பக்கம் எண் :

308பாரதம்துரோண பருவம்

(தனது) இரண்டுகால்களும் சிவக்க, பூனைபோல் போனான் - பூனைபோல
(ஒடுங்கித்தந்திரமாகத் தப்பியோடி)ச் சென்றான்;(எ - று.)

110.-சாத்தகி பலரையும் வென்று அருச்சுனனைச் சார்தல்.

இடையில்வந்துவந்தெதிர்த்தவர்யாரையுங்கடந்து
புடைவருந்தனதனீகினிநிழலெனப்போதத்
தடையறும்படிதருக்குடன்சார்பெரும்பருவ
விடைநடந்தெனநடந்தனன்விசயனின்றுழியே.

     (இ-ள்.) (இங்ஙனந் துச்சாதனனை வென்ற சாத்தகி),- இடையில் வந்து
வந்துஎதிர்த்தவர் யாரைஉம் கடந்து - நடுவிலே மிகுதியாகவந்து
எதிர்த்தவர்களெல்லாரையும் வென்று,-புடை வரும் தனது அனீகினி நிழல் என
போத - பக்கங்களிலேவருகிற  தனதுசேனை நிழல்போல விடாமல்தொடந்துவர,-
தடை அறும்படி-தடையில்லாமல், தருக்குடன் சார் பெரும் பருவம் விடை நடந்து
என - களிப்போடு பொருந்திய சிறந்த காளைப்பருவத்தையுடைய எருது
சென்றாற்போல, விசயன் நின்ற உழிநடந்தனன்- அருச்சுனனுள்ள இடத்திற்
சென்றான்; (எ - று.)-அநீகம் - குதிரை முதலியவற்றின் கூட்டம்:அதனையுடையது
அநீகிநீ.                                                     (507)

111, 112. -இவ்விரண்டுகவியும்-குளகம்:பின்பு தருமன்
வீமனையும் ஏவுதலைத் தெரிவிக்கும்.

பின்னருங்கொடிமுரசுடைப்பெருந்தகைவருந்தி
முன்னநின்றவாயுவின்மகன்முகனுறநோக்கி
மன்னரெண்படுவடுரூதினிவாரியினாப்ப
ணென்னராயினரும்பியுமெம்பெருமானும்.

தகலருந்திறற்சாத்திகிதன்னையும்விடுத்தேம்
பகலுமேற்றிசைப்பட்டதுபாஞ்சசன்னியமும்
புகலுகின்றதுபோர்முகத்ததிர்குரல்பொம்ம
விகல்வலம்படநீயுமங்கேகுதியென்றான்.

     (இ-ள்.) (111) பின்னர்உம் - (சாத்தகியை யனுப்பின) பின்பும்,-கொடி
முரசுஉடை பெருந்தகை - துவசத்திலே முரசவாத்தியவடிவத்தையுடைய
பெருமைக்குணமுள்ளவனான தருமபுத்திரன்,-வருந்தி -(அருச்சுனன்
விஷயத்திலுண்டான சங்கையால் முன்போல) வருத்தமடைந்து,-முன்னம் நின்ற
வாயுவின் மகன் முகன் உற நோக்கி-(தன்) எதிரில்நின்ற வாயுகுமாரானான
வீமசேனனுடைய முகத்தை அன்புபொருந்தப் பார்த்து,-'மன்னர் எண் படு வரூதினி
வாரியின் நாப்பண் - அரசர்களுடைய பெருந்தொகைபெற்ற சேனையாகிய கடலின்
நடுவிலே, உம்பிஉம் எம்பெருமான்உம் - உனது தம்பியான அருச்சுனனும் எமது
தலைவனான கண்ணபிரானும், என்னர் ஆயினர் - எத்தன்மையரானார்களோ? (112)
தகல் அருந்திறல் சாத்தகிதன்னைஉம் விடுத்தேம்-தகுதியுள்ள அருமையான
வலிமையையுடைய சாத்தகியையும் யாம் அனுப்பினோம்: பகல்உம் மேல்திசை
பட்டது - சூரியனும்