பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்221

வழியுரைப்போர், உத்தம மான பண்புற் றுரைப்பவர் தூதராகும்" என்பது
நிகண்டு.                                              (368)

231.- இதுவும், அடுத்தகவியும்- ஒருதொடர்: கடோற்கசன் அருச்சுனனது
சபதம் முதலியனதெரிவித்து, தன்னைத்தூதனுப்பினதன்
காரணத்தையும் தெரிவித்தமை கூறும்.

தன்றிருமைந்தனைமௌலிதுணித்தசயத்திரதன்றனைவாள்
வென்றிகொள்காவலர்காவன்மிகுப்பினும்வெயிலவன்வீழ்வதன்முன்
கொன்றிடுவேனதுதப்பினருங்கனலூடுகுதித்திடுவே
னென்றுமொழிந்தரன்வாழ்கயிலாயமுமெய்தினன்வில்விசயன்.

     (இ-ள்.) தன் திரு மைந்தனை - தனது சிறந்த புத்திரனான அபிமனை,
மௌலிதுணித்த - தலையைத் துண்டித்த, சயத்திரதன்தனை- சயத்திரதனை, வாள்
வென்றிகொள் காவலர் - ஆயுதங்களால் வெற்றியைக்கொள்ளும் அரசர்கள்,
காவல்மிகுப்பின்உம் - காத்திடுதலை மிகுதியாகச்செய்தாலும், வெயிலவன் வீழ்வதன்
முன் -(நாளைச்) சூரியன் அஸ்தமித்தற்குமுன்பு, கொன்றிடுவேன்-; அது தப்பின் -
அங்ஙனச்செய்தல் தவறினால், அரு கனலூடு குதித்திடுவேன் - (மீளுதற்கு) அரிய
அக்கினியிலே பிரவேசித்துவிடுவேன்; என்று மொழிந்து - என்று சபதஞ்செய்து,
வில்விசயன் - வில்லில் வல்ல அருச்சுனன், (அதற்குஏற்ற கருவி பெறும்பொருட்டு),
அரன்வாழ் கயிலாயம்உம் எய்தினன்- சிவபிரான் வாழ்கிறகைலாசகிரியையடை
தலையுஞ் செய்தான்; (எ -று.) - பி - ம்: காவல்வீரர் தடுப்பினும்.    (369)

232.வஞ்சனை யாலம ரிற்பகை தன்னைம லைப்பது
                            பாதகமென்,
றஞ்சின னாதலி னீயறி யும்படி யையன்வி டுத்தனனா,
லெஞ்சினனாளையுன் மைத்துன னென்றுகொ
                      ளென்றனன் வன்றிறல்கூர்,
நெஞ்சினில் வேறொரு சஞ்சல மற்றநி சாசரன்
                                 மாமருகன்.

     (இ -ள்.) 'வஞ்சனையால்-, அமரில்-போரில், பகைதன்னை - பகைவனை,
மலைப்பது-அழிப்பது, பாதகம்-தீவினை,' என்று-என்று எண்ணி, அஞ்சினன்
ஆதலின் - பயந்தா னாதலால், நீ அறியும்படி - நீ (இவ்வுண்மையை) உணரும்படி,
ஐயன்- (என் தலைவனானதருமன், விடுத்தனன் - (என்னைத்) தூதனுப்பினான்;
'நாளை - நாளைக்கு, உன் மைத்துனன்-உனது உடன்பிறந்தவள்
கணவனானசயத்திரதன், எஞ்சினன்- இறந்தொழிந்தான்,' என்று கொள் - என்று
நிச்சயித்துக்கொள், என்றனன் - என்றுகூறினான்: (யாவனெனில்),- வல்திறல் கூர் -
கொடிய பராக்கிரமம் மிக்க, நெஞ்சினில் - மனத்தில், வேறு ஒரு சஞ்சலம் அற்ற -
(அதற்கு) மாறான கவலைசிறிதுமில்லாத, நிசாசரன் மா மருகன் - (இடிம்பனாகிய)
அரக்கனது சிறந்த மருமகனான கடோற்கசன்; (எ - று.)

     இங்கே, 'வஞ்சனை' என்றது - முன்புதெரிவியாமற் பின்பு கொல்வதனையே.
நாளை எஞ்சினன் - தெளிவுபற்றிய காலவழுமைதி. நிசாசரன்மாமருகன் -
இடிம்பனுடன்பிறந்த இடிம்பியின்மகன்.                              (370)