உம்-(எடுக்க எடுக்க அந்தக்கணைகள்) குறைதலில்லாத ஒப்பற்ற பரிசுத்தமான சாயை பொருந்துதலுடைய பொய்கையையும், கொடுத்தி- கொடுப்பாய்,' (எ - று.)- "என்றலும்" என மேலே தொடரும். தெளிவான நீரில் சாயைநன்கு விழுமாதலால், 'தூ நிழற் பொய்கை' என்றது. பி-ம் :தோழநீ. (356) வேறு. 219.-இரண்டுகவிகள்-ஸ்ரீக்ருஷ்ணனைச் சிவபெருமான் புகழ்தலைக்கூறும். என்றலுமீசன கைத்துரை செய்தனன் யானென நீயெனவே றன்றிவை யாவும ளித்திடு தற்குனை யல்லது வல்லவர்யார் நின்றதொர் தூணிடை வந்தனை யானைமு னின்றனை கஞ்சனையுங் கொன்றனை மன்னவை யூடிரி யப்பல கூறைகொ டுத்தனையே. |
(இ-ள்.) என்றலும்-என்று (ஸ்ரீக்ருஷ்ணன்) கூறியவுடனே,- ஈசன்- சிவபெருமான், நகைத்து - சிரித்து, உரைசெய்தனன் - (பின் வருமாறு) சொல்லுபவனானான்; யான் என - யானென்றும், நீ என - நீ என்றும், வேறு அன்று- வேறு இல்லை: இவையாஉம்-இப்போது வேண்டிய வில்முதலிய எல்லாவற்றையும்,அளித்திடுதற்கு - கொடுத்திடுதற்கு, உனை அல்லது - உன்னையல்லாமல், யார்வல்லவர்-? நின்றது ஒர் தூணிடை - (எதிரிலே) நின்றதாகிய ஒருதூணினிடத்திலே,வந்தனை - (இரணியனைச் சங்கரிக்க) நரசிங்கரூபியாகத்திருவவதரித்தாய்: யானைமுன் நின்றனை-('ஆதிமூலமே!' என்று கூவின) யானைக்குமுன்னே (அதனைப்பாதுகாக்குமாறு) வந்து நின்றாய் : கஞ்சனை கொன்றனை - கஞ்சனைக் கொன்றாய்:மன் அவையூடு - இராசசபையிலே, இரிய-(திரௌபதியின் துயரம்) நீங்க, பல கூறைகொடுத்தனை - பல ஆடைகளைச் சுரக்குமாறு அருள்புரிந்தாய்; இதுமுதற் பதினான்கு கவிகள் - இச்சருக்கத்தின் முதற்கவி போன்ற அறுசீராசிரியவிருத்தங்கள். (357) 220. | முன்னுருவாயினைநின்றிருநாபியின்முளரியின்வாழ்முனிவன் றன்னுருவாகியிருந்துபடைத்தனைபலசகதண்டமுநீ நின்னுருவாகியளித்திடுகின்றனைநித்தவிபூதியினா லென்னுருவாகியழிக்கவுநின்றனையெம்பெருமானெனவே. |
(இ - ள்.) எம்பெருமான்-எமது பெருமானே! முன்-முதலில், உருஆயினை - (உலகத்தையெல்லாம் வெளிப்படுத்தத் திருவுளங் கொண்டு அவ்யக்த ஸ்வரூபியாகிய நீ) உருவமுள்ளவனாகி, நின் திருநாபியின் - உன்னுடைய திருவுந்தியிலே, முளரியின்வாழ் முனிவன்தன் - தாமரையில் வாழ்பவனாகிய இருடியின் [நான்முகனுடைய],உருஆகி இருந்து - உருவத்தையுடையவனாயிருந்து, பல சகத் அண்டம்உம் -பலலோகங்களையும் (தன்னிடத்துக்) கொண்ட அண்டங்களையெல்லாம், நீ-,படைத்தனை-சிருஷ்டித்தாய்: நித்தவிபூதியினால் நித்தியவிபூதியாகியஸ்ரீவைகுண்டத்தில், நின் உரு ஆகி-உன்னுடைய உருவத்தையேகொண்டு[விஷ்ணுரூபத்துடனிருந்து] அளித்திடுகின்றனை - பாதுகாத்தல் தொழிலைச்செய்கின்றாய்: என் உருஆகி - |