இறந்தவர்களது தொகை அன்றைநாளில் இறந்தவர்களது தொகைக்கு உறையிடுதற்கும் போதாது என்று, அன்று இறந்தவர்களது தொகைமிகுதியை விளக்கியவாறு. நவகதி - குரங்கு, வேங்கை, யானை, நாய்,ஆடு , சிங்கம், நரி, சாபம்,முயல் என்பவற்றின் கதி என்றலுமுண்டு. பட்டார் - பட்டவரின் தொகைக்கு, ஆகுபெயர்: அதனால், 'போதும்' என்ற செய்யுமென்முற்றைக்கொண்டது: இல்லாவிடின், போதுவர் என்றுமுற்றுவரவேண்டும். (444) 48.- அருச்சுனனது விற்போர்த்திறச்சிறப்பு. அநேக மாயிரம் பேர்படக் கவந்தமொன் றாடுமக் கவந்தங்க ளநேக மாயிர மாடவெஞ் சிலைமணி யசைந்தொரு குரலார்க்கு மநேக நாழிகை யருச்சுனன் சிலைமணி யார்த்ததக் களம்பட்ட வநேக மாயிரம் விருதரை யளவறிந் தார்கொலோ வுரைக்கிற்பார். |
(இ -ள்.) அநேகம் ஆயிரம் பேர் பட (போரில்) பலஆயிரம் பேர் இறக்க, கவந்தம் ஒன்று ஆடும் - ஒருகவந்தம்[எழுந்துநின்று] கூத்தாடும்: அ கவந்தங்கள் அநேகம் ஆயிரம் ஆட - அத்தன்மையனவான கவந்தங்கள் பல ஆயிரம் எழுந்து கூத்தாட, வெம் சிலை மணி அசைந்து, ஒரு குலல் ஆர்க்கும்- பயங்கரமான வில்லிற்கட்டியுள்ள மணி அசைந்து ஒருமுறை ஒலிக்கும்; அருச்சுனன் சிலை மணி-(அத்தன்மையுள்ள) அருச்சுனனது காண்வவில்லின் மணி, அநேக நாழிகை ஆர்த்தது- (அப்போது) பலநாழிகைப் பொழுது ஒலித்தது; (என்றால்),- அ களம் பட்ட -அந்தப் போர்க்களத்தில் (அன்று) இறந்த, அநேகம் ஆயிரம் விருதரை - பலஆயிரம் வீரர்களை, ஆர்கொல் - யார்தாம், அளவு அறிந்து உரைக்கிற்பார் - (இவ்வளவென்று) தொகையறிந்து சொல்லவல்லார்? [எவருமில்லை யென்றபடி]; ஓ - அசை. இப்பாட்டிற்கூறிய மரபை " ஆனையாயிரந்தேர்பதினாயிர மடர் பரியொரு கோடி, சேனைகாவலராயிரம்பேர்படிற் செழுங்கவந்த மொன்றாடுங், கானமாயிர மாயிர கோடிக்குக் கவின்மணி கணிலென்னும், ஏனையம்மணியேழரை நாழிகை யாடிய தினிதன்றே" என்று கம்பராமாயணத்திலும் காண்க. இது, வடநூல்களிலுங் கூறப்பட்டுள்ளது. கவந்தம் - கபந்தம் என்ற வடசொல்லின் திரிபு: இதற்கு - தொழிலுடன் கூடின தலையற்ற உடலென்று பொருள். மணி - அடிக்கும்மணி, கண்டை. மணியில் அடிக்கிற உறுப்பை 'நா' என்றல் மரபாதலின், அதன் ஒலியை 'குரல்' என்றார். சொற்பொருட்பின்வருநிலை. (445) வேறு. 49.- படுகளச்சிறப்பு. வெவ்வாசிநெ டுந்தேர்மிசை நிமிராவரி விற்கொண் டிவ்வாறமர் புரிவேலையி லெழுசெங்குரு தியினா லவ்வாடர வுடையானழி யாயோதன மந்திச் செவ்வானக மெனசந்துசி வப்பேறிய தெங்கும். |
|