பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்289

78.- அதுகண்டு அருச்சுனன் கண்ணனை வினாவுதல்.

யோதனத்திலிவனென்கணெதிரின்றளவும்யோசனைக்குமிடை
                          நின்றிலன்முனைந்துசமர்,
மோதுகைக்குநினைவுண்டுகொலெதிர்ந்துமிகமோகரித்து
                           வருகின்றதுதெரிந்ததிலை,
யாதுபெற்றனனெடுஞ்சிலைகொல்வெங்கணைகொலேதமற்றகவ
                            சங்கொலிரதங்கொலென,
மாதவற்கிடைவணங்கியிதுவென்கொலென வாசவக்
                      கடவுண்மைந்தனுரைதந்தனனே.

     (இ-ள்.) 'இன்றுஅளவுஉம் - இன்றைத்தினம் வரையிலும், இவன் -
இத்துரியோதனன், யோதனத்தில் - யுத்தத்திலே, என் கண் எதிர் - எனது
கண்ணுக்கு எதிரிலே, யோசனைக்குஉம் இடைநின்றிலன்-யோசனைத்தூரத்
தினுள்ளும்நின்றானில்லை; (அப்படிப்பட்டவன் இப்பொழுது), எதிர்ந்து-
(என்னை) எதிர்த்து, மிகமோகரித்து வருகின்றது - மிகவும்
வீராவேசங்கொண்டுவருகிறசெயல், முனைந்துசமர் மோதுகைக்கு நினைவு
உண்டுகொல். - உக்கிரங்கொண்டு தாக்கிப்போர்செய்தற்கு
எண்ணமுண்டானதனாலேயோ? (வேறு எதனாலேயோ?) தெரிந்ததுஇலை -
தெரியவில்லை; (அன்றியும்), நெடுஞ் சிலை கொல் - சிறந்த வில்லையோ,
வெங் கணை கொல் - கொடியஅம்புகளையோ, ஏதம் அற்ற கவசம் கொல் -
அழிவில்லாத கவசத்தையோ, அரதம் கொல் - அப்படிப்பட்ட) தேரையோ, யாது
பெற்றனன் - (இவற்றில்) எதனைப் பெற்றனோ?' என - என்று எண்ணி, -
வாசவன்கடவுள் மைந்தன் - தேவேந்திரனது குமாரனான அருச்சுனன்,- மாதவற்கு
இடைவணங்கி - கண்ணபிரானது முன்னிலையிலே தொழுது,- இது என்கொல் என
உரைதந்தனன் - இது என்னகாரணத்தாலோ? என்று வினாவினான்; (எ-று.)

     அங்ஙனம் துரியோதனன் மிக்கயுத்தாவேசத்தோடு படையெடுத்து வந்ததனைக்
கண்ட அருச்சுனன், கண்ணபிரானைத் தொழுது அதன்காரணத்தைக் கேட்டன
னென்பதாம்.                                                 (475)

79.- அதற்குக் கண்ணன் விடைகூறுதல்.

ஈசனப்பொழுதுணர்ந்தருளிவென்றிவரியேறுவிற்குரியபற்
                              குனனுடன்பழைய,
வாசவற்கயன்வழங்குகவசந்துவசமாசுணற்கருளினன்
                                 கலசசம்பவனு,
மாசுகத்தினிலொழிந்தபலதுங்கமுனையாயுதத்தினிலழிந்திடு
                                 வதன்றதனை,
நீசெகுத்திடுதியென்றுதுரங்களையுநேர்படக்கடவினன்கதி
                                 விதம்படவே.

     (இ-ள்.) ஈசன் - (யாவர்க்குந்) தலைவனான கண்ணபிரான்,- அப்பொழுது-,
உணர்ந்தருளி - (நடந்தசெய்தியைத் தனது முற்றுணர்வினால்) அறிந்து,- வென்றி
வரிஏறு விற்கு உரிய பற்குனனுடன் - வெற்றியைத் தருகிற கட்டமைந்த சிறந்த
(காண்டீவ) வில்லுக்கு உரிய அருச்சுனனுடனே,-'வாசவற்கு அயன் வழங்கு -
தேவேந்திரனுக்குப் பிரமன்(முன்பு) கொடுத்த, பழைய கவசம் -
பழமையானகவசத்தை, கலச சம்பவன்உம் - துரோண கும்பத்தினின்று
தோன்றியவனான துரோணனும், துவசம் மாசுணற்கு - கொடியிற்
பெரும்பாம்புவடிவமுடையவனான துரியோ