பொருபகழிக்கிரையாகப்போக்குகின்றே னெனமெழிவைபோர்வல்லோர்க ளுருவழியத்தம்வலிமையுரைப்பரோ வெனவுரைத்தானுரையான்மிக்கோன். | (இ-ள்.) நிருபனுடன் - துரியோதனராசனுடனே, இரவி மகன் - சூரியகுமாரனான கர்ணன், புகன்ற - சொன்ன, உரை - அந்த வார்த்தையை, கேட்டு-, அருகே நின்ற - சமீபத்திலே நின்ற, உரையால் மிக்கோன் - புகழினாற் சிறந்தவனான, வில் கை கிருபன் - வில்லையேந்திய கையையுடைய கிருபாசாரியன், மிக நகைத்து - மிகுதியாகச் சிரித்து, (கர்ணனை நோக்கி), 'எதிரே கிட்டினால் முதுகு இடுவை - (அருச்சுனன்) எதிரிலே கிட்டினாற் புறங்கொடுப்பாய்; (அவன்கிட்டாதபொழுது), கிருடீதன்னை பொரு பகழிக்கு இரை ஆக போக்குகின்றேன் என மொழிவை-அருச்சுனனைப் போர் செய்கிற அம்புக்கு உணவாம்படி ஒழிக்கின்றேனென்று வீரவாதங்கூறுவாய்; போர் வல்லோர்கள் உரு அழிய தம் வலிமை உரைப்பர்ஓ - போர்செய்தலில் வல்லமையுள்ளவர் (தமது) பெருமைகெடத் தம்வலிமையைத் தாமே எடுத்துச் சொல்லுவார்களோ?' என - என்று, உரைத்தான்-; (எ-று.) இப்பாட்டின் இடையடிகளை இச்சருக்கத்து 59 - ஆம் பாட்டின் முதலிரண்டடிகளோடு ஒப்பிடுக. தற்புகழ்தல் தனது பெருமைக்குக் குறைவாதலால், 'உருவழியத்தம்வலிமையுரைப்பரோ' என்றான். (577) 181.-கர்ணன் அருச்சுனனை யெதிர்த்துத் தோற்றல். அம்மொழிகன்செவிசுடப்போயக்கணத்தேவிசயனுடனங்கராசன் வெம்முனைசெய்போரழிந்துதேரழிந்துவென்னிட்டான்மீண்டுமீண்டும் அம்முறையிற்பற்குணனாலாவியொழிந்தவரரசரனேககோடி யெம்மொழிகொண்டுரைப்பரிதாலுரைக்கவெமக்காயிரநாவில்லைமாதோ. |
(இ-ள்.) அ மொழி-கிருபாசாரியன் கூறிய அந்தவார்த்தை, தன் செவி சுட - தனது காதுகளை மிகவும் வருத்தியதனால், அ கணததுஏ-அந்த க்ஷணத்திலேயே, அங்க ராசன் - அங்கதேசத்தரசனான கர்ணன்,-விசயனுடன்-அருச்சுனனுடனே, போய் - (போருக்குச்) சென்று, (விரைவிலே அருச்சுனனால்), வெம் முனைசெய் போர் அழிந்து-கொடிய போர்க்களத்திற் செய்கிற (தனது) போர்த்திறம் அழிபட்டு, தேர் அழிந்து - தேர் அழிபட்டு, மீண்டு உம் மீண்டுஉம்-பலமுறை, வென் இட்டான் - பறங்கொடுத்தான்; அ முறையில் - அச்சமயத்திலே, பற்குனனால் ஆவி ஒழிந்தவர் அரசர்-அருச்சுனனால் உயிரொழிந்த அரசர்கள், அனேக கோடி - பலகோடிக்கணக்கினராவர்; (இப்படிப்பட்ட அருச்சுனனது போர்த்திறம்), எம் மொழிகொண்டு உரைப்பு அரிது-எமது வாக்கினாற் சொல்லுதற்கு அரியது; (ஏனெனில்,-) உரைக்க எமக்கு ஆயிரம் நாஇல்லை - பேசுதற்கு எமக்கு ஆயிரம்நாக்கு இல்லை; (எ-று.)-ஆல், மாது ஓ-ஈற்றசைகள். ஆயிரம் நாக்கு இருந்தாலன்றி அது சொல்லமுடியா தென்பதாம். பின்னிரண் |