150. | என்றலும்விசயனெய்தியெந்தைநீயெரியில்வாளா பொன்றலுய்ந்திருந்தாலின்னம்புதல்வரைப்பெறலுமாகு நன்றலதவத்தின்மிக்கோய்நல்லுயிர்செகுத்தலென்னாக் குன்றினும்வலியதோளான்முனிவனைத்தழுவிக்கொண்டான். |
(இ-ள்.) என்றலும்-என்று(கண்ணன்) கூறியவளவிலே, விசயன்-அருச்சுனன், எய்தி-(அம்முனிவனருகிற்)சென்று, 'எந்தை-சுவாமி! நீ-,வாளா - வீணாய் எரியில் பொன்றல்-நெருப்பில் (வீழ்ந்து) இறக்காதே: உய்ந்திருந்தால்-பிழைத்திருந்தால், இன்னம் புதல்வரை பெறல்உம் ஆகும்- இன்னமும் புத்திரைப் பெறுதலும் கூடும்; தவத்தில் மிக்கோய் - தவத்திற் சிறந்தவனே! நல் உயிர் செகுத்தல் - சிறந்த (உன்)உயிரை (நீயே) போக்கிக்கொள்ளுதல், நன்று அல-நல்லதன்று' என்னா- என்று (உபசாரமொழி) கூறி, குன்றின்உம் வலிய தோளால்-மலையிலும் வலிமையையுடைய (தன்) கைகளால், முனிவனை தழுவிக்கொண்டான்- அம்மமுனிவனை அணைத்துக்கொண்டான்: (எ - று.) உயிரைவைத்துக்கொண்டிருந்தால் பலபுத்திரரை இன்னும் பெறுதலாகும்: மறுமையில் மோட்சமடைவதற்கும் உபாயஞ்செய்யலாகுமென்று தடுத்தனனென்க. அயலானை 'எந்தை' என்றது, உயர்வுபற்றிவந்த மரபுவழுவமைதி, அதிக சமாதான முண்டாதற்கு, 'புதல்வர்' எனப் பன்மையாற் கூறினான். வீடுபெறுமுயிரென்பான், 'நல்லுயிர்' என்றான். 151. | வீதலும்பிழைத்தறானும்விதிவழியன்றிநம்மா லாதலுமழிவுமுண்டோநின்னில்வேறறிஞருண்டோ பூதலந்தன்னில்யாவர்புதல்வரோடிறந்தாரையா சாதலிங்கியற்கையன்றென்றருளுடன்றடுத்தகாலை. |
இதுவும், மேற்கவியும் - குளகம். (இ-ள்.) 'வீதம்உம்-(ஒருபிராணி) இறந்தாலும், பிழைத்தல்தான்உம்- பிழைத்திருத்தலும், வீதி வழி அன்றி-ஊழ்வினையின்படி நடப்பனவே யல்லாமல், நம்மால்-,ஆதல்உம் அழிவுஉம் உண்டுஓ-உண்டாதலும் அழிதலும் உண்டோ? நின்னில் அறிஞர் வேறு உண்டுஓ-உன்னினும் அறிவுடையோர் வேறு உளரோ? பூதலந்தன்னில்-உலகத்தில், யாவர் புதல்வரோடு இறந்தார்-எவர்தாம் புத்திரரோடு இறந்தவர்? ஐயா-! இங்கு-இப்பொழுது, சாதல்-(நீ) இறந்தல், இயற்கை அன்று- உலகவியல்புக்கு ஒத்ததன்று,' என்று-என்றுஞ்சொல்லி, அருளுடன் - கருணையுடனே, தடுத்த காலை - (அம்முனிவனைத்)தடுத்தபொழுது,-(எ-று.)- "நின்மகனிறந்தாலென்சொன் மறாதொழி நீயுமென்றான்" என அடுத்த கவியோடு முடியும். 152. - அந்தமுனிவன் வெகுண்டு 'உன்மகனிறந்தால் நீ என்சொல்லை மறாதொழி' என்று அருச்சுனனிடம் கூறுதல். தன்மகனுடன்றீமூழ்கத்தவிர்ந்தநற்றவனுமீள வின்மகனாகிநின்றவிசயனைவெகுண்டுநோக்கி யென்மகனிறக்கவென்னையிருத்தினையாயினம்ம நின்மகனிறந்தாலென்சொன்மறாதொழிநீயுமென்றான். |
|