களையுடைய, நெடுங்கடல் - பெரியகடலினால், ஊழிஉம் பெயர்கின்றது எனும் படி -கற்பம் மாறுகிறதென்று சொல்லும்படி, ஓதை விஞ்ச - ஆரவாரம் அதிகப்பட,-உடன்று - பகைத்து, சினம் கொடு - கோபங்கொண்டு, எண் திசைஉம் -எட்டுத்திக்குகளிலும், படை சூழ - சேனைகள் சூழ வந்து வளைந்தனர்-வந்து(வீமனைச்) சூழ்ந்துகொண்டார்கள்;-(எ - று.) பிரளயப்பெருங்கடலின் பேரொலிக்கு ஒப்பான ஆரவாரத்தைச்செய்துகொண்டு கொடிய பலவீரர்கள் சேனைகளோடும் வீமனை ஒருங்குசூழ்ந்தன ரென்க. அந்தகன் - (பிராணிகட்கெல்லாம்) அழிவைச் செய்பவனென்று பொருள், கடலூழியும் - கடலும்ஊழியும் என்று கூறுவாரு முளர். (522) 126.-பூரியையும் அவந்திராசனையும் வீமன் வெல்லுதல். காரிலைந்துமடங்குபுலம்பின காகளஞ்சுரிசங்குமுழங்கின பேரிபம்பினகொம்புதழங்கின பேரியங்கள்பெயர்ந்துகறங்கின பூரியும்பொருதஞ்சியவந்தியர் பூபனும்புறமன்றிடவெங்கணை மாரிசிந்திமலைந்தனன்வெஞ்சின மாறமுன்பவனன்றிருமைந்தனே. |
(இ-ள்.) (அப்பொழுது),-காரில் ஐந்து மடங்கு - மேகங்களினும் ஐந்துபங்கு அதிகமாக, காகளம் - எக்காள மென்னும் ஊது கருவி, புலம்பின - ஒலித்தன; சுரி சங்கு-உட்சுழிந்த சங்கவாத்தியங்கள், முழங்கின - ஒலித்தன; பேரி - பேரிகைகள், பம்பின-ஒலித்தன; கொம்பு - ஊதுகொம்புகள், தழங்கின - ஒலித்தன; பேர் இயங்கள் - பெரிய (மற்றும்பல) வாத்தியங்கள், பெயர்ந்து கறங்கின- கிளர்ந்துஒலித்தன; பூரிஉம் - பூரி என்னும் அரசனும், அவந்தியர் பூபன்உம் - அவந்திதேசத்தவரரசனும், பொருது-(தன்னுடன்) போர்செய்து, அஞ்சி - பயந்து, அன்று புறம் இட - அப்பொழுதே முதுகுகொடுக்கும்படி, பவனன் திரு மைந்தன்- வாயுவினது சிறந்தகுமாரனான வீமன், வெம் கணை மாரி சிந்தி - கொடிய அம்புமழையைப்பொழிந்து, வெம் சினம் மாற - (தனது) கடுங்கோபம் அடங்க, முன்- எதிர்நின்று, மலைந்தனன்-போர்செய்தான்;
பொருட்பின்வருநிலையணி,' 'புலம்பல்' என்பது தொனித்த லென்னும் பொருளதாதலை "முழங்கல் தழங்கல் கத்தல் புலம்பல்" என்ற பிங்கலந்தையினாலும் உணர்க. பூபன்-பூமியைக் காப்பவன்; வடசொல். (523) 127.-வீமனுடன் கர்ணன் போர்செய்யத் தொடங்குதல். மாசுணந்தலைநொந்துசுழன்றன மாதிரங்கண்மருண்டுகலங்கின வீசுதெண்டிரையம்புவெதும்பின மேலையண்டமும்விண்டுபகிர்ந்தன பூசலின்கணுடன்றுகழன்றவர் போர்தொடங்கநினைந்துபுகுந்தனர் ஆசுகன்றிருமைந்தனுடன்சுட ராதபன்குமரன்சமர்முந்தவே. |
(இ-ள்.) ஆசுகன் திரு மைந்தனுடன் - வாயுவினது சிறந்த குமாரனான வீமனோடு, சுடர் ஆதபன் குமரன் - பிரகாசத்தை |