(இ-ள்.) யார்உம் போரில் எளிவர-(தன்னையெதிர்ப்பவர்) எல்லாரும் யுத்தத்தில்எளிமையடையும்படி, வீரம் சாரும் சாபந் தன்னொடு-போர்த்திறம் பொருந்தியவில்லுடனே, நேமி தேர்உம் தான்உம் சென்றிடுவோனை - சக்கரவலிமையுள்ளதேரும் தானுமாக (த் தடையறச்) செல்பவனான சாத்தகியை, கூரும் சாபம் குரு-மிக்கவில்வித்தையில்வல்ல துரோணாசாரியன், எதிர் கண்டான்-; (எ - று.)-பி-ம்:ஆரும்போரிலழிதர. (502) வேறு. 106.-துரோணன் போர்க்குஅழைக்க, சாத்தகி மறுமொழிகூறல். ஏக லேகலென னுடனினி யமர்புரிந் தேகென் றாகு லம்படத் தகைந்தன னடற்சிலை யாசான் மேக வண்ணனுக் கிளவலும் வேதிய ருடன்போர் மோக ரிப்பது தகுதியன் றெனக்கென மொழிந்தான். |
(இ-ள்.) 'ஏகல் ஏகல்-போகாதே; இனி-இப்பொழுது, என்னுடன் அமர் புரிந்து-என்னோடு போர் செய்தே, ஏகு-(பின்பு அப்பாற்) செல்,'என்று - என்றுசொல்லிக்கொண்டு, ஆகுலம்பட-ஆரவாரமுண்டாக, அடல் சிலை ஆசான்- வலிய வில்லாசிரியனான துரோணன், தகைந்தனன்-(சாத்தகியைத்) தடுத்தான்; (அப்பொழுது), மேகவண்ணனுக்கு இளவல்உம்-மேகம் போன்ற திருநிறமுடையனான கண்ணனுக்குத் தம்பியாகியசாத்தகியும், 'வேதியருடன் போர் மோகரிப்பது- பிராமணருடனே கொடுமையாகப்போர்செய்வது, எனக்கு தகுதி அன்று-,'என மொழிந்தான்-என்று சொன்னான்; (எ - று.) இங்ஙனம் உபசாரமாகக்கூறிய சாத்தகிவார்த்தையில், 'நீ உன்சாதிக்கு இயல்பில்உரியதல்லாத போர்த்தொழிலை மேற்கொண்டாயாயினும், க்ஷத்திரிய தருமந்தவறாதவனான யான் துணிவுடையேனல்லேன்' என்ற இகழ்ச்சியுந்தோன்றும். இதுமுதற் பதினைந்து கவிகள்-பெரும்பாலும் முதற்சீரும் ஐந்தாஞ்சீரும் மாச்சீர்களும், மற்றைமூன்றும் விளச்சீர்களு மாகிய கலிநிலைத்துறைகள். (503) 107.- இருவரும் பொருது இளைத்தல். இருவருந்தமதிருசிலையெதிரெதிர்குனித்தார் இருவருங்கொடும்பகழியுமுறைமுறையெய்தார் இருவருந்தமதேர்சிலையாவையுமிழந்தார் இருவரும்பெரும்பொழுதமர்திளைத்தனரிளைத்தார். |
(இ-ள்.) இருவர்உம்-(துரோணன் சாத்தகி யென்ற) இரண்டுபேரும், தமது இரு சிலை - தம்வில்இரண்டையும், எதிர் எதிர் குனித்தார்-(ஒருவர்க்கொருவர்) எதிரிலே வளைத்தார்கள்; இருவர்உம்-, கொடும்பகழிஉம்-கொடிய அம்புகளையும், முறை முறை எய்தார்-(ஒருவர்மேல்ஒருவர்) மாறிமாறிப் பிரயோகித்தார்கள்; |