பக்கம் எண் :

226பாரதம்துரோண பருவம்

(லக்ஷ்யஞ்செய்யாமல் நான்), சிவன் எரி செய் புரம் போல் - சிவபிரான் எரித்திட்ட
திரிபுரத்தைப்போல, உம் பாடி வீடு - உங்களுடைய படைவீட்டை, அழல் ஊட்டி -
தீயுண்ணச்செய்த, சேனையாஉம்- (உங்கள்) சேனைகளெல்லாவற்றையும், பவனன்
மகன் மகன் என்னும் பரிசு அறிய - வாயுகுமாரனான வீமனது புத்திரன்
நானென்னுந்தன்மையை (யாவரும்) அறியும்படி, தொலைத்து - நாசஞ்செய்து, ஈடு
படுத்துவேன் - பெருமையழிப்பேன்; (எ-று.)- இப்பாட்டில் 'வெகுளுற்று' என்றது,
மேல் 242 - ஆம் பாட்டில் "உரைக்கும்" என்றதோடு இயையும். பி -ம்:
இடிம்பிமகன்மிக.

     என்சொன்னாலும் என்பதற்கு-(நாங்கள்) என்னசொன்னாலும் (நீங்கள்
கேளாமல்) என்றும் உரைக்கலாம். அக்கினியை மூட்டி வளர்க்கத்
துணையாந்தன்மைவாயுவினிடத்திலும், அரக்குமாளிகையையும் இலங்காபுரியையுந்
தீயிட்டழித்ததன்மைஅவ்வாயுவின் குமாரனான வீமனிடத்திலும் அனுமனிடத்திலும்
உள்ளதனால்,'பவனன்மகன்மகனென்னும் பரிசறிய' என்றான்.             (377)

240.தசைகுருதிமிசையொழுகத்தனித்தனியேயெதிர்த்தவரைத்
                               தலைகள்சிந்த,
விசையன்வரவேண்டுமோமற்றுள்ளார்திரண்டுவர
                            வேண்டுமோதோ,
னிசைபுலருமுனமுனைந்துநீறாக்கிவிடுகுவனெந்நிரு
                               பன்சொன்ன,
வசைவின்மொழிமறுத்துடற்றலாகாதென்றிருக்கின்
                              றேனறிகிலீரே.

     (இ -ள்.) எதிர்த்தவரை - எதிர்த்துப் போர்செய்தவர்களை, தசை குருதிமிசை
ஒழுக-சதையும் இரத்தமும் மேல்வழியும்படி, தனி தனியே -, தலைகள் சிந்த -
தலைகளைச் சிதறடித்தற்கு, விசையன் வரவேண்டும்ஓ - அருச்சுனன்தான்
(போருக்கு) வருவது அவசியமோ? மற்று உள்ளார் திரண்டு வரவேண்டும்ஒ தான் -
மற்றுமுள்ள (வீமன் முதலிய) வீரர்கள் ஒருங்குகூடிவருதல்தான் அவசியமோ?
(யான்ஒருவனே), நிசை புலரும் முனம் - இவ்விரவு விடியமுன்னே, முனைந்து -
போர்செய்து, நீறு ஆக்கி விடுகுவேன்- (உங்களையெல்லாம்) பொடியாக்கிவிடுவேன்;
(ஆனால்), எம் நிருபன் சொன்ன - எங்களது அரசனான தருமன் கூறின, அசைவு
இல் மொழி - தளர்ச்சியில்லாத வார்த்தையை, மறுத்து - விலக்கி, உடற்றல் -
(இப்பொழுது) போர் செய்தல், ஆகாது - தகுதியன்று, என்று -
என்றகாரணத்தாலேயே, இருக்கின்றேன்- (நான் சும்மா) இருக்கிறேன்;
அறிகிலீரே -(இதனை நீங்கள்) அறியமாட்டீர்களா?(எ-று.)-அறிகிலீரே, ஏ -
அசையுமாம். பி -ம்: குருதிநிணம். அறிவிலீரே.

     தூதுசென்று தான் கூறிய செய்தியைச்சொல்லி வரும்படியே கட்டளையிட்ட
தருமனது வார்த்தைக்கு மாறாக யான் பொருதலாகா தென்கிறான்.        (378)

241.இருவரெதிவதிர்தம்மிலிகல்பொருதலுலகியற்கையாருங்
                                   கூடிப்,
பருவமுறாத்தனிக்குதலைப்பாலகனுக்காற்றாமற்பறந்து
                                  போனீ,
ரொருவனெடுந்தேரழிக்கவொருவன்மலர்க்கைதுணிக்க
                       வொருவன்பின்னைப்,
பொருவனெனவறைகூவிப்பொன்றுவித்தானிதுகொண்டோ
                              புகல்கின்றீரே.