உம் - (நெடுந்தூரம்) விளங்குகின்ற பெரிய மலைகள்போன்றதோள்களும், துனித்த நெஞ்சம்உம்-கோபங்கொண்ட மனமும், முரிந்தன புருவம்உம்-கோபத்தால்) நெறித்தனவான புருவங்களும், எரிந்த கண்கள்உம்-(கோபாவேசமிகுதியால்) தீப்பொறிபறக்கப்பெற்ற கண்களும், தோன்ற - காணப்பட, பனித்த தேரொடுஉம் - அசைந்துசெல்லுகிற தேருடனே, (கர்ணன்), போர் உடன்று எழுதரும் பரிதியின் - போர்செய்தற்கு உக்கிரங்கொண்டுபுறப்படுகிற சூரியன் போல, விரைந்து எய்தி - விரைவாக (வீமனை) அடைந்து,-இளவலோடு - (உண்மையில் தனது) தம்பியான அவனுடனே,-இனி தராதலம் உரககேதனற்கு - இனிமேல் நிலவுலகம் பாம்புக்கொடியனான துரியோதனனுக்கே (நிலைத்திடும்),'என - என்று (யாவருஞ்) சொல்ல, இகல் செய்தான்-; துரியோதனாதியரைக் கொல்வே னென்று சபதஞ்செய்துள்ளவனும் வலிமையிற் சிறந்தவனுமான உன்னை இப்பொழுது நான் கொல்வேன்; கொல்லவே, பின்பு அவர்களை வெல்லவல்லா ரெவரும் இல்லை யாதலால் துரியோதனனுக்கே இராச்சியம் நிலைபெற்றிடும் என்றபடி, 'போருடன்றெழுதரும் பரிதி'என்றது- தனக்குப்பகையாகிய இருளையெதிர்த்துத் தாக்கி யழித்தற்கு வெம்மையோடு உதிக்கிறசூரியனென்றபடி;(மந்தேகரென்னும் அரக்கர்களுடன்) போர்செய்து அவர்களையழித்துக்கொண்டு உதயஞ்செய்கிற சூரியன்போல வென்றலும் பொருந்தும். இனி, பனித்த கோளொடும் போருடன்றெழுதரும் என்ற பாடத்திற்கு -தான் அஞ்சுவதற்குக் காரணமான இராகுவென்னுங் கிரகத்துடனே உடன்றெழுதரும்என்று இல்பொருளுவமை யாக்குக. (531) 135.- வீமனும் கர்ணனும் எதிர்த்த நிலைமை. ஆற்றையொத்தனகால்வழியளைபுகுமாமைதொட்டடன்மள்ளர் சேற்றையொத்தனநித்திலமெடுத்தெறிசெல்வநீள்குருநாடன் காற்றையொத்தனன்வலியினாற்சினத்தினாற்கதிரவன்றிருமைந்தன் கூற்றையொத்தனன்பிறப்பிலேதுவக்குளோர்குணங்களுங் கொள்ளாரோ. |
(இ-ள்.) ஆற்றை ஒத்தன கால் வழி - (பெருமையினாலும் நீர்மிகுதியினாலும்) ஆறுபோன்றனவாயுள்ள வாய்க்கால்களின் வழியாய், அளை புகும் - குழைசேற்றுக் கழனிகளிற் சேர்கிற, ஆமை தொட்டு - ஆமைகளைக்குறித்து, அடல் மள்ளர் - வலிமையையுடைய உழவர்கள், சேற்றை ஒத்தன நித்திலம் எடுத்து எறி- அச்சேற்றைச்சார்ந்துள்ளனவான முத்துக்களை யெடுத்து வீசியடிக்கிற, செல்வம் - செல்வச்சிறப்பு, நீள் - மிக்க, குருநாடன் - குருநாட்டுக்கு உரியனான வீமன், - வலியினால் - தேகபலத்தால், காற்றை ஒத்தனன் - காற்றைப்போன்றான்; கதிரவன் திரு மைந்தன் - சூரியனது சிறந்த குமாரனான கர்ணன் சினத்தினால்-கோபத்தால், கூற்றை ஒத்தனன் - யமனைப்போன்றான்; பிறப்பில் துவக்கு உளோர் குணங்கள்உம் கொள்ளார் ஓ-பிறப்பிலே சம்பந்தமுள்ளவர்கள் (அச்சம்பந்த முடையார்க்கு உரிய குணங்களையுங் கொள்ளமாட்டார்களோ? (தவறாமற் கொள்வரென்றபடி); (எ - று.) |