பக்கம் எண் :

336பாரதம்துரோண பருவம்

164.- கண்ணன் தனது திருவாழியாற் சூரியனை மறைத்தல்.

பாராழி யவலமறப் பாண்டவர்த மிடர்தீரப் பார்த்தன் வாழப்
பேராழி யணைதுயிலும் பெருமிதமு முடன்மறந்து பிறந்த
                                        மாயோன்
ஓராழி யெழுபரித்தே ருடையானை மாயையினா லொழிக்கத்
                                        தன்கைக்
கூராழி பணித்தலுமக் களம்போலச் சிவந்தனவக்
                                   குடபாலெங்கும்.

     (இ-ள்.) ஆழி - கடல்சூழ்ந்த, பார் - பூமியினது, அவலம் -
(அதிபாரத்தாலாகிய) துன்பம், அற - நீங்குதற்பொருட்டும், பாண்டவர்தம் இடர்தீர -
பஞ்சபாண்டவரது துன்பம் தீர்தற் பொருட்டும், பார்த்தன் வாழ - அருச்சுனன்
அழியாது வாழ்தற் பொருட்டும், பேர் ஆழி அணை துயிலும் பெருமிதம்உம் உடன்
மறந்து பிறந்த - பெரிய திருப்பாற்கடலிலே ஆதிசேஷசயநத்திலே
யோகநித்திரைசெய்தருள்கிற பெருந்தகைமை முழுவதையும் ஒருசேர விரைவிலே
மறந்து (இங்குக் கண்ணனாகத்) திருவவதரித்த, மாயோன் - மாயையையுடையவனான
திருமால், ஓர் ஆழி எழு பரி தேர் உடையானை - ஒற்றைச்சக்கரத்தையும்
ஏழுகுதிரைகளையுங் கொண்ட தேரை யுடையவனான சூரியனை, மாயையினால்
ஒழிக்க - வஞ்சனையால் மறைக்க (க் கருதி), தன் கை கூர் ஆழி பணித்தலும் -
தனது திருக்கையிலேந்துதற்கு உரிய கூரிய சக்கரா யுதத்துக்குக்
கட்டளையிட்டவளவிலே, (அது சென்றுகரியதொரு வடிவு கொண்டு சூரிய
மண்டலத்தை மறைத்திட்டதனால்), அ குடபால் எங்கும் அ களம் போல
சிவந்தன -மேற்குத்திக்கிடங்களெல்லாம் (செந்நீர் நிறைந்த) அப்போர்க்களம்
போலச் செந்நிறமடைந்தன [இயல்பான சூரியாஸ்தமநகாலத்திற்போலச் செவ்வானம்
பெற்றன]; (எ-று.)

     துஷ்டநிக்ரக சிஷ்டபரிபாலநத்திற்காகவே அவதாரங் கொண்ட பேரருளான
னென்பது முன்னடிகளின் தேர்ந்த பொருள். அணையிலேதுயிலுதலும் பெருமிதமும்
எனவுமாம். பெருமிதம் - பரத்துவம். பி - ம்: அறிதுயிலும்.

     இதுமுதற் பத்தொன்பதுகவிகள் - பெரும்பாலும்முதல்நான்கு சீர்
காய்ச்சீர்களும், மற்றையிரண்டும் மாச்சீர்களுமாகிய அறுசீராசிரிய
விருத்தங்கள்.                                          
(561)

165.- கௌரவசேனையார் மகிழ்ச்சியோடு சயத்திரதனை
வெளிக்கொணர்தல்.

அயத்திரதமிடப்பசும்பொனாவதுபோ லருச்சுனனாரறிஞனாக
நயத்திரதமொழிக்கீதைநவின்றபிரான்மயக்கறியார்நாள்
                                    செய்வான்றன்
வயத்திரதமறைந்ததெனவலம்புரித்தர ரவன்சேனைமன்னர்யாருஞ்
செயத்திரதன்றனைக்கொண்டுசெருமுனையில்விசயனெதிர்
                                    சென்றுசேர்ந்தார்.

     (இ-ள்.) அயத்து - இரும்பிலே, இரதம் இட - (ரசவாதத்துக்கு உரிய மகா
மூலிகையினது) சாற்றைப் பிழிவதனால், பசும்