மடைந்தபோது வெயில்மிக்கதனா லாகிய தாபத்தைப் பொறுக்க மாட்டாமல் அத்தாமரையைவிட்டுப் பக்கங்களிலுள்ள சோலைகளிலிருக்கிற மரங்களின் நிழலில் மலர்ந்த வேற்றுப்பூக்களை நாடியடைகின்றன என்று, அக்காலத்தின் வெயில் மிகுதியை முன்னிரண்டடி விளக்கும். 'முருகார்' என்பது, வண்டுக்கு அடைமொழி; முருகுஆர்தல் - நறுமணத்தை யுட்கொள்ளுதலும் அழகுநிரம்புதலும் இளமைபொருந்துதலும் ஆம். (447) 51.- அருச்சுனன் அங்கு ஒருகுளம் உண்டாக்கல். விரவார்முனையடுதேர்நுகவெவ்வாசிகள்புனலுண் டுரவாவிடிலோடாவினியென்றையனுரைப்ப வரவாபரணன்றந்தருளருமாமறைவருணச் சரவாய்வரவெய்தானவணெழலுற்றதொர்தடமே. |
(இ-ள்.) (அப்பொழுது),- ஐயன் - (யாவர்க்குந்) தலைவனான கண்ணன், (அருச்சுனனை நோக்கி), 'விரவார் முனை அடு - பகைவரது போரை அழிக்கவல்ல, தேர் - (நமது) தேரினது, நுகம் - நுகத்தடியிற் பூட்டப்பட்டுள்ள, வெவ் வாசிகள் - விரைந்து செல்லத்தக்க குதிரைகள், புனல் உண்டு உரவா விடில் - நீர்பருகி வலிமையடையாவிட்டால் [இளைப்பாறாவிட்டால்], இனி ஓடா - இனிமேல் ஓடமாட்டா,' என்று உரைப்ப - என்றுசொல்ல,- (உடனே அருச்சுனன்),- அரவு ஆபரணன் தந்தருள் அரு மாமறை - நாகங்களை ஆபரணமாகவுடைய சிவபிரான் (தனக்குக்) கொடுத்தருளிய (பிறர்க்கு) அருமையான சிறந்த உருத்திரமந்திரம், வருணம் சரவாய் வர - வாருணாஸ்திரத்திலே அமையும்படி, எய்தான் - பாணப்பிரயோகஞ் செய்தான்; (அம்மாத்திரத்து,) அவண் - அங்கு, ஓர் தடம் - ஒருதடாகம், எழல்உற்றது - உண்டாயிற்று; ( எ -று.)- வருணாச்சரம் - நீர்க்கடவுளாகியவருணனைத் தெய்வமாகவுடைய அஸ்திரம். (448) 52.- இரண்டுகவிகள் - அக்குளத்தின் வருணனை. ஆழம்புணரியினும்பெரிததினும்பெரிதகலஞ் சூழெங்கணும்வண்டாமரைதுறையெங்கணுநீலங் கீழெங்கணுநெடுவாளைவரால்பைங்கயல்கெண்டை வாழுங்கரையருகெங்கணும்வளர்கின்னரமிதுனம். |
(இ-ள்.) ஆழம் - (அக்குளத்தின்) ஆழம், புணரியின்உம் பெரிது - கடலின் ஆழத்தினும் அதிகமானது; அகலம் -(அக்குளத்தின் அகலமும், அதின்உம் பெரிது -கடலின் அகலத்தினும் அதிகமானது; சூழ் எங்கண்உம்- (அக்குளத்தில்) சுற்றிலுமுள்ளஎவ்விடத்தும், வள் தாமரை - செழிப்பான தாமரைகளும்,- துறை எங்கண்உம் -(அக்குளத்தின் இறங்கு) துறைகளிலெல்லாம், நீலம் - கருங்குவளைகளும்,- கீழ்எங்கண்உம் - (அதன்) உள்ளிடம் முழுவதிலும், நெடு வாளை - நீண்டவாளைமீன்களும், வரால் - வரால்மீன் |