செய்வரோ? [செய்யார் என்றபடி]; (எ - று.)-என்று வீமன் கூறினா னென்க. 'துரியோதனன் முதலியோர்போ லன்றிச் சபையில் நியாயம் பேசின விகர்ணன்விஷயத்தில் வீமன் நன்றிமறவாமையோடிருந்தன னாதலாற்போர்செய்யே னென்றான்'என்ற சிறப்புப்பொருளை, சிறந்த நீதிமுறையை யுணர்ந்தவர் செய்ந்நன்றி சிதைப்பரோஎன்ற பொதுப்பொருள்கொண்டு விளக்கியது - வேற்றுப்பொருள் வைப்பணி -பார்என்பது - உலகமென்பதுபோல உயர்ந்தோரைக்காட்டு மென்னலாம்;பாரறிந்தபழி-உலகோர் பழியென்றறிந்த குற்றமென்க. பி- ம்: பாரறிந்து. (542) 146.-விகர்ணன் போர்தொடங்குதல். வீமனிப்படிச்சொல்லவும்வேரியந் தாமமுற்றதடவரைத்தோளினான் மாமணிச்சிலைவாங்கியவ்வீமன்மேற் றீமுகக்கணையுஞ்சிலசிந்தினான். |
(இ-ள்.) வீமன் இப்படி சொல்லவும்-, (கேளாமல்), வேரி அம்தாமம் உற்ற தடவரை தோளினான் - வாசனையுள்ள அழகிய (போர்) மாலைபொருந்திய பெரியமலைபோலுந் தோள்களையுடையவனான விகர்ணன்,-மா மணி சிலை வாங்கி-பெரிய சிறந்த வில்லை வளைத்து, அவ்வீமன்மேல்-,தீ முகம் கணைஉம் சிலசிந்தினான்-நெருப்புப்போலக் கொடிய கூர்நுனியுள்ள சில பாணங்களையும் பிரயோகித்தான்; (எ - று.)-இச்செய்யுளில் 'சிலைவாங்கி' என்பது, கீழ்143- ஆஞ் செய்யுளில் "சிலைவாங்கலும்"என்றதன் அநுவாத மென்க. பி-ம்: சிந்தியே. (543) 147.- விகர்ணன் வீமனை வலியப் போர்க்கு அழைத்தல். எம்முனோர்களெனைவருமுங்கையில் வெம்முனைக்கணையால்விளிந்தேகவும் உம்முன்யாரனொருவேனுமுய்வேன்கொலோ வம்மின்வார்சிலைவாங்குகென்றோதினான். |
(இ-ள்.) 'எம் முன்னோர்கள் எனைவர்உம் - எனது தமையன் மார்களெல்லாரும், உம் கையில் - உமது கையினாலெய்யப்படுகிற, வெம்முனை கணையால் - கொடிய நுனியையுடைய அம்புகளினால், விளிந்து ஏகஉம் - இறந்து போகவும், உம் முன் - உமது முன்னிலையில், யான் ஒருவேன் உம் உய்வேன் கொல்ஓ - நானொருத்தன்மாத்திரம் பிழைத்திருப்பேனோ? வம்மின் - (போர்க்கு) வருவீராக; வார் சிலை வாங்குக - நீண்ட வில்லை வளைப்பீராக,' என்று ஓதினான்-என்று (வீமனைநோக்கி வீகர்ணன்) சொன்னான்; 'எனைவரும் விளிந்தேகவும்' என்றது-பலர் வீமனால் இறந்ததனாலும், மற்றையோரும்இறப்ப ரென்ற துணிவினாலு மென்க. உம்கையில் என்பது முதலியன - தமையனைநோக்கித் தம்பி கூறிய உயர்வுப்பன்மை. (544) |