கொங்கவிழ்செழுமலர்க்கொன்றைவாசமுங் கங்கைநுண்டுவலையுங்கலந்துவீசுமால். |
(இ-ள்.) சங்கரன் - சிவபிரானது, மணி - அழகிய, வரை- கைலாசகிரியின். சாரல் - பக்கங்களிலே (வீசுகிற), மாருதம்-காற்று,- திங்களின் நிலவி உமிழ் - சந்திரனது நிலாவைச் சொரிகிற, செக்கர் வேணி மேல் - செந்நிறமுள்ள (சிவபிரானது)சடையின்மேல் (தரித்த), கொங்கு அவிழ் - வாசனை வீசுகிற, செழு - செழிப்பான,கொன்றை மலர் - கொன்றைப்பூவின், வாசம்உம் - பரிமளத்தையும், கங்கை நுண்துவலைஉம் - (அச்சடையிலுள்ள) கங்காநதியின் சிறிய நீர்த்துளிகளையும், கலந்துவீசும் - ஒருங்கு வெளிவீசும். (344) 207.- அரவங்களின் மாணிக்கவொளி அங்குளவிடரகத்தநேகமாயிரம் பொங்கழலுமிழ்விழிப்புயங்கமாமணி யெங்கணுமிருளறவிலங்குசோதியாற் கங்குலும்பகலவன்கரங்கள்காட்டுமால். |
(இ-ள்.) அங்கு உள - அவ்விடத்திலுள்ள, விடர் - மலை வெடிப்புக்களின், அகத்து - உள்ளேயிருக்கிற, அநேகம் ஆயிரம் - பல ஆயிரக்கணக்கான, பொங்கு அழல் உமிழ் விழி புயங்கம் - மிக்க கோபாக்கினியைச் சொரிகிற கண்களையுடைய நாகங்களின், மா மணி- சிறந்த மாணிக்கங்கள்,- எங்கண்உம் இருள் அற - எவ்விடத்திலும் இருள் நீங்கும்படி, இலங்கு - விளங்குகிற, சோதியால் - ஒளியினால்,- கங்குல்உம் - அந்த இராப்பொழுதிலும், பகலவன் கரங்கள் காட்டும் -சூரியனது கிரணங்கள்போலத் தோன்றும்; (எ - று.) ஆங்குள்ள சிறந்தசாதிப்பாம்புகளின் மாணிக்கங்களுடைய ஒளியால் எங்கும் இருள்நீங்கிப் பகல்போல்விளங்கிற்றென்பதாம். 208.-நந்தி ஸ்ரீ க்ருஷ்ணன்வருகையைத் தெரிவிக்க, சிவபெருமான் நன்றென்றுவந்து எதிர்போந்து தழுவுதல். செந்திருமடமயிற்கேள்வன்சென்றமை யந்திவானிறத்தவனறிந்துமுன்னமே நந்தியுமுரைசெயக்கேட்டுநன்றெனப் புந்தியான்மகிழ்ந்தெதிர்போந்துபுல்லினான், |
(இ-ள்.) செந் திரு மடமயில் - செவ்விய திருவென்னும் பேரையுடைய மடப்பமுள்ள மயில்போலுஞ்சாயலையுடைய இலக்குமிக்கு, கேள்வன் - கணவனாகியஸ்ரீ க்ருஷ்ணன், சென்றமை - வந்துள்ள செய்தியை,-அந்திவான் நிறத்தவன் -செவ்வானம்போலுந் திருமேனியையுடைய சிவபெருமான்,- முன்னம்ஏ அறிந்துஉம் -முன்னமே அறிந்திருந்தும், நந்திஉம் உரைசெய - நந்திதேவரும் திருமுன் வந்துதெரிவிக்க, கேட்டு-, நன்று என புந்தியால் மகிழ்ந்து - நன்றென்று மனத்தினாற்சந்தோஷித்து, எதிர் போந்து - எதிர் கொண்டு, புல்லினான் - (அப்பிரானைத்)தழுவினான்; (எ - று.) - செல்லுதல் - தன்னிடத்தினின்று நடத்தல் |