பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்341

170.-இதுவும், அடுத்தகவியும்-சேனையிலுள்ளார்வார்த்தை.

விரியோதநெடுங்கடலில்வீழ்வதன்முன்விரைந்துரகன்
                            விழுங்கினானோ
வெரியோடிமகனிறக்குமெனமகவான் மறைக்க
                          முகிலேவினானோ
கரியோன்கைத்திகிரியினான்மறைத்தனனோவிருள்
                      பரந்தகணக்கீதென்னோ
பெரியோர்கடிருவுள்ளம்பேதித்தா லெப்பொருளும்
                              பேதியாதோ.

     (இ-ள்.) விரி-பரவுகின்ற, ஓதம் - அலைகளையுடைய, நெடுங்கடலில்-பெரிய
கடலிலே, வீழ்வதன்முன்-வீழுந்து அஸ்தமிப்பதன் முன்னே, (சூரியனை), உரகன் -
பாம்புவடிவமான ராகு அல்லது கேது, விரைந்துவிழுங்கினான் ஓ-
விரைவாகவந்துவிழுங்கிப் பின்பு உமிழ்ந்தனனோ? (அன்றி), மகவான் - இந்திரன்,
மகன் எரி ஓடி இறக்கும் என்-தன்பிள்ளையான அருச்சுனன் அக்கினிப்பிரவேசஞ்
செய்து இறப்பனே யென்பதைப் பற்றி, (அங்ஙனம் இறவாமைப் பொருட்டு) மறைக்க
முகில் ஏவினான்ஓ-(சூரியனை) மறைத்தற்கு மேகங்களைச் செலுத்தினானோ?
(அல்லது), கரியோன்-கிருஷ்ணன்,  கை திகிரியினால் மறைத்தனன்ஓ-(தன்)
கைவசப்பட்ட சக்கரத்தைக்கொண்டு (சூரியனை) மறைத்திட்டானோ? இருள் பரந்த
கணக்கு ஈதுஎன்ஓ - (சூரியன் உண்மையாக அஸ்தமிப்பதற்குமுன்னமே இடையில்)
இருள்பரவியவிதம் யாதுகாரணத்தா லானதோ? பெரியோர்கள் திரு உள்ளம்
பேதித்தால் எ பொருள்உம் பேதியாதுஓ-பெரியோர்களுடைய சிறந்த மனம்
மாறினால் எந்தப்பொருளும் மாறுபடாதோ? (எ - று.)

     ஈற்றடி - கண்ணன்முதலான மகான்களுடைய மனம் துரியோதனன் செய்த
கொடுமையால் மாறுபட்டிருத்தலாற் பகலும் இரவாக மாறியதுபோலுமென்ற
சிறப்புப்பொருளைப் பொதுப்பொருளால் விளக்கியவாறு:
வேற்றுப்பொருள்வைப்பணி.                               (567)

171.உந்திரதத்தனிவலவனுபாயத்தால்வருணன்மகனுயிரைமாய்த்தான்
மந்திரமொன்றறிவித்துவயப்புயமாயிரத்தோனைமடிவித்திட்டான்
தந்திரமெய்ம்மயங்கிவிழத்தன்சங்கமுழக்கினான்றபனன்மாய
விந்திரசாலமுஞ்செய்தானிந்திரன்சேய்வெல்லாமல்யார்
                                      வெல்வாரே.

     (இ-ள்) இரதம் உந்து தனி வலவன் - (அருச்சுனனது) தேரைச் செலுத்துகின்ற
ஓப்பற்ற சாரதியான கண்ணன், உபாயத்தால்-ஒரு தந்திரத்தால், வருணன் மகன்
உயிரை மாய்த்தான்-  வருணனதுகுமாரனான சுதாயுவின் உயிரைப்போக்கினான்;
(பின்பு) மந்திரம் ஒன்று அறிவித்து-ஒருமந்திரத்தை (அருச்சுனனுக்கு) உபதேசித்து,
வய புயம் ஆயிரத்தோனை மடிவித்திட்டான்- (அதனால் அருச்சுனன்) வலிய
ஆயிரவாகுவைக் கொல்லும்படி செய்தான்; (அதன்பிறகு), தந்திரம்-பகைவர்சேனை,
மெய் மயங்கிவிழ-உடம்பு (தெரியாமல்) மயக்கமடைந்து விழும்படி, தன் சங்கம்
முழக்கினான்-தனது பாஞ்சசன்னியத்தை ஒலிப்பித்தான்; (இவையல்லாமல்), தபனன்
மாய இந்திரசாலம்உம் செய்தான் - சூரியன் மறையும்படிபெருமாயையையுஞ்
செய்தான்; (ஆதலால்), இந்திரன் சேய் வெல்லாமல் யார்வெல்வார்-
(அக்கண்ணபிரானது உதவி