பக்கம் எண் :

பதினோராம் போர்ச்சருக்கம்19

1சைந்தவனது முயற்சி  சிறிதும் பயன்படாமையின், இவ்வுவமை கூறினார். தோளுரம்
- புஜபலம். திடம்-த்ருடம் என்னும் வட சொல்லின் திரிபு. பரமசிவனது நெற்றிக்கண்
நெருப்புக்கு இரையாகி எரிபட்ட மன்மதனது அங்கம் [உடம்பு] விழுந்த இடத்துக்கு,
அக்காரணத்தால் 'அங்கதேசம்' என்ற பெயர்.                        (25)

26.- எதிர்த்துவந்தவர்களை அபிமன் முதுகுகொடுத்தோடச் செய்தல்.

வந்தவர்வந்தவர்வாணுதனிலைதொறுஞ்
சிந்துரத்தூளியாற்றிலகமிட்டனனெனக்
கொந்துறுகணைமுனைக்குருதிநீர்மல்கவே
வெந்திறல்வில்லின்வென்கண்டனன்வீரனே.

     (இ -ள்.) வந்தவர் வந்தவர் - (அங்ஙனம் தன்னை) மேன்மேல் எதிர்த்துவந்த
அரசர்களது, வாள் நுதல் நிலை தொறுஉம் - பிரகாசமான நெற்றியினிடந்தோறும்,
சிந்துரம் தூளியால் திலகம் இட்டனன் என - சிந்துரச்செம்பொடியால்
திலகமிட்டவன்போல், கொந்து உறு கணை முனை - குத்துதல் பொருந்திய
அம்புகளின் நுனியால், குருதி நீர் மல்க - இரத்தப்பெருக்கு நிறைய (ச்செய்து),
வீரன்- அபிமன், (அவர்களையெல்லாம்), வெம் திறல் வில்லின் - கொடிய
வலிமையுடைய விற்போரால், வென் கண்டனன் - முதுகு கொடுக்கச்செய்தான்;
(எ -று.)

     வந்தவர் வந்தவர் - அடுக்க, மிகுதிகாட்டும். சிறந்த இலக்காதலின், நெற்றி
கூறப்பட்டது; மேல் 28- ஆங் கவியில் முகங் கூறுவதுங் காண்க. கொந்து -
முதனிலைத்தொழிற்பெயர். 'கொத்து' என்பதன்மெலித்தலெனக் கொண்டால்,
கொந்துறு- திரட்சிபொருந்திய என்க. பி - ம் : இட்டனரென.            (26)

27.- அப்போது சல்லியன்வந்து அபிமனை முன்வளைதல்.

சென்றதேர்யாவையுந்தன்னொருதேரினால்
வென்றுமாமன்னவன்மகனையுமீதுகொண்
டன்றுபோம்வெஞ்சிலையாண்மைகணடபிமனை
வன்றிறற்சல்லியன்வந்துமுன்வளையவே.

இதுவும்,மேற்கவியும் - குளகம்.

     (இ-ள்.) (இவ்வாறு அபிமன்), சென்ற தேர் யாவைஉம் - (எதிர்த்து) வந்த
தேர்களெல்லாவற்றையும், தன் ஒரு தேரினால் - தனது ஒரு தேரினாலே, வென்று -
சயித்து, மா மன்னவன் மகனைஉம் - பெரிய துரியோதனராசனது குமாரனான
இலக்கணனையும், மீது கொண்டு - (அத்தேரின்) மேல் வைத்துக்கொன்டு, அன்று -
அப்பொழுது, போம்-(மீண்டு) சென்ற, வெம் சிலை ஆண்மை - கொடிய வில்லின்
திறத்தை, கண்டு - பார்த்து, வல் திறல் சல்லியன் - கொடிய வலிமையையுடைய
சல்லியன், வந்து-, அபிமனை-, முன் வளைய - எதிரில் வளைந்துகொள்ள,-
( எ-று.)"விசயன்மதலை ... அடைசினான்" என அடுத்த கவியோடு முடியும்.