(இ-ள்.) ஐயுற - (உனது பாரக்கிரமத்தைக் கண்டு யான் திகைத்துச்) சந்தேகிக்குமாறு, உடன் - உடனே [விரைவாக], கை உறு சிலையுடன் - கையிலேபொருந்திய வில்லுடனே, கானம் வேடன் என்று - காட்டிலேதிரிகின்ற வேடனுருவத்தைக்கொண்டு, வந்து-, அணுகி- (என்னைச்) சமீபித்து, என்னுடன்- என்னுடனே, மெய்உற - உண்மையாக, அமர் புரி - போர்புரிந்த, வினோத - வினோதச்செயலையுடையவனே! மைஉறு கண்டனே-(நஞ்சுண்டதனாற்) கறுத்த கண்டத்தையுடையவனே! நாள்தொறுஉம் - ஒருநாளும், (நான் உன்னை,), மறப்பதுஇல்லை-; (எ-று.) (352) 215. | உமையவள்கணவனேயுகாந்தகாலனே யிமையவில்வீரனேயென்றுகொண்டிவ னமையுறத்துதித்தலினவனுமற்றிவன் சமைவுகண்டையனோடுவகைசாற்றினான். |
(இ-ள்.) உமையவள் கணவனே-! யுகாந்தகாலனே-யுகாந்த காலத்துக்கு உரியவனே! [சங்காரமூர்த்தியே!] இமையம் வில்வீரனே - மேருமலையை வில்லாகக்கொண்ட வீரனே ! என்று-, கொண்டு - (வாயினாற்) சொல்லிக்கொண்டு, இவன் - இந்தஅருச்சுனன், அமைஉற - மனவமைதிதோன்ற [மனவொருமைப்பாட்டோடு என்றபடி], துதித்தலின் - தோத்திரஞ் செய்ததனால், அவன்உம் - அந்தச்சிவபெருமானும், மற்று - பின்பு, இவன் - இந்த அருச்சுனனுடைய, சமைவு கண்டு - சாந்தமான மனநிலைமையைக் கண்டு, ஐயனோடு - தலைவனான ஸ்ரீக்ருஷ்ணனோடு, உவகை-மகிழ்ச்சியோடு, சாற்றினான் - சொல்லலானான்; (எ - று.)- சிவபெருமான் கூறுவதை, அடுத்தகவியிற் காண்க. மேரு மந்திரம் இமயம் முதலிய மலைகளை அபேதமாகக்கூறுதல் கவி சமயம்; "இமையவில்வாங்கிய வீர்ஞ்சடையந்தணன்" என்ற கலித்தொகையையுங் காண்க. இனி, இமையவில் - இமயமலையில் தோன்றிய மூங்கிலை வில்லாகவுடைய என்று உரைப்பாரு முளர். 216.-சிவபெருமான் க்ருஷ்ணனைக் கொண்டாடுதல். ஆற்றினைதுயர்மயலனைத்துமெய்யுறத் தேற்றினைசிந்தையைத்தெளிந்தவாய்மையான் மாற்றினைமும்முறைபிறப்பும்வந்துநின் கூற்றினையடைதலாற்பிறவிகொள்ளுமே. |
(இ-ள்.) துயர் மயல் அனைத்துஉம் - (இவனுக்குஉள்ள) துயரினாலாகிய [புத்திரசோகத்தினாலாகிய] மயக்கத்தையெல்லாம், ஆற்றினை - (இப்போதே) தணிப்பித்தாய்: தெளிந்த வாய்மையால் - தெளிவாகவுள்ள (உன்னுடைய) வாய்ச்சொற்களால் [கீதையையுபதேசித்ததனால்], சிந்தையை- (இவன்) மனத்தை, மெய்உற - உண்மை நன்குபட, தேற்றினை- தெளிவுறச்செய்தாய்: (இவ்வகையினால்), மும்முறை பிறப்புஉம் வந்து-மூன்றுமுறைப் பிறவியிலும் (உன்னுடன்) வந்து, நின் கூற்றினை-உன்னுடைய அமிசத்தை, அடைதலால்- அடைந்திருத்தலினால்,(இவன்), பிறவிகொள்ளும்ஏ- பிறவியையடைவனோ? மாற்றினை - (நீ இவன் பிறவியையடையாத |