சமகாலத்திலே இருவரும் இறக்கும்படி அழித்தானென்ற கருத்துமாம். உடன்று சீறி- ஒருபொருட்பன்மொழி. (573) 177.-கடோற்கசன்மகனை அசுவத்தாமன் கொல்லுதல். இகலிடிம்பன்மருமகனுந்திருமகனுங்குருமகனோடெதிர்ந்துபல்கா லகலிடஞ்செஞ்சேறாகவமரருடனசுரரைப்போலமர்செய்காலைப் பகலுடன்காரிருள்பகைத்தாற்பலிக்குமோவஞ்சனபன்மனையப் போதிற் புகலிடம்பொன்னுலகாக்கிப்போக்கினானொருகணையாற் புரவித்தாமா. |
(இ-ள்.) இகல்-வலிமையையுடைய, இடிம்பன் மருமகன்உம்-இடிம்பனது உடன்பிறந்தவளின் புத்திரனான கடோற்கசனும், திரு மகன்உம்-(அக்கடோற்கசனது) சிறந்த புத்திரனான அஞ்சநபத்மனும், குரு மகனோடு-துரோணாசாரியனது புத்திரனான அகவத்தாமனுடனே, பல் கால் எதிர்ந்து - பலமுறை எதிரிட்டு, அகல் இடம் செம் சேறு ஆக-பரந்த போர்க்களத்தினிடம் (இரத்தப்பெருக்கினாற்) சிவந்தசேறாகும்படி, அமரருடன் அசுரரை போல் அமர் செய் காலை-தேவர்களுடன் அசுரர்கள் (போர்செய்தல்) போலப் போர் செய்தபொழுது,-பகலுடன் கார் இருள் பகைத்தால் பலிக்கும்ஓ-சூரியனுடனே கரிய இருள் பகைமைகொண்டாற் பயன்படுமோ? (பயன்படாது); (அவ்வாறே), அ போதில் - அப்பொழுது, புரவித்தாமா- அசுவத்தாமன், (தன்னோடு மாறுபட்டு எதிர்த்த), அஞ்சனபன்மனை-, ஒருகணையால்-ஓரம்பினால், புகல் இடம் பொன் உலகு ஆக்கி போக்கினான்; - (அவன்) செல்லுதற்கு உரிய இடம் வீரசுவர்க்கமாம்படி (எ - று.) இடிம்பன் மருமகன் இடிம்பனது உடன்பிறந்தவளாகிய இடிம்பியினிடம் வீமசேனனுக்குப் பிறந்த கடோற்கசன், பூதேவனான அசுவத்தாமனுக்குத் தேவரும், அரக்கரான கடோற்கசனுக்கும் அவன்மகனுக்கும் அசுரரும் உவமைகூறப்பட்டனர். பின்னிரண்டடியில்-எடுத்துக்காட்டுவமையணி. 'மருமகனுந்திருமகனுங் குருமகனோடு'-பிராசம். (574) 178.-கடோற்கசனை அசுவத்தாமன் அடித்துவீழ்த்துதல். மகன்பட்டசினங்கதுவவரையுறழ்தோட்கடோற்கசன்மாமலைகள்வீசி யகன்பட்டநுதல்வேழமன்னான்மேலெறிந்தெறித்திட்டார்த்தகாலைக் குகன்பட்டந்தனக்குரியகோமுனிவன்மாமைந்தன்வீமன்கையிற் பகன்பட்டபாடெல்லாம்படுத்தியொருகதாயுதத்தாற்படியில்வீழ்த்தான். |
(இ-ள்.) (பின்பு), வரை உறழ் தோள் கடோற்கசன் - மலையையொத்த தோள்களையுடைய கடோற்கசன், மகன் பட்ட சினம் கதுவ - (தனது) புத்திரன் கொல்லப்பட்டதனா லாகிய கோபம் மிகமூள, அகல் பட்டம் நுதல் வேழம் அன்னான்மேல்-அகன்ற பட்டமணிந்த நெற்றியையுடைய யானைபோல வலியவனானஅசுவத்தாமன்மேல், மா மலைகள் வீசி எறிந்து எறிந்திட்டு-பெரிய மலைகளையெடுத்து வேகமாக மிகுதியாய்எறிந்து, ஆர்த்த காலை - ஆராவரித்தபொழுது,-குகன் பட்டந்தனக்கு |