160.- இதுமுதல் எட்டுக்கவிகள்-அருச்சுனன்புலம்புவதைத்தெரிவிக்கும் போரினிற்றுணைவரோடும்புயங்ககேதனனைவென்று பாரெனக்களித்திநீயேயென்றுளம்பரிவுகூர்ந்தே னேருனக்கொருவரில்லாய்நீகளம்பட்டாயாகி லாரினிச்செகுக்கவல்லாரைவருக்குரியகோவே. |
ஒன்பது கவிகள் - ஒருதொடர். (இ-ள்.) உனக்கு நேர் ஒருவர் இல்லாய் - உனக்கு ஒப்பு ஒருத்தரும் இல்லாதவனே !ஐவருக்கு உரிய கோவே - (எங்கள்) ஐந்து பேருக்கும் உரிய அரசனே ! போரினில்-யுத்தத்தில், துணைவரோடு உம்-தம்பிமார்களுடனே, புயங்ககேதனனை -பாம்புக்கொடியனான துரியோதனனை, நீயே-, வென்று - சயித்து, எனக்கு-, பார்அளித்தி-இராச்சியங்கொடுப்பாய், என்று-, உளம் பரிவு கூர்ந்தேன் - மனத்தில்ஆசைமிகுந்திருந்தேன்; நீ-, களம் - போர்க்களத்தில், பட்டாய் ஆகில் -இறந்தாயானால், இனிசெகுக்க வல்லார் ஆர் - இனிமேல் (பகைவரை)அழிக்கவல்லவர் எவர்? (எ-று.) (298) 161. | சக்கரம்பிளந்தவாறுந்தரியலருடைந்தவாறுந் துக்கரமானகொன்றைத்தொடையலால்வளைத்தவாறு மெய்க்கரந்துணிந்தவாறுமீண்டுருத்தடர்த்தவாறு முக்கரமுடனென்முன்னேயோடிவந்துரைசெய்யாயோ. |
(இ-ள்.) சக்கரம் பிளந்த ஆறுஉம்-சக்கரவியூகம்(உன்னால்) பிளப்புண்ட விதத்தையும் தரியலர் உடைந்த ஆறுஉம்-(அதில்) பகைவர்கள் அழிந்த விதத்தையும்,துக்கரம் ஆன-செய்யவொண்ணாத [தெய்வத்தன்மையுள்ள), கொன்றைதொடையலால்-கொன்றைப்பூமாலையால், வளைத்த ஆறுஉம்-[உன்னைச் சயத்திரதன்] சூழ்ந்த விதத்தையும், மெய் கரம் துணிந்த ஆறுஉம்-(உன்) உடம்பில் ஒருகை(துரோணனால்) துணிபட்ட விதத்தையும்,மீண்டு-அதன் பின்பும், உருத்து அடர்த்த ஆறுஉம்-(நீ)கோபித்துப் போர்செய்தவிதத்தையும், உக்கரமுடன்-வீரத்தோடு, என் முன்னே ஓடி வந்து உரைசெய்யாய்ஓ-எனதுமுன்னே (நீ) வேகமாகவந்து சொல்ல மாட்டயோ? (எ-று.) சக்கரம்பிளத்தல் முதல் மீண்டுருத்தடர்த்த விறுதியாக உள்ள விவரங்களையெல்லாம்,கீழ்க் கண்ணன் கூறியதனால் அருச்சுனன் அறிந்தானென்க: கீழ் 157-ஆங் கவியைநோக்குக. துக்கரம்- துஷ்கரம்: வடசொல். உக்கரம்=உக்ரம்: இது, உக்கிரம் எனப்பெரும்பாலும்வரும். பி-ம்: உக்கிரம். (299) 162. | பன்னகவரசன்பெற்றபாவைமாமதலைதன்னை முன்னுறமுனையிற்றோற்றேன் மூர்க்கனேன்முடியாதுண்டோ வுன்னையுமின்றுதோற்றேனுன்னுடன்றொடர்ந்துவாரா தின்னமுமிருந்ததையாவென்னுயிர்க்கிறுதியுண்டோ. |
(இ-ள்.) பன்னக அரசன்பெற்ற-சர்ப்பராசன் பெற்ற, பாவை-பெண்ணாகிய உலூபியினது, மா மதலைதன்னை-சிறந்தகுமாரனான இராவானை, முன்உற-முற்பட, முனையில் - போரில், தோற்றேன் - |