களைச் செலுத்துபவர்கள், பட்டனர் - இறந்தார்கள்; நெடுந் துவசம் - நீண்டகொடிகள், மறிந்தன - முறிந்துவிழுந்தன; மோதுதற்கு எதிர் முனைந்தவர் - தாக்கிப்போர்செய்தற்பொருட்டு அருச்சுனனெதிரில் உக்கிரமாக வந்தவர்களுடைய, சிரங்கள் - தலைகள், பொழி -(உடைப்பட்டு) வெளிச்சொரிந்த, மூளையின் - மூளைகளினால், களம் அடங்கலும் - போர்க்களம்முழுவதும், நெகிழ்ந்து - நெகிழ்ச்சி பெற, அரசர் - பகையரசர்களது, ஆதபத்திரம் - குடைகள், அழிந்தன-;- இவன் தனுடன் தரத்தொடு சரம்தொட இயைந்தவர் - இவ்வருச்சுனனுடன் வலிமையோடு (எதிர்த்து) அம்புதொடுக்கத் தொடங்கினவர்கள், ஆர்-யாவர்? [எவருமில்லை]; (எ-று.) மதங்கஜம் என்பதற்கு - மதங்கமுனிவனிடத்தினின்றும் (ஆதிகாலத்தில்) உண்டானதென்று காரணப்பொருள். பி -ம்:- ஆர்சரத்தொடு, ஆதரத்தொடு. (478) 82.- அருச்சுனன்முன் பகைவீரர்பலர் தோற்றல். ஆரமர்க்கண்மிகநொந்திரவிமைந்தனெடிதாகுலத்தொடு மிரிந்தனன்விரிந்தமணி, வார்கழற்சகுனியுந்துணைவருந்தமுகமாறியிட்டனர்மறிந்தனர் கலிங்கர்பலர், சீருடைக்கிருதனுங்கிருபனும்பழையசேதிவித்தகனுமஞ் சினரொடுங்கினர்கள், பூரிபட்டிலனெருங்கியணிநின்றுபொருபூபர்பட்டன ரொழிந்தவர்புறந்தரவே. |
இதுவும், அடுத்த கவியும் - குளகம். (இ-ள்.) ஆர் அமர்க்கண் - அருமையான அப்போரிலே,- இரவி மைந்தன் - சூரியகுமாரனான கர்ணன், மிக நொந்து - மிகவும் வருந்தி, நெடிது ஆகுலத்தொடுஉம் - மிக்க கலக்கத்துடனே, இரிந்தனன் - தோற்றுஓடிப்போனான்; விரிந்த மணி - ஒளிவீசுகிற இரத்தினங்கள் பதித்த, வார் கழல் - நீண்ட வீரக்கழலையுடைய, சகுனியும்-, துணைவர்உம்- (அவனது) தம்பிமார்களும், தம் முகம் மாறி யிட்டனர் - தமதுமுகம்மாறிப் புறங்கொடுத்திட்டார்கள்; கலிங்கர் பலர் - கலிங்கதேசத்து அரசர்பலரும், மறிந்தனர் - தோற்றுத்திரும்பினார்கள்; சீர் உடை - சிறப்புடைய, கிருதன்உம் - கிருதவர்மாவும், கிருபன்உம்- கிருபாசாரியனும், பழைய சேதி வித்தகன்உம்- பழமையான சேதிதேசத்து அரசனும், அஞ்சினர் ஒடுங்கினார்கள் - பயந்து ஒடுங்கினார்கள்; பூரி - பூரிசிரவாவென்பவன், பட்டிலன் - இறந்தானில்லை [உயிர்மாத்திரத்தோடு மீண்டானென்றபடி]; நெருங்கி அணி நின்று பொரு பூபர் - நெருக்கங்கொண்டு படைவகுப்பிலே நின்று போர்செய்த அரசர்களில், பட்டனர் ஒழிந்தவர் - இறந்தவர்கள்போகஎஞ்சியவரெல்லாம், புறம் தர - முதுகுகொடுக்க,- (எ -று.)-"தரணிமண்டலதுரந்தரன்முனைந்தனன்" என வருங்கவியோடு தொடரும். இரிந்தனன், முகம்மாறியிட்டனர், மறிந்தனர், அஞ்சினர் ஒடுங்கினர்கள், பட்டிலன், புறந்தர என்ற பல சொற்களில் தோற்றுச் செல்லுத லென்ற ஒரு பொருளேவந்தது, பொருட்பின்வருநிலையணி. கலிங்கம் எழுவிதப்படுதலால், கலிங்கர்பலரென்றதென்பர். (479) |