பக்கம் எண் :

332பாரதம்துரோண பருவம்

புறங்கொடுத்துத் தோற்றோடிய பகையரசர்களெல்லாரும், திருகி வந்து- திரும்பிவந்து,
ஆங்கு எதிர் ஆகி - அவ்விடத்தில் (அவர்கட்கு) எதிரிலே எதிரிலே பொருந்தி,
சூழ்ந்தார்-((எ - று.) பி-ம்: அடர்ந்து சூழ்ந்தார்.

     இதுமுதல் ஒன்பது கவிகள்-பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும்
விளச்சீர்களும், மற்றையவை மாச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள். (552)

156.-சாத்தகியும் பூரிசிரவசும் பொருதல்.

சாத்தகிதானும்பூரிசவாவும்வெஞ்சாபம்வாங்கிக்
கோத்தனர்பகழிசென்றுகுறுகினதேருந்தேருஞ்
சேர்த்தனர்மலைந்தகாலைச்சிலைதுணிவுண்டுதேர்விட்
டேத்தருந்தடக்கைகொட்டியிருவருமல்லினின்றார்.

     (இ-ள்.) (அப்பொழுது), சாத்தகிதான்உம் - சாத்தகியும், பூரிசவாஉம்-
பூரிச்ரவஸ்என்பவனும், வெம் சாபம் வாங்கி-கொடியவில்லை வளைத்து, பகழி
கோத்தனர்.அம்பு தொடுத்தார்கள்; (அச்சமயத்தில்), தேர்உம் தேர்உம் -
(அந்தஇரண்டுபேருடைய) தேர்களும், சென்று குறுகின - எதிர்த்துப்போய்
நெருங்கின; சேர்த்தனர்-(இவ்வாறு தேர்களை) நெருங்கச்செலுத்தி, மலைந்த
காலை -போர் செய்தபொழுது, இருவர்உம்-இரண்டுபேரும், சிலை துணிவுண்டு-
வில்துணிபட்டு, (பின்பு) தேர் விட்டு - தேரைவிட்டு (இறங்கி), ஏ தரும் தட கை
கொட்டி- (இதுவரையில்)  அம்பைத் தொடுத்த பெரிய (தங்கள்) கைகளைத்
தட்டிக்கொண்டு,மல்லில் நின்றார்-மற்போர்செய்தலில் முயன்றுநின்றார்கள்;
( எ - று.) - பி ம்: மல்லினேர்ந்தார்.                                (553)

157.-பூரிசிரவனைக் கொல்லும்படி கண்ணன் அருச்சுனனுக்குக் கூறுதல்.

மல்லினின்வென்றுவீழ்த்திமாயவன்றம்பிதன்னைக்
கொல்லுவான்முனைந்துமற்றைக்கோமகனடர்த்தனோக்கிக்
கல்லினின்மாரிகாத்தோன்கண்டுவில்விசயனோடுஞ்
சொல்லினன்பகைவன்றன்னைச்சுடர்முடிதுணித்தியென்றே.

     (இ-ள்.) மாயவன் தம்பிதன்னை-கண்ணபிரானுடைய தம்பியான சாத்தகியை
மற்றை கோமகன் - பகையரசனானபூரிசிரவன், மல்லினின் வென்று வீழ்த்தி-
மற்போரினாற்-சயித்துக் கீழேதள்ளி, கொல்லுவான் முனைந்து-(அவனைக்) கொல்ல
முயன்று, அடர்த்தல்-வருத்துதலை,  கல்லினில் மாரிகாத்தோன் - (கோவர்த்தன)
மலையைக் கொண்டு மழையைத் தடுத்தவனான கண்ணன், கண்டு-பார்த்து,
நோக்கிஆலோசித்து, வில் விசயனோடுஉம்-வில்லில்வல்ல அருச்சுனனுடனே,
பகைவன்தன்னை சுடர் முடி துணித்தி என்று சொல்லினன்-'பகைவனான
பூரிசிரவனைஒளியையுடைய தலையைத் துணித்திடுவாய்' என்று சொல்லியருளினான்;
(எ - று.) - இங்ஙனஞ் சொன்னது, சாத்தகியை உயிர்பிழைப்பிக்க வேறு
வகையில்லாமையாலென்க.                                        (554)