பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்225

சின்றி அலைதற்கே யுரிய அபிம னிறந்ததற்கு அருச்சுனன் அரற்றுதல் ஆச்சிரிய
மென்றபடி.                                                   (375)

238.அங்கிருந்துசயத்திரதனாவிகவர்ந்திடுவலெனவாண்மை
                                    கூறிப்,
பங்கிருந்தவுமாபதிபாற்பணிந்துவரம்பெறச்சென்றான்
                             பார்த்தனாகிற்,
கொங்கிருந்ததாராய்நின்குடைநிழற்கீழிதுகாலங்
                              கூட்டங்கூடி,
யிங்கிருந்தவேழையரேமென்செயமற்றிருக்கின்றே 
                      மென்றுஞ்சொன்னான்.

     (இ-ள்.) கொங்கு இருந்த தாராய் - வாசனை தங்கிய மாலையையுடைய
துரியோதனனே! பார்த்தன் - அருச்சுனன், அங்கு இருந்து - எதிர்ப்பக்கத்திலிருந்து,
சயத்திரன் ஆவி கவர்ந்திடுவல் என ஆண்மை கூறி - 'சயத்திரதனது உயிரைக்
கவர்ந்திடுவேன்' என்று வீரவாதஞ்சொல்லி, பங்கு இருந்த உமாபதிபால் - (தனது)
வாமபாகத்திலுள்ள உமாதேவிக்குக் கணவனான சிவபிரானிடத்து, பணிந்து வரம்
பெற- வணங்கி வரம்பெறும்பொருட்டு, சென்றான் ஆகில் - போயினனானால்,-
இங்கு-இந்தப்பக்கத்தில், நின் குடை நிழல் கீழ் - உனது குளிர்ந்த அரசாட்சியின்
கீழ், இதுகாலம் - இவ்வளவு காலமாய், கூட்டம் கூடி இருந்த - திரண்டிருந்த,
ஏழையரேம்-எளியவரான நாங்கள், மற்று என் செய இருக்கின்றேம் -
(அவ்வருச்சுனனைஅழிப்ப தல்லாமல்) வேறு யாதுசெய்ய இருக்கிறோம்?
என்றுஉம் சொன்னான் -என்றும் கூறினான், (கர்ணன்); (எ -று.) - கீழ்ப்பாட்டு -
சபையிற் பொதுவாகவும்,இப்பாட்டு - துரியோதனனை நோக்கியுங் கூறியதெனக்
காண்க.

     கர்ணனும் அருச்சுனனும் இளமைதொடங்கி ஒருவர்க்கொருவர் வைரங்
கொண்டவ ராதலாலும் ஒருவரையொருவர் போரிற் கொல்வதாகச் சபதஞ்
செய்திருத்தலாலும், இங்ஙனம் கர்ணன் அருச்சுனன்விஷயத்தில்
அலட்சியமாகப்பேசினான். 'ஏழையரேம்' என்று தம்மை யிழித்துக்கூறி, அதனால்
தமது சிறப்பை வெளியிடுகிறான்; இது செருக்கின் காரியம். பி - ம் :இதுகாறும்.
                                                           (376)

239.-மூன்றுகவிகள் - அதுகேட்டுக் கடோற்கசன் கூறுதலைக்
தெரிவிக்கும்.

இவன்மொழிந்தவிகழுரைகேட்டிடிம்பன்மருமகன்வெகுளுற்
                               றென்சொன்னாலு,
மவனிதலமுழுதுமினியரசாளநினைந்திருந்தீரறி
                                   விலீர்காள்,
சிவனெரிசெய்புரம்போலும்பாடிவீடழலூட்டிச்சேனை
                                      யாவும்,
பவனன்மகன்மகனென்னும்பரிசறியத்தொலைத்தீடுபடுத்து
                                     வேனே.

இதுமுதல் நான்குகவிகள் - குளகம்.

     (இ-ள்.) இவன் மொழிந்த - கர்ணன் (இவ்வாறு) சொன்ன, இகழ்உரை -
நிந்தைமொழியை, கேட்டு-, இடிம்பன் மருமகன்- இடிம்பனது மருமகனான
கடோற்கசன், வெகுளுற்று - கோபங் கொண்டு , (கூறுவான்;-) அவனிதலம்
முழுதுஉம் - பூலோகம் முழுவதையும், இனிஅரசு ஆள நினைந்து இருந்தீர் -
இனிஅரசாட்சி செய்ய எண்ணியிருந்தவர்களான அறிவு இலீர்காள் -
புத்தியில்லாதவர்களே ! என் சொன்னால்உம் - (நீங்கள்) எதைச்சொன்னாலும்,