பக்கம் எண் :

216பாரதம்துரோண பருவம்

யும், அ புர-சூதனன் ஏவலின்-திரிபுரமழித்த அந்தப்பரமசிவனது கட்டளையால்,
அந்தணன்-அம்முனிவன், அமரர் பிரான் மதலைக்கு-தேவராசனான இந்திரனது
புத்தினாகிய அருச்சுனனுக்கு, ஒப்புறவோடு-தகுதியோடு, பயிற்றி-கற்பித்துக்கொடுத்து,
இதம்பொடு - (அவனிடத்து) அன்புகொண்டு, உருத்திர மா மறைஉம் -
உருத்திரமென்னுஞ் சிறந்தமந்திரத்தையும், செப்பினன்-உபதேசித்தான்; அவை -
அவற்றை, (அருச்சுனன்), செயத்திரதன்-சயத்திரதனை; வென்று-சயித்து, தெறுவான்
- அழிக்கும்பொருட்டு, பெற்றதனன்-பெற்றுக்கொண்டான்; (எ-று).

     'ஒப்புரவோடு' என்ற பாடத்துக்கு - உபகாரமாக என்க. 'இதம் கொடு'
என்பதற்கு நன்மைகளைக் கொடுக்கிற என்றும் உரைக்கலாம்.
வென்றுதெறுவான்=தெற்று வெல்வான் என விகுதி பிரித்துக் கூட்டினுமாம்.    (360)

223.-பிறகு வேண்டிபோது இவையெய்து மென்றுகூறிச் சிவபெருமான்
திருமாலைநோக்கிப் பூமிபாரத்தைத் தீர்த்துச்செல்க எனல்.

யாதொருபோதுநினைத்தனையவ்வழியெய்துமுனக்கிவையென்
றோதியநேகவரங்கள்கொடுத்தபினுமையொருகூறுடையோன்
பூதலமாதிடர்தீரவருஞ்சமர்புரிதொழின்முற்றியபின்
சீதரநின்பதமேவுகமென்றருள்செய்துவிடுத்தனனே.

     (இ-ள்.) 'யாது ஒரு போது-எந்தச் சமயத்தில், நினைத்தனை-(நீ இவற்றை)
நினைத்தாயோ, அ வழி - அந்தச் சமயத்தில் (அவ் விடத்தில்), உனக்கு-, இவை -
இந்த வில்லும் அம்பும், எய்தும் - வந்து சேரும்,' என்று ஓதி - என்று சொல்லி,
அநேக வரங்கள் கொடுத்தபின் - பலவரங்களை (அருச்சுனனுக்கு)க் கொடுத்தருளிய
பின்பு, உமை ஒருகூறு உடையோன் - உமாதேவியை ஒருபக்கத்திலுடைய சிவபிரான்,
(கண்ணனை நோக்கி), 'சீதர-ஸ்ரீதரனென்னும் பெயருடையவனே! பூதலம் மாது இடர்
தீர - பூமிதேவியின் துன்பம் நீங்கும்படி, அரு சமர் புரி தொழில் முற்றிய
பின்-செய்தற்கரிய போர் செய்யுந்தொழிலை முடித்த பின்பு, நின்பதம் மேவுக-உனது
இடத்தை அடைவாயாக" என்று அருள் செய்து - என்று கருணையோடு சொல்லி,
விடுத்தனன்-(இருவரையும்) அனுப்பினான்:

     துஷ்டஅசுரர்கள் அநேகரும் கெட்ட அரசர்கள் பலரும்ஒருங்கே கூடி
வசிப்பதனா லுண்டான பூமிபாரத்தை நிவிருத்திசெய்யும் பொருட்டு அப்பூமிதேவியின்
பிரார்த்தனையின்படி தேவர்கள் வேண்டுகோளால் திருமால் வசுதேவகுமாரனாய்க்
கிருஷ்ணனாகத் திருவவதரித்ததனால், அவ்வவதார காரியம் முடிந்தபின் தன்னடிச்
சோதிக்குச் செல்லும்படி சிவபிரான் கூறினனென்க. 'நின்பதம்' என்றது -
ஸ்ரீவைகுண்டத்தை. பி-ம்: சீதரநீவரகென்று தழீஇயுரை செய்தனன்மீளவுமே.   (361)

224.-க்ருஷ்ணர்ச்சுனர் மலையினின்றுபுறப்படுகையில் சுக்ரோதயமாதல்.

எண்ணியகாரியமெய்தியிறைஞ்சியவிந்திரன்மாமகனுந்
திண்ணியநேமிவலம்புரிவாள்கதைசிலையுடைநாயகனும்