பக்கம் எண் :

334பாரதம்துரோண பருவம்

     (இ-ள்.) தன்னை வந்து அடைந்தோர்க்கு - வந்து தன்னைச்
சரணமடைந்தவர்கட்கு, உற்ற தளர்வு எலாம் ஒழிக்கும் - நேர்ந்த துன்பங்களை
யெல்லாம் நீக்கியருளுகிற, தாளான் - திருவடியை யுடையவனான கண்ணபிரான்,-
(துரியோதனனைநோக்கி),-'நென்னல் - நேற்று, அபிமன் தன்னை - அபிமந்யுவை,
நீர் - நீங்கள், நேர் அற - தடையில்லாமல், வென்ற - சயித்த, போர்உம் -
போரையும், முன்னம்ஏ - முதல் நாளிலேயே, சுவேதன் தன்னை - சுவேதனை,
வீடுமன் முடித்த - பீஷ்மன் கொன்ற, போர்உம் - போரையும், மன் அறம் முறை
தவாமல் மலைந்தனிர் - இராசதரும முறைமை தவறாமற்செய்தீர்கள்,' என்று-,
நக்கான் - சிரித்தான்; (எ -று.) நகுதல்- எள்ளல் பற்றியது. பி - ம். நேருற.
                                                            (557)

161.-அருச்சுனன் வீமனுடன் சாத்தகியுடனும் பகைவர்சேனையை
நெருங்குதல்.

பின்னரும்விசயனிற்பப்பேணலார்பின்னிட்டோட
மன்னரின்மலைந்தோர்தம்மைவாளியால்வானிலேற்றி
முன்னவனோடுமந்தமுகில்வண்ணனிளவலோடுந்
தன்னுரைவழுவாவண்ணந்தரியலர்படையைச்சார்ந்தான்.

     (இ-ள்.) பின்னர்உம் - பின்பும், விசயன் - அருச்சுனன் நிற்ப - (போரில்)
நிலைநிற்றலால், பேணலர் - பகைவர்கள், பின் இட்டுஓட -
புறங்கொடுத்துஓடிப்போக,- (அவ்வருச்சுனன்),- மன்னரில் மலைந்தோர்தம்மை
வாளியால் வானில் ஏற்றி - பகையரசர்களில் (புறங்கொடாது)
எதிர்த்துப்போர்செய்தவர்களை (த் தனது) அம்புகளினால் வீரசுவர்க்கத்திற்
செலுத்திக்கொண்டு, முன்னவனோடுஉம் - (தனது) முன்பிறந்தவனான
வீமனுடனும், அந்தமுகில் வண்ணன் இளவலோடுஉம் - காளமேகம்போலுந்
திருநிறமுடையனானகண்ணபிரானது திருத்தம்பியாகிய அச்சாத்தகியுடனும், தன்
உரை வழுவா வண்ணம்- தனது சபத வார்த்தை தவறாமல் நிறைவேறுதற்
பொருட்டு, தரியலர் படையைசார்ந்தான் - பகைவர்களது உட்சேனையை
நெருங்கினான்;    

     தன்னுரை வழுவாவண்ணம் - சயத்திரதனைக் கொல்லுதற் பொருட்டென்க.
இங்கே, 'தரியலர்படை' என்றது, பின்னணிச் சேனையை.                (558)

162. எதிரிகள் சயத்திரதனை நிலவறையுள் மறைத்துவைத்துப்
பாதுகாத்தல்.

அருக்கனோர்கணத்திலத்தமடையுமவ்வளவுங்காக்கிற்
செலுக்கிளர்விசயனின்றேதீயிடைவீழ்தறிண்ணம்
நெருக்குபுநின்மினென்றுநிலவறையதனிலந்த
மருக்கமழ்தொடையலானைவைத்தனர்மருவலாரே.

     (இ-ள்.) 'அருக்கன் - சூரியன், ஓர் கணத்தில் - ஒருக்ஷணப் பொழுதிலே
[மிகவிரைவிலே என்றபடி], அத்தம் அடையும் - அஸ்தகிரியை அடைவான்
[அஸ்தமிப்பான்]; அ அளவுஉம்-