பக்கம் எண் :

288பாரதம்துரோண பருவம்

சீர்களு மாகிய எண்சீராசிரியச்சந்தவிருத்தங்கள். ' தான தத்ததன தந்ததன
தந்ததன தான தத்ததன தந்ததன தந்ததன' என்பது, இவற்றிற்குச் சந்தக்
குழிப்பாம்.                                           
(473)

77.- அப்போது துரியோதனன் அருச்சுனனை எதிர்த்தல்.

ஏறியிட்டவன்விரைந்திரதமுங்கடவியேகலுற்றபினியம்பல
                                  தழங்கியெழ
வேறுபட்டமருடைந்தவர்களுந்திருகிமேலிடச்சகுனியுந்
                                தினகரன்சுதனு
மாறியிட்டரதகுஞ்சரதுரங்கமமுமாகவிப்படிபொரும்
                            படையொடன்றுநனி
சூறியிட்டனன்வலம்புரியலங்கல்புனைதோளிலெப்புவனமுந்தனி
                                 சுமந்தவனே.

     (இ-ள்.) ஏறியிட்டவன் - (இங்ஙனந்தேர்மேல்) ஏறின அருச்சுனன், இரதம்உம்
விரைந்து கடவி - அத்தேரையும்(கண்ணபிரானைக்கொண்டு) விரைவாகச்செலுத்தி,
ஏகல் உற்ற பின் - மேற்சென்றவுடனே,- வலம்புரி அலங்கல் புனை தோளில் எ
புவனம்உம் தனிசுமந்தவன் - நந்தியாவர்த்தப் பூமாலையை (அடையாளமாகத்)
தரித்ததோள்களிலே பூமிமுழுவதையுந் தனியேதாங்கிவனாகியதுரியோதனன்,- பல
இயம் தழங்கி எழு - பலவகைவாத்தியங்கள் மிக்கு ஒலிக்கவும்,- வேறுபட்டு அமர்
உடைந்தவர்கள்உம் திருகி மேல் இட - நிலைகலங்கிப் போரில் (முன்பு
அருச்சுனன்முன்) தோற்றோடினவர்க உம் ஆறியிட்ட ரத குஞ்சர துரங்கம்உம்
ஆக-(மாமனாகிய) சகுனியும் சூரியபுத்திரனாகிய கர்ணனும் (தெய்வப்பொய்கையில்
நீர்பருகி) இளைப்பாறின தேர்யானைகுதிரைகளுமாக, இப்படி பொரும் படையொடு-
இவ்வாறு போர்செய்யவல்ல சேனையுடனே, அன்று- அப்பொழுது, நனி
சூறியிட்டனன் - மிகவும் கோபாவேசங்கொண்டு வளைத்திட்டான்; (எ-று.)

     அருச்சுனன் பகையழித்துக் கண்ணனுடன்தேரேறி அப்பாற்செல்லுமளவிலே,
முன்பு துரோணனிடம் அழியாக்கவசம் பெற்ற துரியோதனன், அதனாற் செருக்கி,
சகுனியையும் கர்ணனையும் சேனைகளையும் உடன்கொண்டு, தோற்று மீள்கிற
தன்பக்கத்து வீரர்களையும் தைரியப்படுத்தி உற்சாகமுண்டாக்கி மீளவும் போர்க்கு
எழச்செய்துகொண்டு, மிகஉக்கிரமாக அருச்சுனனை யெதிர்த்துவந்தனனென்பதாம்.
'சூறியிட்டனன்' என்பதற்கு - சூழல் காற்றுப்போலக்கொடுமையோடு
வளைத்திட்டானென்றுபொருள்; சூறையென்பது சுழல்காற்றாதல் காண்க.
'தோளிலெப்புவனமுந் தனிசுமந்தவன்'- தோள்வலியாற் பூலோகமுழுவதையும்
பொதுமை நீக்கித் தானே தனியரசாள்கின்றவன் : தேர்செலுத்தியதை 'ஏறியிட்டவன்
விரைந் திரத முங்கடவி' என்று அருச்சுனன்மேல் ஏற்றி்க் கூறியது,
ஏவுதற்கருத்தாவின் வினை. தேர்க்குதிரைகள் இளைப்பாறியதை 'ஆறியிட்ட ரதம்'
எனத் தேர்களின்மேல் ஏற்றிக்கூறினார்; இது, ஒருபொருளின் வினையை மற்றொரு
பொருளின்மே லேற்றிக்கூறின உபசாரவழக்கு.                        (474)