பக்கம் எண் :

268பாரதம்துரோண பருவம்

னோன் - இரண்டு மருதமரங்களை உதைத்து அருள்செய்தவனான கண்ணபிரான்,
செலுத்து - (பாகனாயமைந்து) ஓட்டுகிற, தேரவன் - தேரையுடைய அருச்சுனன்,
சென்றான் - (அப்பாற்) போயினான்; ( எ -று.) - ஏத்தச் சென்றான் என்க.

     எடுத்துக்காட்டுவமையணி. மழுவீரன் - பரசுராமன். 'அன்றுஅருச்சுனன்
ஆயிரம்புயங்களும் அரியப்பட்டனன்': இன்று அருச்சுனன் ஆயிரம் புயங்களையும்
அரிந்தனன்' என்றுசொற்போக்கில் தொடைமுரண் தோன்றக் கூறியது,
கவிசமத்காரம். வெண்ணிறத்தையுணர்த்தும் அர்ஜூநமென்ற வடசொல் -
மூன்றாமடியில், இலக்கணையாய், சுத்தமென்றபொருளில் வந்தது. இனி, அருச்சுனன்
என்ற வடசொல்திரிபு எதுகைநயத்துக்காக அருச்சுனமென விகாரப்
பட்டதாகக்கொண்டு, அருச்சுனம் - சுவாமிபூசைக்கு உதவிகிற அல்லது பூசிக்கத்தக்க,
மறை யென்று உரைத்தலும் ஒன்று: 'அசேதனமாகிய உரலோடு சகலஞானங்கட்கும்
ஆதாரமான வேதங்களுந்தொடர' என்றதனால், திருமாலினருள்பெற்றால்
அசேதநங்களும் சேதநங்களோடு ஒப்புமைபெறு மென்பது தோன்றும்.    (440)

44.- பின்பு பல அரசர் திரண்டு அருச்சுனனை எதிர்த்தல்.

கடிகைமுப்பதுஞ்சிந்துவுக்கரசனைக்காக்குமாறறைகூவி
யிடியிடித்தெனப்பல்லியமார்த்தெழவெழுகடற்படையோடும்
படிநடுக்குறப்பணிக்குலநெளித்திடப்பட்டவர்த்தனருள்ளார்
முடிதரித்தவரனைவருந்திரண்டொருமுனைபடவெதிர்சென்றார்.

     (இ-ள்.) பட்டவர்த்தனர் உள்ளார் - (கிரீடமில்லாமல்) நெற்றிப்பட்டம்
மாத்திரம்தரித்து அரசாளும் பட்டவர்த்தனர்களாக உள்ளவர்களும், முடி தரித்தவர்
-கிரீடத்தைதரித்து அரசாளும் மகுடவர்த்தனர்களாக உள்ளவர்களுமாகிய,
அனைவர்உம் - எல்லா அரசர்களும்,- திரண்டு- ஒருங்கு கூடி , கடிகைமுப்பது
உம்-(அன்றைப்பகல்) நாழிகைமுப்பதும், சிந்துவுக்கு அரசனை - சிந்துதேசத்து
அரசனாகிய சயத்திரதனை, காக்கும் ஆறு - (தாம்) பாதுகாக்கும்படி ( நிச்சயித்து),-
அறைகூவி - (அருச்சுனனை) வலியப் போர்க்கு அழைத்துக்கொண்டு,- பல் இயம் -
அநேகவித வாத்தியங்கள், இடி இடித்து என - இடியிடித்தாற்போல, ஆர்த்து எழ -
ஆரவாரித்து மிக முழங்க,- எழு கடல் கடையோடுஉம் - ஏழுசமுத்திரங்கள்போன்ற
சேனைகளுடனே,- படி நடுக்குஉற -(பாரமிகுதியாற்) பூமி நடுக்கமடையவும், பணி
குலம் நெளித்திட- (மற்றும் அதனால் பூமியைத்தாங்குகிற) பாம்புகளின்கூட்டம்
(சுமக்கமாட்டாது) தலையசைக்கவும் ஒரு முனை பட - ஓரேநோக்கமாக, எதிர்
சென்றார் - அருச்சுனனெதிரில் வந்தார்கள்; ( எ -று.)

     பதினான்காநாட்பகல் முழுவதும் அருச்சுனன்கையிற்படாத படி
சயத்திரதனைத்தாம் பாதுகாப்பதாக மிகப்பல அரசர் ஒன்று கூடித் தம்
சேனைகளோடுபூமிநடுங்கும்படி அருச்சுனனுக்கு எதிரே சென்றா ரென்க. ஆயிரந்தலைகளையுடையஆதிசேஷன்