பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்351

சிறந்த அந்தணனான துரோணாசாரியனும், பழைய திட்டத்துய்மனொடு துன்னினான்-
(தனக்குப்) பழம்பகையாகத் தோன்றியுள்ளவனான திட்டத்துய்மனுடன் (போர்க்கு)
நெருங்கினான்; பொருது மாய்வன் என-போர்செய்து இறப்பேனென்று துணிந்து,
வீமனோடு-,உயர் புயங்க கேது-உயர்ந்த பாம்புக் கொடியையுடையவனான
துரியோதனன், மிகு போர் செய்தான்-மிக்க போரைச் செய்தான்; (எ - று.)-
பொருட்பின்வருநிலையணி. பி-ம்: விசையன்மேல் விசையகன்னன்.     (583)

187.சல்லியன்பெருகுசல்லியத்தொடுசதானிகன்றனொடுபோர்
                                   செய்தான்
வல்லியம்புனைகடோற்கசன்றனொடுபோர்செய்தான்முனிவன்
                                  மைந்தனும்
எல்லியங்குசுடரினும்மணிச்சுடர்களெழுமடங்கொளி
                                 யெறிக்கவும்
பல்லியம்பலமுழங்கவுந்தரணிபாலரிப்படிபகைக்கவே.

இதுவும், அடுத்த கவியும் - குளகம்.

     (இ-ள்.) சல்லியன்-,பெருகு சல்லியத்தொடு-மிக்க அம்புகளினால்,
சதானிகன்தனொடு போர் செய்தான் - சதாநீகனுடன் போர்செய்தான்; வல்லியம்
புனை கடோற்கசன் தனொடு - புலியையொத்த கடோற்கசனுடனே, முனிவன்
மைந்தன்உம்-துரோணன்மகனான அசுவத்தாமனும், போர்செய்தான்-;எல் இயங்கு
சுடரின்உம்-பகலிலே பொருந்திவிளங்குகிற சூரியனது ஒளியைக் காட்டிலும், எழு
மடங்கு-ஏழுபங்கு அதிகமாக, மணி சுடர்கள் - அழகிய விளக்குகள், ஒளி
எறிக்கஉம்-ஒளியை வீசவும், பல் இயல் பல முழங்கஉம்-பலவகைப்பட்ட
வாத்தியங்கள் பலவும் மிக ஒலிக்கவும், தரணி பாலர்-அரசர்கள், இப்படி பகைக்க-
இங்ஙனம் மாறுபட்டு எதிர்க்க,-(எ - று.)-அருச்சுனன் கர்ணனைப் பிளந்தா
னென்றுஅடுத்த கவியோடு முடியும்.

     ஸதாநீக னென்ற பெயர் - நூறுசேனையையுடையா னென்று பொருள்படும்;
இவன், மத்ஸயதேசத்தரசனான விராடனது தம்பி: மகனென்பாருமுளர்.
ஒன்றன்கூட்டமும் பலவினீட்டமும் பற்றி, 'பல்லியம்பல' என்று இரண்டுபன்மை
கூறினார். சல்லியத்தொடு, மூன்றனுருபு-கருவிப்பொருளது.              (584)

188.-அருச்சுனன் கர்ணனை வெல்லுதல்.

எற்றருந்தபனனேகினானினியெனக்குவாசிகொடிநீடுதேர்
முற்றருங்கனலினொளியெழுந்ததெனமுரணழிந்திடமொழிந்துபோர்
விற்றருங்கணைகளால்விழப்பொருதுவெயிலவன்சுதனைமீளவும்
பிற்றரும்படிபிளந்தபினன்றனுசர்பின்னிடப்பொருதபெற்றியான்.

     (இ-ள்.) தனுசர் பின் இட பொருத பெற்றியான் - (நிவாதகவசர் காலகேயர்
என்னும்) அசுரர்கள் பிற்படும்படி (முன்பு) போர் செய்த பெருமையையுடையவனான
அருச்சுனன்,-(கர்ணனைப்பார்த்து), 'எல்தரும் தபனன் ஏகினான் -(உனது
தந்தையான) ஒளியைவெளிவீசுகிற சூரியனோ போய்விட்டான்:  இனி -
இப்பொழுது, எனக்கு வாசி கொடி நீடு தேர் முன் தரும் கனலின்