பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்337

பொன் ஆவதுபோல்-(அது) பசும்பொன்னாக மாறுவதுபோல, அருச்சுனன் ஆர்
அறிஞன் ஆக - (ஸாமாந்யஞானத்தோடு கூடியிருந்த) அருச்சுனன் (எளிதில்)
நிறைந்த தத்துவஞான முள்ளவனாம்படி, நயத்து இரதம் மொழி கீதை நவின்ற-
இனிமையான சுவையுள்ள சொற்களையுடைய கீதையை உபதேசித்தருளிய, பிரான்-
பெருமையையுடைய கண்ணனது, மயக்கு - மாயையை, அறியார் -
அறியாதவர்களாய்,-நாள் செய்வான் தன் இரதம் வயத்து மறைந்தது என -
தினத்தைச் செய்பவனான சூரியனது  தேர் இயல்பில் அஸ்தமித்திட்ட தெனக்
கருதி,-வலம்புரி தாரவன் சேனை மன்னர் யார்உம் - நஞ்சாவட்டைப்
பூமாலையையுடையவனான துரியோதனனது சேனையிலுள்ள அரசர்களெல்லாரும்,
செயத்திரதன் தனை கொண்டு செரு முனையில் விசயன் எதிர் சென்று சேர்ந்தார்-
சயத்திரதனை வெளிப்படுத்தி உடனழைத்துக்கொண்டு போர்க்களத்தில் அருச்சுன
னெதிரிற் போய்ச்சேர்ந்தார் (எ - று.)

     இரதம் - ரஸகுளிகையுமாம். அருச்சுனனைச் சீர்திருத்தித் தன்வழிப்படுத்தி
அவனைக்கொண்டு பகையழித்தலிற் கண்ணபிரானுக்கு உள்ள ஆதரமும்,
எப்படிப்பட்டதையும் எளிதில்மாற்றவல்ல அப்பெருமானது ஸர்வசக்தியும், எளிதில்
மெய்யுணர்வை இனிது புகட்டுகிற கீதையின் சிறப்புந் தோன்ற, '
அருச்சுனனாரறிஞனாக நயத்திரத மொழிக் கீதை நவின்ற பிரான்' என்றார்.

166.-கண்ணன் அருச்சுனைநோக்கிச் சயத்திரதனைக்
கொல்லச் செல்லுதல்.

எண்சிறந்தமகன் றலையைநிலத்திட்டான் றலைதுகளாகென்று
                                           நாடித்
தண்சமந்தபஞ்சகமென்றொருமடுவி லிவன்றாதைதருப்
                                     பிக்கின்றான்
ஒண்சரங்கொடிவன்றலைமற்றவன்கரத்திற்போய்விழநீயுடற்று
                                         கென்று
திண்சயங்கொள்விசயனுக்குச்சிந்துபதிதனைக்காட்டித்திருமால்
                                      சொன்னான்.

     (இ-ள்.)  'எண் சிறந்த மகன் தலையை-வலிமைமிக்க (எனது) புத்திரனான
சயத்திரதனது தலையை, நிலத்து இட்டான் - தரையிலே த்ள்ளியவனது, தலை-,
துகள் ஆக - பொடியாய்விடக்கடவது,' என்று நாடி-என்று குறித்து
வரம்வேண்டிப்பெற்று,(அதன் பின் இப்பொழுது), இவன் தாதை - இச்சயத்திரதனது
தந்தையான வ்ருத்தக்ஷத்ரன், தண் சமந்த பஞ்சகம் என்ற ஒரு மடுவில் - குளிர்ந்த
ஸ்யமந்தபஞ்சக மென்ற ஒப்பற்ற மடுவிலே, தருப்பிக்கின்றான் - (சந்தியாவந்தனந்
தொடங்கி) அருக்கியசல மெடுத்து விடுகிறான்; அவன் கரத்தில் - அத்தந்தையின்
கையிலே, இவன் தலை போய் விழ - இம்மைந்தனது தலை போய்விழும்படி, ஓள்
சரம் கொண்டு - ஒளிபொருந்திய (சிறந்த) பாணங்களினால்,  நீ உடற்றுக-நீ
பொருதுஅழிப்பாயாக,' என்று-, திண் சயம் கொள் விசயனுக்கு-வலிய
வெற்றியைக்கொள்ளும்அருச்சுனனுக்கு, திருமால்- கண்ணபிரான், சிந்துபதிதனை
காட்டி - சிந்துநாட்டரசனான அச் சைந்தவனைச் சுட்டிக்காண்பித்து, சொன்னான்-;
(எ - று.)