பக்கம் எண் :

176பாரதம்துரோண பருவம்

     (இ-ள்.) தன் மகனுடன் -(இறந்த) தன்புத்திரனுடனே, தீ மூழ்க - நெருப்பில்
பாய்தலை, தவிர்ந்த - ஒழிந்த, நல் தவன்உம்- சிறந்தவத்தையுடைய அம்முனிவனும்,
மீன - பின்பு, வில் மகன் ஆகி நின்ற விசயனை வெகுண்டு நோக்கி -
வில்வீரனாய்நின்ற அருச்சுனனைக் கோபித்துப்பார்த்து, 'அம்ம-(யான்சொல்வதைக்)
கேட்பாயாக; என் மகன் இறந்த என்னை இருத்தினை ஆயின் - எனக்குப் புத்திரன்
மரிக்க என்னை (அவனுடன் இறவாதபடி) இருக்கச் செய்தாயாயின், நின் மகன்
இறந்தால் நீஉம் என் சொல் மறாது ஒழி- உனக்குப்புத்திரன் இறந்தால்
(அப்பொழுது)நீயும் எனது வார்த்தையை மறுக்காமலிருப்பாய்', என்றான்-என்று
கூறினான்; (எ -று.) பி-ம்: தன்மகவுடன்.

     தனது கருத்தை நிறைவேறவொட்டாதபடி தடுத்ததனால், வெகுளி கொண்டான்.
ஆயின் - ஆதலாலென்க. 'அம்ம'-முன்னிலையிடைச்சொல்.               (290)

153.- அருச்சுனன்உடன்பட்டு முனிவனைமீட்டுத்தேரேறிச்செல்லுகையில்
பேரோசை செவிப்படல்.

ஐயெனத்தொழுதுவீரனந்தணனுயிரைமீட்டு
மையெனக்கரியமேனிவலவனுந்தானுந்திண்டே
ரொய்யெனச்செலுத்துகாலைவேலையினோதைதானும்
பொய்யெனப்பரந்தோரோதைசெவிகளைப்புதைத்தன்றே.

     (இ-ள்.) வீரன் - அருச்சுனன், ஐஎன - (அதற்கு) இசைந்து, தொழுது -
வணங்கி, அந்தணன் உயிரை மீட்டு- அம்முனிவனது உயிரை இறவாதுகாத்து, மை
என கரிய மேனி வலவன்உம் தான் உம்-மேகம்போலக் கறுத்த திருமேனியையுடைய
சாரதியான கண்ணனும் தானுமாக, திண் தேர்-வலிய தேரை, ஒய்யென செலுத்து
காலை-விரைவாகச் செலுத்திவருகிற பொழுதில்,- வேலையின் ஓதை தான்உம் பொய்
என-கடலோசையும் (தனக்குமுன்) இல்லையென்னும்படி, ஓர்ஒதை-ஒருபேரொலி,
பரந்து-பரவி, செவிகளை புதைத்தது-(அவர்கள்) காதுகளை நிறைத்தது; (எ - று.)-
கேட்கப்பட்டது என்பதாம். அன்றே - ஈற்றசை.

     ஐயென-உடன்பாட்டுக் குறிப்பு. ஒய்யென-விரைவுக்குறிப்பு. ஓர் ஓதை-
அபிமனதுமரணத்துக்குத் தருமன்முதலியோர் புலம்பும் ஆரவாரம்.       (291)

154. - பாசறை சேருமுன் ஸ்ரீக்ருஷ்ணன் அருச்சுனனைக்
கையில்ஆயுதமொன்றும் இல்லாதபடி செய்தல்.

பாசறையணுகுமுன்னம்பாசடைப்பதுமம்போல
மாசறவிளங்குமேனிவண்டுழாயலங்கன்மூர்த்தி
யாசறுவரிவிற்காளையங்கையுமருகுநீங்காத்
தேசுறுபடைகள்யாவுமொழித்தனன்றீமைதீர்ப்பான்.

     (இ-ள்.) பாசு அடை பதுமம் போல - பசிய இலைகளையுடைய செந்தாமரை
போல, மாக அற விளங்கும்- குற்றமில்லாமல்