரிவ்வகை யிரங்கி யேங்கத்
தென்னிலத் தெதிர்ந்து ளாரைத் தென்னிலந்தன்னி லேற்றி
யெந்நிலத் தினுந்தன் னாண்மைக் கெதிரிலா விசயன் றானு
மந்நிலத் தகன்று மீண்டா னுற்றவா றறிவு றாதான்,

     (இ-ள்.) இ நிலத்து - இப்போர்களத்தினிடத்திலே, அவனிபாலர்- பூமியைக்
காப்பவரான அரசர்கள், இ வகை இரங்கி ஏங்க- இவ்வாறு சோகித்துப் புலம்ப,- எ
நிலத்தின்உம்-எவ்விடத்திலும், தன் ஆண்மைக்கு எதிர் இலா-தனது
பராக்கிரமத்துக்குஎதிரில்லாத, விசயன்தான்உம்- அருச்சுனனும், தென் நிலத்து-
தெற்குத்திக்கில்,எதிர்ந்துளாரை-(தன்னை) எதிர்த்துச்சென்ற சஞ்சப்தகர்களை,
தென் நிலந்தன்னில்ஏற்றி -தென் திசையிலுள்ள யமலோகத்தில் குடிபுகுத்தி
(கொன்று), உற்ற ஆறுஅறிவுறாதான்-(இங்கு) நடந்தசெய்கையை அறியாதவனாய்,
அ நிலத்து  அகன்றுமீண்டான் அவ்விடத்தினின்று நீங்கித் திரும்பினான்;
(எ - று.)-எதிர்-ஒப்புமாம்.உற்றவாறு-அபிமந்யுமரணம். பி-ம்: அறிகிலாதான்.