பக்கம் எண் :

பதினோராம் போர்ச்சருக்கம்29

மையிற் பிரசித்திபெற்றது. இந்தச்சனி ஸ்தாநப்ரஷ்டம் தநஷயம் மரணம் முதலிய
பெருந்தீங்குகளைச் செய்யுமென்பது, நூல்துணிபு. இங்கு, வேறிடத்தில் தனியே
அழைத்துப்போய்ச்சூழ்ந்து மிகவருத்துதற்கு ஏற்ற உவமையாம்.         (40)

41.- இதுமுதல் மூன்று கவிகள் - சஞ்சத்தகர்கள் கூறும் வஞ்சினங்கள்.

அருளேவடிவுகொண்டனையோனருகங்கமரிலணுகாமல்
உருளேரிதத்தருச்சனனையொருநாண்முழுதுந்தகைந்திலமேன்
மருளேகொண்டுகுடிவருந்தமனுநூல்குன்றிவழக்கழியப்
பொருளேவெஃகுமரசரைப்போற்புகுவேம்யாமுநரகென்றார்.

     (இ- ள்.) 'அமரில்- போர்க்களத்தில், அங்கு - எதிர்ப்பக்கத்திலே, அருள்ஏ
வடிவுகொண்டு அனையோன் அருகு - கருணையே ஒருபுருட
வடிவங்கொண்டாற்போன்ற தருமபுத்திரனது சமீபத்தில், அணுகாமல் -
சேரமுடியாதபடி, உருள் ஏர் இரதத்து அருச்சுனனை- சக்கரங்கள் (வலிய) அழகிய
தேரையுடைய அருச்சுனனை, ஒரு நாள் முழுதுஉம் தகைந்திலம்ஏல்-
நாளையொருதினம் முழுவதிலும் (நாங்கள் தடுத்திடோமாயின்,- குடி மருள் கொண்டு
வருந்த - (தம் நாட்டுச்) சனங்கள் (இன்னது செய்வதென்று அறியாமல்)
திகைப்பையே கொண்டு வருந்தவும், மனு நூல் வழக்கு குன்றி அழிய - மனுதர்ம
சாஸ்திரத்தின் நீதி குறைபட்டு அழியவும், பொருளே வெஃகும்- (குடிகளின்)
செல்வத்தையே(கவர) விரும்புகிற, அரசரை போல் -கொடுங்கோன்
மன்னர்களைப்போல, யாம்உம் நரகு புகுவேம் - நாங்களும்நரகத்திற்சேர்வோம்,'
என்றார்- என்று (திரிகர்த்தன் முதலியோர்) சபதங்செய்தார்கள்;(எ-று.)

     தருமச்செய்கைகளுக்கும் மறுமைநற்கதிக்குங் காரணமான கருணையை
இயல்பில் மிகுதியாகவுடையனென்பார், 'அருளே வடிவு கொண்டனையோன்'
என்றார். பகைவரே இங்ஙனம் தருமனைச் சிறப்பித்துக் கூறின ரென்றது கொண்டு,
அவனது நற்குணவமைதியை நன்கு உணர்க.                           (41)

42.மறனிற்சிறந்தபுயவலியால்வரைபோன்றனிலன்மைந்தனெனப்
புறனிற்பானைத்தம்முனிடைப்போகாவண்ணந்தகைந்திலமேல்
அறனிற்கொண்டதன்மனையாளமளித்தலத்தினழுதிரங்கப்
பிறனிற்றேடும்பெரும்பாவிபெறும்பேறெமக்கும்பேறென்றார்.

     (இ -ள்.) 'அனிலன் மைந்தன் என - வாயுவின் குமாரனென்று சொல்லப்பட்டு,
புறன் நிற்பானை- (எப்பொழுதும் தருமன்) பின்னே (பாதுகாவலாய்) நிற்பவனான
வீமனை, தம்முனிடை போகா வண்ணம் - (அங்ஙனம் துணைசெய்தற்குத்)
தமையனான யுதிட்டிரனிடத்துச் செல்லவொட்டாதபடி, மறனில் சிறந்த புயம்
வலியால்- பராக்கிரமத்தோடுகூடிச் சிறப்புற்ற (எங்கள்) தோள்களின் வலிமையால்,
வரைபோன்று- மலை ( குறுக்கிட்டு வழிதடுத்தல்) போல, தகைந்திலம் ஏல்-
தடுத்திடோமாயின்,- அறனின் கொண்ட - தருமமாக மணஞ்செய்துகொள்ளப்பட்ட,
தன் மனையாள் - தனக்குஉரிய