(குறிப்புரை,) கலிங்கரும் ***கொப்பளதேசத்தவரும் முதலானவர்களாய்க் குறுக்கிட்டவர்களை (இறந்து) வீரசுவர்க்கமடையும்படி ஒழித்துக்கொண்டு, (வீமன்), அப்பால் (வியூகத்தினுள்)விரைவாசகச்சென்றான்; (எ - று.) 115.-துரியோதனன்தம்பியர்பலர் வீமனை இடைஇடையே தடுத்தல். உரங்கவெங்கொடியுயர்த்தகாவலன்றனக்கிளையோர் துரங்கமாதிகொள்பலபெருஞ்சேனையிற்சூழ்ந்தோர் இரங்குமாழ்கடல்பேருகவிறுதியிலெறியுந் தரங்கநேரெனவிடையிடைதனித்தனிதகைந்தார். |
(இ-ள்.) துரங்கம் ஆதி கொள் - குதிரைமுதலியவற்றைக் கொண்ட, பலபெருஞ்சேனையின்-பல பெரியசேனைகளினால், சூழ்ந்தோர், சூழப்பட்டவர்களாகிய, வெம்உரங்கம் கொடி உயர்த்த காவலன் தனக்கு இளையோர்-பயங்கரமானபாம்புக்கொடியை உயர நிறுத்தின துரியோதனராசனது தம்பியர்,-இரங்கும் ஆழ்கடல் பேருகம் இறுதியில் எறியும் தரங்கம் நேர் என- ஒலிக்கின்ற ஆழ்ந்த கடல்மகாகற்பமுடிவுகாலத்தில் (உலகையழிக்குமாறு) வீசுகிற அலைகள் (தமக்கு)ஒப்பென்னும்படி, இடை இடை, தனி தனி தகைந்தார் - (வீமசேனனை) நடுவிலேநடுவிலே தனித்தனியே தடுத்தார்கள் (எ-று.)-உரங்கம்- உரகம் என்பதன்விகாரம்.'பேருகவிறுதி' என்பது-பிரமனது ஆயுளின்முடிவை; ஊழிக்காலத்துப்பொங்கியெழும்பெருங்கடலினலைகளை உவமை கூறியதனால், அவர்களுடைய சேனைப்பெருக்கம்விளங்கும். (512) 116.- அவர்கள் வீமன்மேற் படைக்கலம் வழங்குதல். முல்லைமல்லிகையுற்பலங்குமுதமாமுளரி பல்லம்வாளயில்சூலமென்பனமுதற்பகழி யெல்லையில்லனவிடையறாவகைதொடுத்தெதிர்ந்தார் வில்விதங்களில்யாவையும்பயின்றகைவிறலோர். |
(இ-ள்.) வில் விதங்களில் - விற்போர் வகைகளிலே, யாவைஉம் பயின்ற - எல்லாவற்றையும் பழகித்தேர்ந்த, கை விறலோர்-கைத்திறமையை யுடையவர்களானஅத்துரியோதனனதுதம்பிமார்,-முல்லை மல்லிகை உற்பலம் குமுதம் மா முளரி -முல்லை முதலியவற்றின் அரும்புபோன்ற முனையையுடைய அம்புகளும், பல்லம் -பல்லமென்னும் அம்புவிசேடங்களும், வாள் - வாளும், அயில் - வேலும், சூலம் -சூலமும், என்பன முதல்- என்கிற இவை முதலான, பகழி - ஆயுதங்களை, எல்லைஇல்லன-அளவில்லாதனவாக, இடை அறா வகை தொடுத்து - இடைவிடாமல்மேன்மேற் பிரயோகித்துக்கொண்டு, எதிர்ந்தார் - (வீமனை) எதிரிட்டார்கள்; 'முல்லை' முதலியன-அந்தந்தஅரும்புபோலக் கூர்நுனி யமைக்கப்பட்ட அம்புகளை யுணர்த்தின, முளரி-, "தாமரைத்தலையவாளி" என்றார் கம்பரும்; இது - வடமொழியில் 'நாளீகாஸ்த்ரம்' எனவும், தமிழில் 'மொட்டம்பு' எனவும்படும். பகழி என்ற அம் |