அழிந்தால்உம் - (உனது) சேனைகள் அழிவடைந்தாலும், நின்ஆண்மைக்கு அழிவுஉண்டுஓ - உனது பாராக்கிரமத்துக்கு அழிவுஉண்டாகலாமோ? (எ -று.) - இப்பாட்டில், இரண்டாம் அடி முதல் 65- ஆம் பாட்டிம் மூன்றாம் அடி வரையில்துரோணன்வார்த்தை. "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின், எண்ணுவ மென்பது இழுக்கு" என்றபடி நீ முன்னமே பகைவரது வல்லமையைக் கருதிச் சினந்தணிந்து சமாதானப்படாமல், உயிர்போவதானாலும் இராச்சியங்கொடுப்பதில்லையென்று கடுந்துணிபு கொண்டாய்; அங்ஙனந்துணிந்து போர்தொடங்கிவிட்டபின்பு அஞ்சுதலிலும் சோர்தலிலும் சிந்தித்தலிலும் பயனென்னை? சேனையழிந்தாலும் உனது தைரியங் குறையாலாகாது என்றனன். (458) 62. | உரனால்வருதேரொன்றினிலுற்றோரிருவரையு நரநாரணரிவரென்பர்கண்ஞானத்தினுயர்ந்தோர் அரனார்திருவருளான்முனையடல்வாளிகள்பலவும் வரனாலுயர்மறையும்பிறர்மற்றார்நனிபெற்றார். |
(இ-ள்.) உரனால் வரு - வலிமையோடு வருகிற, தேர் ஒன்றினில் - ஒரு தேரிலே, உற்றோர் இருவரைஉம் - பொருந்தியவரான ( அருச்சனன் கிருஷ்ணன் என்ற) இருவரையும், ஞானத்தின் உயர்ந்தோர் - தத்துவஞானத்தாற்சிறந்த பெரியோர்கள், நர நாரணர் இவர் என்பர்கள் -' நரனும் நாராயணனுமே இவர்கள்' என்று சொல்வார்கள்; (அன்றியும் அவ்விருவர்போல,) அரனார் திரு அருளால் - சிவபிரானது சிறந்த கருணையினால், முனை அடல் வாளிகள் பலஉம்- போரிற் பகையழித்தற்குஉரிய அம்புகள் பலவற்றையும், வரனால் உயர் மறைஉம்- வரமாகச்சிறந்த மந்திரங்களையும், பிறர் ஆர் நனி பெற்றார் - வேறு எவர் மிகுதியாகப் பெற்றவர்? [எவருமில்லை யென்றபடி]; ( எ -று.) வரனாலுயர்மறை - மிகவிரும்பித் தவம்முதலிய பெருமுயற்சி செய்து பெறப்படும் மந்திரம், 'மற்றார்நனிபெற்றார்'-- பிராசம். மற்று - அசை; வினைமாற்றுமாம். பி -ம்: ஞாலத்தில். (459) 63. | தவரோடவனின்றால்விதிதானுந்தரமல்லன் எவரோமலையோடும்பொருதிருதோள்வலிபெற்றார் உவரோதநிறத்தோனவன்விரைதேர்தனியூர்வா னவரோடினியமர்வெல்லுதலாராயினுமரிதால். |
(இ-ள்.) அவன்- அந்த அருச்சுனன், தவரோடு நின்றால் - (காண்டீவ) வில்லுடன் எதிர்நின்றால், விதி தான்உம் தரம் அல்லன் - படைத்தற்கடவுளான பிரமனும் (அவனையெதிர்க்கத்) தகுதியுடையானல்லன்; மலையோடுஉம் பொருது - மலையுடனே தாக்கிப் போர்செய்து, இரு தோள் வலி பெற்றார் - தமது இரண்டுதோள்களின்வலிமையை அழியாமற்பெற்றவர்கள், எவர்ஓ - யார் தாமோ? [எவருமில்லை யென்றபடி]; (அதுபோலவே),- அவன் விரை தேர் தனி ஊர்வான் - அவ்வருச்சுனனது விரைந்துசெல்லுந் தேரை |