பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்191

179.- இதுமுதல் ஆறுகவிகள்-அடுத்தநாள் சூரியாஸ்தமனத்துக்குள்
சயத்திரதனைக் கொல்வதாக அருச்சுனன் செய்யுஞ்
சபதங்களைத் தெரிக்கும்.

சிந்துபதியாகியசெயத்திரதனைத்தே
ருந்தமரினாளையுருமேறெனவுடற்றா
வந்திபடுமவ்வளவினாவிகவரேனேல்
வெந்தழலின் வீழ்வனி துவேதமொழியென்றான்.

     (இ-ள்.) தேர் உந்து அமரில் - தேர் செலுத்திச் செய்யும் போரில், நாளை
அந்திபடும்அ அளவின்-நாளைத்தினத்தில் மாலைப்பொழுதுவருகிற
அச்சமயத்திற்குள், சிந்துபதிஆகியசெயத்திரதனை- சிந்துதேசத்து அரசனான
சயத்திரதனை, உரும் ஏறு எனஉடற்றா-பேரிடிபோல(க்கொடியதாக)ப் போர்செய்து,
ஆவி கவரேன் ஏல்-(நான்)உயிர்பறிக்காதொழிவேனானால், வெம் தழலின்
வீழ்வன் - (நான்)உயிர்பறிக்காதொழிற்குறித்து இறப்பேன்: இது-, வேதம் மொழி-
வேதவாக்கியம்போலத் தவறுபடாத சபதவார்த்தை, என்றான் - என்று (அருச்சுனன்
பிரதிஜ்ஞை) கூறினான்: (எ - று.)

180.இன்றபிமன்வாளமரிலின்னுயிரிழக்கக்
கொன்றவனைநாளையுயிர்கோறல்புரியேனேன்
மன்றிலொருசார்புறவழக்கறவுரைக்கும்
புன்றொழிலர்வீழ்நரகுபுக்குழலுவேனே.

     (இ-ள்.) இன்று - இன்றைக்கு, அபிமன் - அபிமந்யு, வாள்அமரில் - கொடிய
போரில், இன் உயிர் இழக்க - இனிமையான உயிரை ஒழியும்படி, கொன்றவனை-
வதைத்தவனான சயத்திரதனை, நாளை-நாளைக்கு, உயிர் கோறல் புரியேன்ஏல்-
(நான்) உயிரையழித்தல் செய்திடேனாயின்,- மன்றில்-நியாயத்தலத்தில்,
ஒருசாரபுஉற-(வாதிப்பிரதிவாதிகளுள்) ஒருவர் பக்கத்தில் பக்ஷபாதம் மிக, வழக்கு
அற உரைக்கும்-நீதியில்லாமற் பேசுகிற, புன் தொழிலர்-இழிதொழிலையுடையவர்கள்,
வீழ்-விழுகிற,நரகு-நரகத்தில். புக்கு உழலுவேன் - (யான்) வீழ்ந்து
வருந்துபவனாவேன்; (எ - று.)

     சயத்திரதனை நாளைக்கொல்லாவிடின் மன்றோரஞ் சொன்ன
பெரும்பாவத்தையான்  அடைவேனென்பதாம். ஏ - தேற்றம். பி-ம்: இன்றமரில்
வாளபிமன்.வழக்கினை.                                       (318)

181.மோதமரினென்மகன்முடித்தலைதுணித்த
பாதகனைநானெதிர்படப்பொருதிலேனேற்
றாதையுடனேமொழிதகாதனபிதற்றும்
பேதைமகனெய்துநெறிபெற்றுடையனாவேன்.

     (இ-ள்.) மோது அமரின் - தாக்கிச்செய்யும்போரில், என் மகன் முடி தலை
துணித்த-எனது புத்திரனது கீரிடந்தரித்த தலையைத் துண்டித்த, பாதகனை-பாவியான
சயத்திரதனை, நான்-,எதிர்பட-(அவன் தொழிலுக்கு) எதிராக (பழிக்குப் பழிவாங்க),
பொருதிலேன்ஏல்-போர்செய்து கொல்லேனாயின்,- தாதையுடனே மொழி தகாதன
பிதற்றும் - தந்தையோடு (எதிர்த்துத்)