பக்கம் எண் :

26பாரதம்துரோண பருவம்

பின்பு என்னும் பொருள்தரும் வடமொழியிடைச்சொல்: அநுவாதம், அநுகமநம்,
அநுசுருதி முதலியவற்றிற் காண்க; இது - இங்கே, முன் நடந்ததை யொப்பப் பின்
நடப்பது என்ற பொருளை உணர்த்தி, பழிக்குப்பழி வாங்குதலென்ற கருத்தை
விளக்கும். ஏ- தேற்றம். செற்றம் - பகைமை நெடுங்காலம் நிகழ்வது: வைரம் ;
செறு- பகுதி.

38.- இதுவும், மேற்கவியும் குளகம் - துரோணன்கூறும் உத்தரம்.

பெற்றோன்றனினுஞ்சதமடங்குவலியோன்வீமன்பின்னிற்கப்
பொற்றோள்விசயன்முன்னிற்கப்பொரும்போர்முனையிற்போருதவி
யற்றோர்போலவில்வலியாலறத்தோன்றன்னையகப்படுத்தன்
மற்றோர்பிறப்பிற்றெரியாதிப்பிறப்பின்முடிக்கமாட்டேமால்.

     (இ -ள்.) 'பெற்றோன்தனின்உம்- (தன்னைப்) பெற்றதந்தையான வாயுவினும்,
சதம் மடங்கு- நூறுபங்கு அதிகமான, வலியோன்- வலிமையுடையனான, வீமன்-,
பின் நிற்க - பின்னே (பாதுகாத்து) நிற்கவும், பொன் தோள் விசயன்-
அழகியதோள்களையுடைய அருச்சுனன், முன் நிற்க - முன்னே (பாதுகாத்து)
நிற்கவும், போர் பொரும் முனையில் - போர்செய்யுமிடத்தில் [யுத்தகளத்தில்],
அறத்தோன்தன்னை - தருமங்களை யுடையவனான யுதிட்டிரனை, போர் உதவி
அற்றோர் போல - போரில் உதவிசெய்பவரையுடையரல்லாதவரை (அகப்படுத்துதல்)
போல, வில் வலியால் அகப்படுத்தல்- வில்லின் வலிமையால் (உயிரோடுபற்றி)
வசப்படுத்தலை, மற்று ஓர் பிறப்பில் தெரியாது - மற்றொருசன்மத்தில் (எம்மால்
நிறைவேற்ற முடியுமோ முடியாதோ அது) தெரியாது: இ பிறப்பில்-, முடிக்க
மாட்டோம்- நிறைவேற்ற வல்லமை யில்லோம்; (எ - று.) - ஆல்- ஈற்றசை;
ஆதலாலெனினுமாம்.

      வாயுவின் வலிமை பிரசித்தம். "பிதுச்சதகுணம் புத்ர:" என்றவாறு
அவ்வாயுவினும் மிகப்பலமடங்கு வலியவன் வீமனென்க.           (38)

39. செவ்வாய்வைக்கும்வலம்புரிக்கைத்திருமால்செம்பொற்றேரூர
வெவ்வாய்வாளிவில்விசயன்மெய்ம்மைத்தருமனணிநின்ற
அவ்வாயிமைப்போதணுகாமற்காப்பார்சிலருண்டாமாகில்
இவ்வாய்நாளையகப்படுத்திதரலாமென்றானெழின்மறையோன்.

     (இ-ள்.) செவ் வாய் - சிவந்த திருவாய்மலரிலே, வைக்கும் - வைத்து
ஊதப்படுகிற, வலம்புரி - (பாஞ்சசந்யமென்னும்) வலம்புரிச்சங்கை யேந்திய, கை -
திருக்கையையுடைய, திருமால் - திருமகள் கொழுநனான கண்ணபிரான், செம்
பொன் தேர் - சிவந்த பொன்னினாலாகிய தேரை, ஊர( பாகனாய்நின்ற) செலுத்த,
வெவ் வாய் வாளி வில் விசயன் - கொடிய நுனியையுடைய அம்புகளையும்
வில்லையுமுடைய அருச்சுனன், மெய்ம்மை தருமன் அணி நின்ற அ வாய்-
சத்தியத்தையுடைய தருமபுத்திரன் அணிவகுப்பில் நின்ற அவ்விடத்தில், இமை
போது- ஒரு மாத்திரைபொழுதாவது, அணுகாமல்- சமீபித்துவரவொட்டாதபடி,
காப்பர்--(அவனைத்) தடுப்பவர், சிலர் -(யாராயினும்) சிலர், உண்டு ஆகில் -
உள்ளாரானால்,- இ வாய்-