பக்கம் எண் :

24பாரதம்துரோண பருவம்

உலக மழிதலால் அழித்தலும் ஆக முத்தொழில்களும் கடலுக்கு உரியனவாயின.
வீமனை வாயுவாக உருவகப்படுத்தினார்; இது- வீமனது வலிமை மிகுதியை
விளக்கும். சண்டபவநம் - வடமொழித்தொடர். என்னப்பட்டது எல்லாம்-
ஒருமைப்பன்மை மயக்கம். வெரீஇ - சொல்லிசையளபெடை. பண்டு -
ஏழாம்வேற்றுமையிடப் பொருளுணரநின்ற பழமைகுறிக்கும் இடைச்சொல்.

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பன்னிரண்டுகவிகள் -
பெரும்பாலும் மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீரும் காய்ச்சீர்களும், மற்றை நான்கும்
மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்.
                                                     
(34)

35.- பாண்டவர் பக்கத்தார் யாவரும் படைவீட்டில் இரவு
இனிது கண் துயிலல்.

சென்றநிருபர்புறநாணத்திண்டோளபிமன்முதலான
வென்றிநிருபர்குழூஉக்கொண்டுவிறலார்சேனைவேந்தருடன்
மன்றல்கமழுந்துழாய்மவுலிமாலுந்தாமும்பாடிமனை
யொன்றியினிதிற்கண்டுயின்றாருரனுந்திறலுமுடையோரே.

     (இ-ள்.) உரன்உம் - பலத்தையும், திறல்உம் - பராக்கிரமத்தையும்,
உடையோர்-உடையவர்களான, திண் தோள் அபிமன் முதல் ஆன - வலிய
தோள்களையுடையஅபிமந்யு முதலிய, வென்றி நிருபர் - வெற்றியையுடைய
அரசர்கள், சென்ற நிருபர்புறம் நாண-(எதிர்த்து) வந்த பகையரசர்கள்
புறங்கொடுத்து வெட்கமடைய,-குழூஉகொண்டு- தாம் ஒருதிரளாகக்கூடி, விறல்
ஆர் சேனை வேந்தருடன் - வெற்றிமிக்க சேனைகளோடும் மற்றையரசர்களோடும்,
மன்றல் கமழும் துழாய்  மவுலிதாம்உம் - வாசனைவீசுகிற
திருத்துழாய்மாலையைச்சூடிய திருமுடியையுடையகண்ணபிரானும் தாங்களுமாக, பாடி
மனை ஒன்றி- படைவீட்டை யடைந்து, (அங்கு),இனிதின் கண்துயின்றார் -
மகிழ்ச்சியோடு கண்மூடித் தூங்கினார்கள்; (எ - று.)

     சென்ற நிருபர் புறம் நாண - துரியோதனனுடன் சென்ற அரசர்கள்
மற்றொருபுறத்தில் நாணமடைய என்றுங் கொள்ளலாம். மௌலி என்னும் வடசொல்,
மவுலி யெனப் போலிபெற்றது.                                       (35)

36.- துரியோதனன் பாதிராத்திரியளவும் உடன்சேர்ந்தாரோடு
இலக்கணகுமாரன் அபிமனிடம் அகப்பட்ட தாழ்வுக்கிரங்கி உளம் நோதல்

பானாளளவுந்துயிலாமற்பாந்தட்டுவசன்றனக்குயிர்நண்
பானார்பலரும்வாள்வேந்தரமைச்சர்பலருமிளையோருஞ்
சேனாபதியுஞ்சூழவிருந்தபிமன்கையிற்றிருமைந்தன்
தானாடமரிலகப்பட்டதாழ்வுக்கிரங்கியுளநொந்தார்.

     (இ-ள்.) பாந்தள் துவசன் தனக்கு - பாம்புக்கொடியையுடைய
துரியோதனனுக்கு, உயிர் நண்பு ஆனார் - பிராணசினேகிதரான, வாள் வேந்தர்
பலர்உம் - ஆயுதப்பயிற்சியில்வல்ல அரசர்கள் அநேகரும், அமைச்சர் பலர்உம் -
(அவனது) மந்திரிமார் எல்லோரும், இளையோர்உம் - (அவன்) தம்பிமார்களும்,
சேனாபதிஉம் - சேனைத்தலைவனான துரோணனும், (ஆகிய எல்லோரும்), பால்
நாள்