பக்கம் எண் :

236பாரதம்துரோண பருவம்

தில் நின்ற சயத்திரதன், உடற்றும் - போர் செய்யும், வின்மைஉம் - வில்லின்
திறமையையும், கருதலன் - பகைவனான அருச்சுனனது, வின்மைஉம் - வில்லின்
திறமையையும், காண்டி - (நாளைக்குப்) பார்ப்பாய், ( எ -று.)

     இருதிறத்தவரும் தாம்தாம் பிறரைத் தவறாது வெல்வதாகத் தனித்தனி
சபதஞ்செய்தால், அச்சபதத்தில் ஒன்று பங்கப்பட்டே தீரும்; ஆதலின்,
வாயாற்சொல்லுதலில் பயனில்லை: காரியத்திற் காட்டுதலே சிறப்பு என
அசுவத்தாமன்நிஷ்பக்ஷபாதமாக நீதி கூறினான். பி - ம்: நின்றிவன்.   (393)

256.- யாவரும் துரியோதனனிடம் விடைபெற்றுச்செல்லுதல்.

என்றுசேனாபதிமகனியம்பினான்
நின்றகாவலர்களுநிசைபுலர்ந்துழிச்
சென்றுபோர்புரிந்துநின்றெவ்வர்யாரையும்
வென்றுமீளுதுமெனவிடைகொண்டாரரோ.

     (இ-ள்.) என்று-, சேனாபதி மகன் - சேனைத்தலைவனாகிய துரோணனது
புத்திரனான அசுவத்தாமன், இயம்பினான் - கூறினான்; (பின்பு), நின்ற
காவலர்கள்உம்- (அங்கு) உள்ள அரசர்களெல்லோரும், 'நிசை புலர்ந்தஉழி-
இவ்விரவு கழிந்தபொழுது [நாளை உதயத்தில்], சென்று போர் புரிந்து -
எதிர்த்துப்போய்ப் போர்செய்து, நின் தெவ்வர் யாரைஉம் - உன்
பகைவர்களெல்லோரையும், வென்று மீளுதும் - சயித்துத்திரும்புவோம்,' என -
என்றுசொல்லி, விடை கொண்டார்- (துரியோதனனிடம்) அனுமதிபெற்றுச்
சென்றார்.                                                 (394)

257.- கிருஷ்ணர்ச்சுனரும் கடோற்கசனும் மீள, சூரியனுதித்தல்.

பூதனைமுலைநுகர்பூந்துழாய்முடி
நாதனும்விசயனுநலத்தொடேவிய
தூதனுமருக்கனுந்துயிலுணர்த்தினார்
சேதனர்புகழ்மொழித்திகிரிவேந்தையே.

     (இ -ள்.) பூதனை முலை நுகர்- பூதனையென்னும் பேய்மகளது
தனத்தையுண்ட, பூ துழாய் முடி நாதன்உம் - அழகிய திருத்துழாய் மாலையைத்
தரித்த திருமுடியையுடைய கண்ணபிரானும், விசயன் உம்- அருச்சுனனும்,
நலத்தொடுஏவிய தூதன்உம் - நல்லெண்ணத்தோடு ( தருமன் துரியோதனனிடம்)
அனுப்பினதூதனான கடோற்கசனும், அருக்கன்உம்- சூரியனும்,- சேதனர் புகழ்
மொழி திகிரிவேந்தை - அறிவுடையார் புகழ்ந்துகூறுகிற சொற்களையுடைய
ஆஜ்ஞாசக்கரத்தையுடைய தருமராசனை. துயில் உணர்த்தினார் - தூக்கத்தினின்று
எழுப்பினார்கள்; ( எ -று.)

     கைலைக்குச் சென்ற கிருஷ்ணார்ச்சுனரும், துரியோதனன் பாசறைக்குத்
தூதுசென்ற கடோற்கசனும் மீளுமளவில், சூரியனுதிக்க, தருமன்
துயிலுணர்ந்தனனென்பதாம். பி -ம்: ஏகிய.

     பூதனைமுலைநுகர்ந்த கதை:- தன்னைக் கொல்லப் பிறந்தவன் ஒளித்து
வளர்கிறா னென்று உணர்ந்த கம்சனால் விசேஷமான பலம்.