156. - இரண்டுகவிகள் - ஒருதொடர்: அருச்சுனன் மனம்நொந்து கேட்க, ஸ்ரீகிருஷ்ணன் நடந்ததைக் கூறியதைத் தெரிவிக்கும். வன்கணனிளகிச்செங்கண்மாலடிவீழ்ந்துமேன்மே லென்கணுந்தோளுமார்புமிடனுறத்துடிக்கைமாறா நின்கணுமருவிசோரநின்றனையின்றுபோரிற் புன்கணுற்றவர்கண்மற்றென்றுணைவரோபுதல்வர்தாமோ. |
(இ-ள்.) (அதனைக்கண்டு) வன்கணன்-வலிமையையுடைய அருச்சுனன், இளகி- மனம்நெகிழ்ந்து, செம் கண் மால் அடி வீழ்ந்து-சிவந்த திருக்கண்களையுடைய கண்ணபிரானது திருவடியில் விழுந்து நமஸ்கரித்து, 'என்-எனது, கண்உம்-கண்களும், தோள்உம்- தோள்களும், மார்புஉம்-, மேல் மேல்-, இடன் உற துடிக்கை மாறா- இடப்பக்கம் மிகுதியாகத் துடித்தலை நீங்கா; நின் கண்உம் அருவி சோர நின்றனை- உனது கண்களினின்றும் கண்ணீர்ப்பெருக்கு வழிய (நீ) நின்றாய்; இன்று - இன்றைக்கு, போரில்-, புன்கண் உற்றவர்கள் - துன்படைந்தவர்கள், என் துணைவர்ஓ- எனது உடன்பிறந்தவரோ? மற்று-அன்றி, புதல்வர் தாம்ஓ - புத்திரரேயோ? (எ-று.)-"என்று" என மேற்கவியோடு தொடரும். ஆடவருக்கு இடந்துடித்தல்-துர்நிமித்தம். இடையறாது மிக்குப் பெருகுதலைக் காட்டுதற்கு, 'அருவி' எனப்பட்டது. இன்னாரென்று அறியாமையின், 'புன்கணுற்றவர் துணைவரோ புதல்வர் தாமோ' எனப் பன்மையாற் கூறினான். புன்கண் - மரணம். பி-ம்: புதல்வரோ துணைவர்தாமோ. (294) 157. | திருவுளத்துணராதில்லைசெப்புகென்றயர்வான்றன்னை மருவுறத்தழுவித்திங்கண்மரபினுக்குரியசெல்வா வெருவுறப்பகையைவென்றவீரனேமருகனென்றென் றருவரைத்தோளினானுக்குற்றவாறனைத்துஞ்சொன்னான். |
(இ-ள்.) திரு உளத்து உணராது இல்லை - (உனது) சிறந்த மனத்தில் அறியப்படாதது(எதுவும்) இல்லை; செப்புக-(நிகழ்ந்த உண்மையைக்) கூறுவாயாக, என்று-என்றுசொல்லி, அயர்வான் தன்னை-தளர்பவனான அருச்சுனனை, (கண்ணன்),மருவுற தழுவி-சேர அணைத்துக்கொண்டு, 'திங்கள் மரபினுக்கு உரிய செல்வா-சந்திரவமிசத்துக்கு உரிய செல்வத்துக்கு உடையவனே! வெருவுற பகையை வென்றவீரனே-அஞ்சும்படி பகைவர்களைச் சயித்த பராக்கிரமசாலியே! மருகன்-(இன்றுஅழிவடைந்தவன் என்) மருமகனான அபிமன்,' என்று என்று-என்று பலமுறைசொல்லி, அரு வரை தோளினானுக்கு உற்ற ஆறு அனைத்துஉம்- அழித்தற்கரிய மலைபோன்ற தோள்களையுடைய அபிமனுக்கு நேர்ந்த தன்மைமுழுவதும், சொன்னான்-(விவரமாக எடுத்துக்) கூறினான்; 'திருவுளத்து உணராதில்லை' என்றதனால், எம்பெருமானது சர்வஜ்ஞதை வெளியிடப்பட்டது. அயர்வானாகிய வன்கணனை எனக் கீழ்க்கவியோடு தொடர்ப்படுத்துக, 'அருவரைத்தோளினா |