பக்கம் எண் :

342பாரதம்துரோண பருவம்

யைப் பலவாற்றலும் கொண்ட) அருச்சுனன் வெற்றிகொள்ளாமல் (வேறு) யார்
(போரில்) வெற்றி கொள்வர்? (எ - று.)-31, 32, 35, 36, 41, 88, 164-இக்கவிகள்,
இங்குநோக்கத்தக்கன.                                        (568)

172.-இதுவும், அடுத்த கவியும்- ஒருதொடர்: துரியோதனன் சிலகூறிச்
சேனையோடுஞ் சென்ற போர்தொடங்குதலைக் குறிக்கும்.

முடையெடுத்தநவநீதந்தொட்டுண்டுங் கட்டுண்டு முதனாணாகக்
குடையெடுத்துமழைதடுத்தும்வஞ்சனைக்கோர்கொள்கலமாங்
                                       கொடியபாவி
படையெடுத்துவினைசெய்யேனெனப்புகன்றமொழிதப்பிப்
                                     பகதை்தபோரி
னிடையெடுத்தநேமியினால்வெயின்மறைத்தானின்னமிவனென்
                                       செய்யானே.

     (இ-ள்.) முடை எடுத்த - முடைநாற்றம் பொருந்திய, நவநீதம்-வெண்ணெயை,
தொட்டு உண்டுஉம்- கையாலெடுத்துத் தின்றும், கட்டுண்டுஉம் - (அதற்காக
ஆய்ச்சியராற்) கட்டப்பட்டும், முதல் நாள் - இளம்பிராயத்திலேயே, நாகம் குடை
எடுத்து மழை தடுத்துஉம் - (கோவர்த்தந) மலையைக் குடையாக  எடுத்துப் பிடித்து
அதனால் (இந்திரன்பெய்வித்த) மழையைத் தடுத்தும், வஞ்சனைக்கு ஓர் கொள்கலம்
ஆம் - வஞ்சனைக்கட்கு ஓர் இருப்பிடமாகவுள்ள, கொடியபாவி-கொடும்பாவியான
கண்ணன், படை எடுத்து வினை செய்யேன் என புகன்ற மொழி தப்பி - '(போரில்)
ஆயுதமேந்தித் தொழில்செய்யேன்' என்று (என்னுடன்)சொன்ன சபதவார்த்தை தவறி,
பகைத்த போரினிடை எடுத்த நேமியினால் வெயில் மறைத்தான் -
(ஒருவரோடொருவர்) பகைத்துச்செய்கிற போரின்நடுவிலே தான் ஏந்திய
சக்கராயுதத்தைக்கொண்டு சூரியனை மறைத்திட்டான்; இன்னம் இவன் என்
செய்யான்-இன்னமும் இந்தக்கண்ணன் எந்த அநீதிதான் செய்ய மாட்டான்?
(எ-று.)-பி-ம்:முன்னாள்-என்செய்வானோ.

     நவநீதம் என்ற வடசொல்லுக்கு-புதிய தயிரினின்று கடைந்தெடுக்கப்பட்ட
தென்று காரணப்பொருள் கூறுவர். கொள்கலம்- பாத்திரம்;              (569)

173.ஒற்றைநெடுந்திகிரியினன்மறைவதன்மு னைவரையுமுடனே
                                       மோதிச்.
செற்றிடுதல்யான்படுதறிண்ணமெனச்சேனையொடுஞ்சென்று
                                     சூழ்ந்தான்,
கொற்றவனதுரைகேட்டுக்கொடிநெடுந்தேர் நரபாலர்சபதங்கூறி,
மற்றவரோடொருகணத்தில்வம்மினெனத்தனித்தனிபோய்
                                  மலைதலுற்றார்.

     (இ-ள்.) 'ஒற்றை நெடுந் திகிரியினன் - பெரிய ஒற்றைத் தேராழியை
யுடையவனான சூரியன், மறைவதன் முன் - (இனி உண்மையாக)
அஸ்தமிப்பதன்முன்னே, ஐவரைஉம் உடனே  மோதி செற்றிடுதல் -
பாண்டவரைந்துபேரையும் ஒருசேரத்தாக்கி (யான்) கொன்றிடுதலாவது, யான் படுதல்
- (அங்ஙனம் அது கூடாவிட்டால் அவர்களால்) யான் இறத்தலாவது, திண்ணம் -
(இரண்டில் ஒன்று) நிச்சயம்,' என - என்று வீரவாதஞ்செய்து கொண்டு,
(துரியோதனன்), சேனையொடுஉம் சென்று சூழ்ந்